search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் பகுதியில் குளக்கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
    X

    கடையம் பகுதியில் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா பனைவிதையை நட்ட காட்சி.

    கடையம் பகுதியில் குளக்கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

    • ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.
    • தொண்டைமான் குளம், கோணப் பெருமாள் குளம், அத்தியூத்து குளம் உள்ளிட்ட பல்வேறு குளக்கரைகளில் பனைவிதைகள் நடப்பட்டன.

    கடையம்:

    கடையம் யூனியனுக் குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி மற்றும் மேட்டூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து கடையம் பகுதியிலுள்ள பல்வேறு குளக்கரைகளில் சுமார் 5 ஆயிரம் பனை விதைகளை நட்டனர். நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் ஊராட்சி குளங்கள், ஊராட்சி ஒன்றிய குளங்கள், பொதுப்பணித்துறை குளங்கள் ஆகியவை அடங்கும். சென்னல் தாபுதுக்குளம், இலவந்தா குளம், தொண்டைமான் குளம், கோணப் பெருமாள் குளம், அத்தியூத்து குளம், செட்டியூரான்குளம், தெற்கு நொச்சிகுளம், உலகளந்தா பிள்ளை குளம், வேட்டைகாரன் குளம், புங்கன்குளம், ஆலடிகுளம், அனந்த பத்மநாயக்கன்குளம், வடக்கு நொச்சி குளம், பிள்ளைகுளம் மற்றும் மேல வவ்வால் குளம், திருஅம்பலப்பேரி குளம், பாணான்குள விரிசு திருத்தடி குளம் போன்ற பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பனைவிதைகள் நடப்பட்டன. இதில் புனித ஜோசப் கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ரா பாபு, தொழிலதிபர் ரவி, ஊராட்சி செயலர் பாரத், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×