search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ponds"

    • வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழையின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    இதன் காரணமாக நொய்ய லாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பேரூர் படித்துறையை மூழ்கடித்தபடியும், அங்குள்ள தரைப்பாலத்தை தொட்டபடியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கோவை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இதில் நொய்யல் ஆற்றின் மூலம் 25 குளங்கள் தண்ணீரை பெற்று வருகின்றன.

    தற்போது பெய்து வரும் மழையால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக நொய்யல் ஆற்றின் வழியோரம் உள்ள உக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், குறிச்சிக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதில் 23 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதிலும் உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன்குளம், செல்வசிந்தா மணிகுளம் முழுவதும் நிரம்பி விட்டது. அதில் இருந்து உபரி நீர் கால்வா ய்களில் வழிந்தோடியது.

    இதுதவிர சொட்டை யாண்டி குட்டை குளம் 70 சதவீதமும், குறிச்சிக்குளம் 40 சதவீதமும், பேரூர் பெரியகுளம், 15 சதவீதமும், நரசாம்பதி குளம் 90 சதவீதமும் நிரம்பின.

    இதே அளவுக்கு வரும் நாட்களிலும் மழை தொடர்ந்தால் அனைத்து குளங்களும் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கனமழையால் கணுவாய்-பன்னிமடையில் உள்ள தாளியூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் சென்றது.

    இப்பகுதியில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. தடுப்பணை யில் இருந்து சின்னவே டம்பட்டி ஏரிக்கு மழைநீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

    குளங்களையொட்டியும், தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்ல மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறும்போது, கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் படித்துறையை ஒட்டியவாறு மழைநீர் சென்றது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தஅளவுக்கு பெய்யவில்லை. தற்போ தைய வடகிழக்கு பருவமழை காலத்தில் நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

    தொடர் மழையால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வருவது விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது.
    • நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகிறது. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் தாமதித்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க திருமூர்த்தி அணையில் இருந்து கிராமப்புற குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாசன காலம் நீட்டிக்கப்பட்ட போது ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பாசன நிலங்களுக்கோ கூடுதல் திறப்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. குளங்களையும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்காலிக தீர்வாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். குளங்களில் தண்ணீரை தேக்கினால், பல மாதங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். முதலாம் மண்டல பாசனத்துக்கு போதிய இடைவெளி இருப்பதால், ஆயக்கட்டு பகுதி மட்டுமல்லாது, பிற பகுதிகளிலுள்ள குளங்களுக்கும் பாசன நீரை திருப்பி விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    • விவசாயிகள் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார். இதில் வேளாண் இணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயி களிடையே கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    நடப்பு ஆண்டில் மழை குறைவு

    நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 37.35 சதவீதம் கூடுதலாகும். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் முடிய 270.90 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 17.65 சதவிகிதம் குறைவாகும். கடந்த 5 ஆண்டு சராசரி மழையுடன் ஒப்பிடும் போது 41.12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 பருவக்காலங்களில் ஏற்பட்ட மழை குறைவு தொடர்பாகவும், அதனால் ஏற்பட்ட பயிர் சாகுபடி பரப்பு குறைவு, பயிர் பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், அணைகளின் நீர் இருப்பு குறைவு காரணமாக விவசாய தேவைக்கு போதுமான நீர் திறக்க இயலாதது குறித்தும் அரசுக்கு விரிவான அறிக்கை மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது வேளாண்மை உழவர் நலத்துறையின் பரிசீலனையில் உள்ளது. மேலும், வன்னிக்கோனேந்தல் பகுதி விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாகவும் அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன்கார் பருவத்தில் 870 ஹெக்டேர் பரப்பில் மற்றும் கார் பருவத்தில் 3131 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடியும், 259 ஹெக்டேர் பரப்பில் சோளம், கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 1620 ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டு சர்வேதச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும். மேலும், நடப்பு ஆண்டில் மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1825 ஹெக்டேர் பரப்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலங்களின் மண் வளத்தை பெருக்கிட குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள 251 குளங்களும், இரண்டாவதாக 368 குளங்களும் மொத்தம் 619 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    புதிதாக 73 குளங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் கோடைமேலழகியான் கால்வாய் 7.50 கிலோ மீட்டர் வரை அடையக்கருங்குளம் கிராமம் மற்றும் அம்பா சமுத்திரம் பகுதிகளிலும், நதியுண்ணி கால்வாய், ஆலடியூர் கிராமம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதி களிலும், கன்னடியன் கால்வாய் திம்மராஜபுரம், கல்லிடைகுறிச்சி, மற்றும் வெள்ளாங்குளி பகுதிகளிலும், கோடகன் கால்வாய் கொண்டாநகரம், பேட்டை ரூரல், பேட்டை கிராமப் பகுதிகளிலும், பாளையங்கால் கால்வாய் புத்தனேரி, சீதப்பனேரி, மற்றும் பாளை கிராமப் பகுதிகளிலும், பெருங்கால் கால்வாய் மணிமுத்தாறு கிராமப் பகுதி களிலும் துார்வாரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
    • பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணொளி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    கடலூர்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குப்படி தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் மழைநீரின் சேகரிப்பு அவசியம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    மழைநீர் சேகரிப்பு குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணொளி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து மழைநீரை சேகரிப்பது, கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள் மற்றும் பழைமை வாய்ந்த நீராதார கட்டமைப்புகளை தூர்வாரி மழைநீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தலாம் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அருளானந்தன் , உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், துணை நிலநீர் வல்லுநர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் விருதுக்கு கலாச்சார பிரிவில் அய்யன்குளம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட விருதுக்கு கலாசார பிரிவில் அய்யன்குளம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

    குடியரசு தலைவரால் செப்டம்பா் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் டெல்லியில் விருது வழங்கப்பட உள்ளது.

    எனவே, இக்குளத்தை பொதுமக்கள், அசுத்தம் செய்யாமல், சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், 14 குளங்கள் ரூ. 26.15 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா் சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    இருக்கைகள் உள்ளிட்ட சில நிலுவை பணிகளும் விரை வில் நிறைவேற்றப்பட்டு 2 மாதங்களில் திறக்கப்படும்.

    தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே யூனியன் கிளப் பின்புறமுள்ள இடத்தில் குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்து மிடம் அமைக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளை பிள்ளையாா் கோயில் அருகே தற்காலிகமாகச் செயல்படும் மீன் சந்தை அருகிலுள்ள இடத்துக்கு மாற்றப்பட வுள்ளது.

    இதற்குத் தேவையான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

    தற்போது மீன் சந்தை உள்ள இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

    மாநகரில் தாா் சாலை அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    இதில், புதை சாக்கடை திட்டத்துக்குப் பிறகு போடப்படாமல் இருந்த குறுக்கு சாலைகள், குறுக்கு சந்துகளிலும் தாா் சாலை அமைக்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத பணிகளும் 2024, மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

    அனைத்து சாலைகளிலும் புதிதாக எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்ப டவுள்ளன.

    ராஜ வீதிகளில் புதை மின் தடங்கள் அமைக்கப்பட்டு, சாலையை அகலப்படுத்தி தாா் சாலை போடப்படும்.

    மேலும், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்படும்.

    மாநகரில் 29 இடங்களில் மழை நீா் வடிகால் வசதி செய்யப்படுகிறது.

    மாநகரில் பயன்பாட்டில் இல்லாமல் மிக மோசமான நிலையிலுள்ள 44 பூங்காக்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, புதிதாக விளையாட்டு உபகர ணங்கள் அமைக்கப்படவுள்ளன.

    மேலும், இப்பூங்காக்கள் தனியாா் பராமரிப்பில் விடப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்

    • மழை காலங்களில் அணைகளில் தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஆரம்பத்தில் ஓரளவு பெய்த மழையின் காரணமாக அணையின் பாபநாசம் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.

    நெல்லை:

    வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மேல் பொதிகை மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    விவசாயம் பாதிப்பு

    இந்த நதியின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 86 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. மழை காலங்களில் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் அணை களில் தேங்கி வைக்கப்பட்டு, விவ சாயத்துக்கு பயன்படு த்தப்பட்டு வருகிறது.

    பாபநாசம் அணையில் இருந்து ஒவ்வெரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாயத்து க்காக தண்ணீர் திறந்து விடப்படும். தொடர்ந்து 120 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. ஆரம்பத்தில் ஓரளவு பெய்த மழையின் காரணமாக அணையின் பாபநாசம் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதையடுத்து குறிப்பிட்ட சில கால்வாய்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததால் அந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    குளங்கள் வறண்டன

    அதேபோல் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நெல்லை மாவட்டத்தில் கோடகன் கால்வாய், நதியுன்னி கால்வாய் உள்ளி ட்ட பல்வேறு கால்வாய்கள் வழியாக மாவட்டத்தில் உள்ளங்களுக்கு செல்லும். அணையில் நீர் குறைவால் மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டது. அவை வெடிப்பு விழுந்து காணப்படுகிறது.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் நயினார் குளத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு சுத்தமல்லி அணைக்கு வந்து அங்கு இருந்து தனி கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. மிகவும் பழமையான இந்த குளம் 15 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 12 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த குளம் தண்ணீர் தேங்கி, கடல் போல் கட்சி யளிக்கும். பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும்.

    இந்த குளம் மூலம் 370 ஏக்கர் பாச னம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை கைகொடுக்காததால் குளம் நிரம்பவில்லை. நயினார் குளம் பாசனமும் பொய்த்து விட்டது. தற்போது குளம் வறண்டு காணப்படுகிறது. ஒரு ஓரத்தில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றன. மற்ற இடங்கள் வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் இல்லாததால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

    இதேபோல் மானூர் பெரியகுளம் வடக்கு விஜயநாராயணம் குளம் ஆகிய பெரிய குளங்களும் வறண்டு காணப்படுகிறது. மானுர் பெரியகுளம் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அப்படிப்பட்ட குளங்கள் இந்த ஆண்டு குறைவான நீர்வரத்தை மட்டுமே கண்டு வறண்டு போய் உள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

    • காட்டுக்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
    • வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. அங்கு கரடி, சிறுத்தை, மான் உள்பட பல்வேறு விலங்குள் வாழ்கின்றன.

    நீலகிரியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. எனவே காட்டில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன.

    எனவே காட்டுக்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அப்போது அவை குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று அங்கு உள்ள விளை நிலங்களை நாசப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றன.

    இந்த நிலையில்கூடலூா் வனச்சரகத்தில் குடிநீா் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்காக 2022-23ம் ஆண்டு நபாா்டு திட்டத்தின் கீழ், வன விலங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தடுப்பணைகள் மற்றும் கசிவுநீா் குட்டைகள் ஆகியவற்றை அமைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் யானை, புலி போன்ற வன விலங்குகளின் நீா்த்தேவைகளை பூா்த்தி செய்ய முடியும். மேலும் காட்டு விலங்குள் ஊருக்குள் வருவதும் கட்டுப்படுத்தபடும்என்று வனத்துறையினா் தெரிவித்து உள்ளனா்.

    • புது ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.
    • தஞ்சையில் அழகிகுளம் உள்பட 10 குளங்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் பல பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டன.

    அந்த வகையில் தஞ்சை கீழவாசல் கவாஸ்காரத் தெருவில் உள்ள அழகி குளத்தை சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள கரைகளை சீரமைத்து, சுற்றுச்சுவர், பேவர் பிளாக் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.

    இதனை கடந்த மாதம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் காட்சியளித்த அழகி குளத்தில் மேயர் சண் .ராமநாதனின் துரித நடவடிக்கையால் புது ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.

    இதன் மூலம் அழகி குளத்தில் தண்ணீர் நிரம்பி புதுப்பொ லிவுடன் காட்சியளிக்கும்.

    இதனை தொடர்ந்து இன்று அழகிகுளத்தை மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவதை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தண்ணீரில் பூக்கள் தூவி வரவேற்றார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சையில் அழகிகுளம் உள்பட 10 குளங்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் புதுப்பொ லிவுடன் காட்சியளிக்கிறது.

    நடை பாதை உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.

    அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி உள்ளது.

    இதனால் தண்ணீர் நிரம்பி அழகி குளம் காட்சியளிக்கும்.

    இது தவிர தஞ்சையில் மேலும் 35 குளங்கள் புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்ப ட்டு வருகிறது. அந்தக் குளங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரி பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர்கள் செந்தில்குமாரி , லெனின், தி.மு.க. பகுதி செயலாளர் கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட அமைப்பாளர் ராணி கண்ணன், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா வெங்கட்ராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பி புது பொலிவுடன் மாற்றிய மேயர் சண் ராமநாதனை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

    அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல போதிய வடி கால்வாய் வசதி இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஒரு நாள் கோடை மழைக்கே பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்த தண்ணீர் வீணாகாமல் அருகில் உள்ள சிறிய ஏரி, குளங்களில் சேமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல் கட்டபணி ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற இருக்கிறது.15 மண்டலங்களில் உள்ள 49 சிறு ஏரி, மற்றும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதேபோல் குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிந்த பின்னரே எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படும் என்ற விபரம் தெரியவரும்.

    பலத்த மழை பெய்யும்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஏரி, மற்றும் அயப்பாக்கம், கோலடி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அம்பத்தூர் ஏரியில் கலப்பதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் நன்மங்கலம் ஏரியில் உபரி நீர் கால்வாய் இல்லை. மழை நீரால் குளம் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போல் போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட சில ஏரிகளில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் உபரி நீர் கால்வாய்கள் இல்லாததால் பல மண்டலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. உபரி நீர்கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். பெரும்பாக்கம் ஏரியில் உபரிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி சவாலானது. அயனம்பாக்கம் ஏரிப்பகுதியில் போதிய கால்வாய்கள் இல்லை. முகப்பேர், பாடி, நொளம்பூர் பகுதிகளில் இருந்த குளங்கள் தற்போது இல்லை. இதுபோன்ற இடங்களில் கூடுதலாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றார்.

    • கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி சாகுபடி பணிகளுக்கு உதவி புரிந்து வருகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணையின் மூலமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பி.ஏ.பி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீரும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகும் காட்டாறுகள் மற்றும் பாலாறு, திருமூர்த்தி மலை ஆறு ஆகியவற்றின் மூலமாக மழை க்காலங்களில் பெறப்படும் தண்ணீரும் அணையின் நீராதாரங்க ளாகும்.அதைக் கொண்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. திருமூர்த்தி அணை பாசனத்தில் அம்மாபட்டி குளம், செங்குளம், தினைக்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம், வளைய பாளையம் குளம், உள்ளிட்ட ஏழு குளம் பாசனம் வழங்கும்.இந்த குளங்கள் மூலமாக நேரடியாகவும் மறைமுக மாகவும் நீராதாரங்களை நீர்வரத்தைப் பெற்று நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி சாகுபடி பணிகளுக்கு உதவி புரிந்து வருகிறது. இதனால் கடும் வறட்சி நிலவக்கூடிய கோடைகாலத்தில் கூட ஏழு குளம் பாசனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளால் சாகுபடி பணி மேற்கொள்ள ப்படுகிறது. அதன்படி தென்னை, வாழை, கரும்பு போன்ற நிலைத்து நின்று பலன் அளிக்கும் பயிர்களும் பரவலாக காய்கறிகள் சாகுபடியும் செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக திருமூர்த்தி அணை குறைந்தபட்ச நீர் இருப்புக்கே தள்ளாடி வருகிறது. ஆனால் அதன் மூலமாக நீர்வரத்தை பெற்ற 7 குளங்கள் போதுமான அளவு நீர் இருப்பைக் கொண்டு உள்ளது. இதனால் அவ்வப்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்ப டுவதால் சாகுபடி பணிகளும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. மேலும் குளத்தை ஆதாரமாகக் கொண்ட கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகளிலும், நிலத்தடி நீர் இருப்பு உள்ளது. வறட்சியின் கோரத்தாண்ட வத்திற்கு நீராதாரங்கள் பாதிக்கப்படும் சூழலில் கோடை காலத்தில் சாகுபடி பணிகளுக்கு கை கொடுக்கும் அளவிற்கு 7 குளங்களில் நீர்இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பால்தாய் தலைமை தாங்கினார்.
    • தீர்மானத்தினை ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் வாசித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான் குறிச்சி ஊராட்சியில் குருவன் கோட்டையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பால் தாய் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பூச்செண்டு மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சியில் பசுமை வளங்கள் அதிகரிக்க ஏரி மற்றும் குளங்களில் மரம் நடும் தீர்மானம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியன் வாசித்தார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர் நாராயணன், கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது.
    • குட்டைக்கு மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    பல்லடம் :

    பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டை உள்ளது. இந்தக் குட்டைக்கு மழைக்காலங்களில் கோவை- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும்.

    இந்தக் குட்டையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் கழிவு நீரை விட ஆரம்பித்தனர். காலப்போக்கில் நீரோடை கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த குட்டை அருகே, கட்டடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஏற்கனவே குட்டை மாசுபட்ட நிலையில், கட்டடக்கழிவுகள் மற்றும் கழிவுகளை போட்டு குட்டையை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×