search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Karthikeyan"

    • கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
    • நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    கூடுதலாக

    20 சதவீத மழை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தற்போது நவம்பர் மாதத்தில் 21-ந்தேதி வரை 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும்.

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் அம்பை, சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி வட்டாரங்களில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 53.92 ஹெக்டேர் நிலங்கள் வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகி றது. அவர்களுக்கு நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன் கார் பருவத்தில் நெல் 870 ஹெக்டர் பரப்பிலும், கார் பருவத்தில் 3,131 ஹெக்டேர் பரப்பிலும், பிசான பருவத்தில் நெல் 37 ஹெக்டேர் பரப்பிலும், மக்காச்சோளம் 854, சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும் பயிறு வகைகள் 4275 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை 426 ஹெக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பயிர் காப்பீடு

    மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 154 விவசாயிகள் உளுந்து மற்றும் பாசிப்பயிறு ஆகியவற்றுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மக்காச்சோள பயிருக்கு இதுவரை 346 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் அடுத்த மாதம் 30-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த நிதி ஆண்டில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் தாமிரபரணி வடிநிலை உபகோட்டத்தின் கீழ் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், கண்ணடியன், கோடகன், பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் 48 கிலோமீட்டர் அளவு தூர்வாரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நலத்திட்ட உதவிகள்

    முன்னதாக தோட்டக்க லை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 85 ஆயிரம் மானியத்தில் பவர் டில்லர்களை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினர்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார், தோட்டக்க லைத்துறை துணை இயக்குனர் இளங்கோ மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஞான திரவி யம் எம்.பி., துணை மேயர் ராஜு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செய லாளர் விஜிலா சத்யா னந்த், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சு மணன், மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.வி. சுரேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீர பாண்டியன், சிறுபான்மை பிரிவு முகமது அலி, மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் நவநீதன், மகளிர் அணி அனிதா, நிர்வாகிகள் வி.கே.முருகன், பழைய பேட்டை மணிகண்டன், தொப்பி மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடியபடி கும்மியடித்தனர்.
    • கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பகுதியிலுள்ள நாரம்பூநாதர் பனங்காட்டில் நெல்லை நீர்வளம் மற்றும் முக்கூடல் பொழில் தன்னார்வலர்கள் அறக் கட்டளை இணைந்து சுமார் 30 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு விழா நடை பெற்றது.

    கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனைவிதையை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், அறநிலைய துறை கவிதா, சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபக்குமார் ஆகியோர் பனை விதைகளை விதைத்தனர்.

    தொடர்ந்து இலந்தை குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடிய படி கும்மியடித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கும்மியடித்ததை அவரது செல்போனில் வீடியோ எடுத்த கலெக்டர் கார்த்திகேயன், அந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    குறிப்பாக கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள். தற்போது பனைமரம் குறித்து கும்மி பாட்டு பாடியதை கலெக்டர் மட்டு மல்லாமல் அனை வரும் ஆச்சரியத்துடன் ரசித்து பாராட்டினர்.

    மேலும் பனையேறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு மாவட்ட கலெக்டர் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

    விழாவில் தோட்டக் கலை துறை உதவி இயக்கு னர் சுபாசினி, நெல்லை வனச்சரக அலுவலர் சரவணக்குமார்,சேரன் மகாதேவி தாசில்தார் ரமேஷ், மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாப்பாக்குடி ஒன்றிய துணை சேர்மன் மாரி வண்ணமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் சோழ முடி ராஜன், பணி புஷ்பம், வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, முக்கூடல் பேரூராட்சி தலைவி ராதா லட்சுமணன், துணை தலைவர் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் சங்கரி, ஊராட்சி செயலர் கவிதா மற்றும் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொழில் அமைப்பு தலைவர் எட்வின் ஹென்றி, ஹர்ட் புலனஸ் மெடிட்டே சன் கணேசன் மற்றும் ஜெயந்த் பீட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
    • பெண்கள் பாதுகாப்பாக நடைப்பயிற்சி செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நடப்போம் நலம் பெறு வோம் என்ற நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி பாதைகள் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகர் சந்திப்பில் நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு இன்று தொடங்கப்பட்டது. அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று மீண்டும் உதயா நகர் சந்திப்பை வந்தடைந்தது.

    இந்த நடைப்பயிற்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நடை பயிற்சி மேற்கொண்டனர்.

    சுகாதார நடைபாதை என்.ஜி.ஓ. காலனி வட்டார போக்குவரத்து அலுவலக சாலை உதயா நகர் சந்திப்பில் இருந்து மிதிவண்டி பாதை அன்னை திருமண மண்டபம், ஜெபா கார்டன், மூன் மஹால் சந்திப்பு, தாமிரபதி காலனி வரை சென்று மீண்டும் உதயாநகர் சந்திப்பு வரை 8 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுகாதார நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை வசதிகள், ஓய்வெ டுப்பதற்கான பகுதிகள் மற்றும் அமர்வ தற்கான நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பாதை பெண்கள் பாதுகாப்பாக நடைப்பயிற்சி செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் பரிசோதனை உட்பட அனைத்து சுகாதார பரிசோதனைகளும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதை பொதுமக்கள் பயன்ப டுத்தி நடப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டு தங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் ராஜேந்திரன், நகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா, மண்டல தலைவர் கதீஜாஇக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள்அம்பிகா, சகாய ஜூலியட், சங்கீதா, முத்து சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலி யர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை சட்டமன்ற தொகுதியில் 1,46,532 ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
    • நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,87,476 வாக்காளர்கள் உள்ளனர்.

     நெல்லை:

    1. 1.2024 -ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தொடர் சுருக்கமுறைத் திருத்தப்பணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்த்திகேயன் அங்கீகரிக்கப்ட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.

    அதன்படி நெல்லை சட்டமன்ற தொகுதியில் 1,46,532 ஆண் வாக்காளர்களும், 1,53,843 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் ஆக மொத்தம் 3,00,440 வாக்காளர்கள் உள்ளனர். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 1,20,602 ஆண் வாக்காளர்களும், 1,28347 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் ஆக மொத்தம் 2,48958 வாக்காளர்கள் உள்ளனர். பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,32,654 ஆண் வாக்காளர்களும், 1,37,923 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 2,70,606 வாக்காளர்கள் உள்ளனர். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 1,40,922 ஆண் வாக்காளர்களும், 1,46,541 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 2,87,476 வாக்காளர்கள் உள்ளனர். ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,28,780 ஆண் வாக்காளர்களும், 1,32,442 பெண் வாக்காளர்களும், 16 மூன்றாம் பாலின 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 6,69,490 ஆண் வாக்காளர்களும், 6,99,096 பெண் வாக்காளர்களும், 132 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 13லட்சத்து 68 ஆயிரத்து 718 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் இம்மாவட்டத்தில் மொத்தம் 6960 பேர் உள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    • விவசாயிகள் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார். இதில் வேளாண் இணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயி களிடையே கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    நடப்பு ஆண்டில் மழை குறைவு

    நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 37.35 சதவீதம் கூடுதலாகும். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் முடிய 270.90 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 17.65 சதவிகிதம் குறைவாகும். கடந்த 5 ஆண்டு சராசரி மழையுடன் ஒப்பிடும் போது 41.12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 பருவக்காலங்களில் ஏற்பட்ட மழை குறைவு தொடர்பாகவும், அதனால் ஏற்பட்ட பயிர் சாகுபடி பரப்பு குறைவு, பயிர் பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், அணைகளின் நீர் இருப்பு குறைவு காரணமாக விவசாய தேவைக்கு போதுமான நீர் திறக்க இயலாதது குறித்தும் அரசுக்கு விரிவான அறிக்கை மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது வேளாண்மை உழவர் நலத்துறையின் பரிசீலனையில் உள்ளது. மேலும், வன்னிக்கோனேந்தல் பகுதி விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாகவும் அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன்கார் பருவத்தில் 870 ஹெக்டேர் பரப்பில் மற்றும் கார் பருவத்தில் 3131 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடியும், 259 ஹெக்டேர் பரப்பில் சோளம், கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 1620 ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    நடப்பு ஆண்டு சர்வேதச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும். மேலும், நடப்பு ஆண்டில் மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1825 ஹெக்டேர் பரப்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலங்களின் மண் வளத்தை பெருக்கிட குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள 251 குளங்களும், இரண்டாவதாக 368 குளங்களும் மொத்தம் 619 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    புதிதாக 73 குளங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் கோடைமேலழகியான் கால்வாய் 7.50 கிலோ மீட்டர் வரை அடையக்கருங்குளம் கிராமம் மற்றும் அம்பா சமுத்திரம் பகுதிகளிலும், நதியுண்ணி கால்வாய், ஆலடியூர் கிராமம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதி களிலும், கன்னடியன் கால்வாய் திம்மராஜபுரம், கல்லிடைகுறிச்சி, மற்றும் வெள்ளாங்குளி பகுதிகளிலும், கோடகன் கால்வாய் கொண்டாநகரம், பேட்டை ரூரல், பேட்டை கிராமப் பகுதிகளிலும், பாளையங்கால் கால்வாய் புத்தனேரி, சீதப்பனேரி, மற்றும் பாளை கிராமப் பகுதிகளிலும், பெருங்கால் கால்வாய் மணிமுத்தாறு கிராமப் பகுதி களிலும் துார்வாரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
    • பட்டாசு கடை நடத்தும் இடம் பாதுகாப்பானதாக இருத்தல் அவசியம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை மற்றும் பிற பண்டிகைகள், திருவிழா காலங்களில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விரும்புவோா் வெடிபொருள் சட்டம் 2008 விதி 84 - ன் கீழ் உரிய ஆவணங்கள் மூலம் இணையதளம் மூலம் ஆண்டு முழுவதும் விண்ணப் பிக்கலாம். இந்த உரிமமானது வழங்கப் பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை மட்டுமே செல்லத்தக்கதாகும்.

    படிவம் ஏ.இ.-5-ல் விண்ணப்பப் படிவம், உரிமக் கட்டணமாக ரூ.500 அரசு கருவூலத்தில் செலுத்திய செல்லான், கடையின் வரைபடம், புகைப்படம் - 2, வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்தப்பத்திரம், அதன் வீட்டு வரி ரசீது நகல், சொந்தக்கட்டிடம் எனில் வீட்டு வரி ரசீதின் நகல், நெல்லை துணை இயக்குநா் (சுகாதாரப் பணி) தடையின்மை சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு கடை நடத்தும் இடம் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பானதாகவும் இருத்தல் அவசியம்.

    ஏற்கெனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபா்கள் அதே இடத்தில் மீண்டும் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால், அதற்கான உரிமத்தையும் விண்ணப் பத்துடன் இணைத்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
    • தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தீபாவளி முடியும் வரை செயல்படும்.

    நெல்லை:

    மகாத்மா காந்தியடி களின் 155-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாளை ஆயுதப்படை சாலையில் உள்ள கதர் அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு காந்தியடிகளின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சிறப்பு விற்பனை

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    மகாத்மா காந்தியடி களால் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டு மென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.

    இந்த வாரியத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் பாளையில் கதர் அங்காடி, காலணி உற்பத்தி அலகும், பேட்டையில் தச்சுக்கொல்லு உற்பத்தி அலகும், வீரவநல்லூரில் 5 கைத்தரிகளும் இயங்கி வருகிறது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்பட்டும் காந்தியின் கொள்கையிளை முழுவதுமாக கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை குறியீடாக 2022-2023-ம் ஆண்டிற்கு ரூ.46.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.34.05 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருட்கள் ரூ.28.50 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    காந்தி பிறந்த நாளையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி கள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் இன்று முதல் தீபாவளி முடியும் வரை செயல்படும். மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள் மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேனி, குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பணை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர் பாரதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, கண்காணிப்பாளர் சரவணராஜா, கதர் அங்காடி மேலாளர் ஜானி சாமுவேல், உதவி இயக்குநர், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.
    • பொது மக்களுக்கு மஞ்சபைகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நெல்லை:

    பிரதமர் மோடி வேண்டு கோளுக்கு இணங்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு தழுவிய தூய்மை இயக்கம் அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டு வருகிறது.

    தூய்மை பணிகள்

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி கொண்டாடப்படும் காந்தி ஜெயந்தியையொட்டி 1-ந்தேதி இந்த தூய்மை பணியில் அனைவரும் நேரம் ஒதுக்கி பங்கேற்று வருகின்றனர்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று ஊராட்சிகள் முழுவதும் தூய்மைப் பணிகள் நடை பெற்றது. இதில் அந்தந்த ஊராட்சிகளின் தலை வர்கள் பங்கேற்று அருகில் உள்ள நீர்நிலைகள், குளங்கள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என திரளானோர் பங்கேற்று கோவில்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தினர்.

    கலெக்டர் பங்கேற்பு

    பாளை யூனியன் ரெட்டி யார்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவை நிகழ்வினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செய ல்படுத்தப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை நிகழ்வு இன்று தொடங்கி வைக்க ப்பட்டது. நாம் வசிக்கும் கிராமம் மற்றும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாம் தூய்மையாக வைத்து இருக்கும் பட்சத்தில் கிராமம் தூய்மையாகவும், நாடு தூய்மையாகவும் இருக்கும். குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை சேகரிக்க வருவோர்களிடம் வழங்க வேண்டும். அவர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து மறு சுழற்சி செய்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நமது இருப்பிடத்தை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது இருப்பிடங்களில் மழைநீர் தேங்காமலும், டெங்கு கொசு வராமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், பொது மக்களுக்கு மஞ்ச பைகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    இதில் பாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்ராஜ், பாலசுப்பிர மணியன், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், ரெட்டியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், செயலர் சுப்புகுட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி

    இதேபோல் நெல்லை மாநகராட்சி யிலும் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக காலையில் தூய்மை பணிகள் நடை பெற்றன.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் பாளை நீதிமன்றம் அருகே உள்ள விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினை விடத்தில் தூய்மை ப்படுத்தும் பணி நடை பெற்றது. இதில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல ஒண்டிவீரன் மணி மண்டப வளாகத்தில் நடந்த தூய்மை பணியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள வளாகத்தில் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன் தலைமையில் நடந்த தூய்மை பணிக்கு, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இந்த மெகா தூய்மை பணியில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி மாணவர்களும், 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் மற்றும் கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் சுமார் 40 பேரும் பங்கேற்ற னர்.

    தொடர்ந்து மருத்துவ மனை வளாகத்தின் பல்வேறு இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, செவிலியர் பயிற்றுநர் செல்வன் மற்றும் கலந்து கொண்டனர்.

    • மாரத்தான் போட்டி 5 மற்றும் 10 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.
    • போட்டியில் மொத்தம் 5,000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 29-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இருதய பாதுகாப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவேரி மருத்துவமனை சார்பில் நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ேபாட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகர துணை மேயர் கே. ஆர். ராஜூ, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் மாநகர போலீஸ் துணைகமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவேரி மருத்துவமனை நிர்வாக மேலாளர் வைர முத்து வரவேற்று பேசினார். மாரத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    இப்போட்டி மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இருந்து தொடங்கி குறிப்பிட்ட பாதையை கடந்து பின்னர் மருத்துவக் கல்லூரி மைதானம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் 2,300 பேர் மற்றும் பெண்கள் 2,700 பேர் என மொத்தம்5,000 பேர் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர்.

    10 கிலோ மீட்டர் போட்டி-ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை எஸ்.நிகில்குமார் ரூ.12,500, இரண்டாம் பரிசை எம். ரெங்கராஜ் ரூ. 10,000, மூன்றாம் பரிசை எம். அஜித்குமார் ரூ.7,500, 10 கிலோ மீட்டர்- பெண்கள் பிரிவு போட்டியில் முதல் பரிசை எஸ். ஐஸ்வர்யா ரூ. 12,500, இரண்டாம் பரிசை எஸ்.எம். ஹிதாயத் பவுசியா ரூ. 10,000, மூன்றாம் பரிசை சி.வேணிகா ரூ. 7,500-ஐ பெற்றனர்.

    5 கி.மீ போட்டி- ஆண்கள் பிரிவில் கலந்துகொண்டு முதல் பரிசை மூர்த்தி ரூ. 10,000, இரண்டாம் பரிசை ஸ்ரீனிவாசன் ரூ.7,500 மூன்றாம் பரிசை முத்து இசக்கி ரூ. 5,000 பெற்றனர்.

    5 கி.மீ. - பெண்கள் பிரிவில் முதல் பரிசை ஆர். ரம்யா ரூ.10,000, இரண்டாம் பரிசை எம்.சவுமியா ரூ. 7,500 மூன்றாம் பரிசை எம். பாக்கியவதி ரூ. 5,000. வெற்றி பெற்றவர்களுக்கு விழா மேடையிலேயே பரிசுத் தொகை வழங்கப் பட்டது. விழாவில் காவேரி மருத்துவமனை டாக்டர் மகபூப் சுபுகாணி, டாக்டர் லட்சுமணன், டாக்டர் டி.ஜே. பிரபாகர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காவேரி மருத்துவமனை மருத்து வர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா வர்த்தக மையம் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5,01,877 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையம் கூட்டரங்கில் இன்று உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஞான திரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, திட்ட இயக்குனர் சுரேஷ், சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் கிஷன் குமார், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 840 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 5,01,877 அட்டைதாரர்கள் உள்ளனர்.இதில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 4 லட்சத்து 30 ஆயிரத்து 930 விண்ணப்பங்கள் விநி யோகம் செய்யப்பட்டது. அதில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 345 பேர் நிரப்பி ஒப்படைத்தனர்.

    இதில் சுமார் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் வங்கி கணக்குகளில் பணம் செலு த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவாகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவைகள் உதவித்தொகை என மாதந்தோறும் 40 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இலவச பஸ் பயணம் மூலமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் குழு மூலமாக ஒரு மாதத்தில் 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இவ்வாறாக நெல்லை மாவட்டத்தில் மகளிருக்கு மட்டும் குடும்ப செலவாக ரூ.120 கோடியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபாநாயகர் அப்பாவு

    விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்துள்ள இந்த திட்டமானது மக்கள் மனதில் ஒரு வருடம், 2 வருடம் அல்ல, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை தரும் ஒரு திட்டமாகும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவ-மாணவிகள் போல இந்த உரிமை தொகை திட்டத்திற்காக பெண்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு குறுந்தகவல் வந்ததும் அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    முதல்-அமைச்சர் இலவச பஸ் பயணம், ஏழை விவசாயிகளுக்கு இலவச பம்பு செட், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் இந்தியாவில் வங்கி பயனாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை கணக்கில் வைத்திருக்காத காரணத்தினால் ரூ.23 ஆயிரம் கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தவிர அதிக அளவு ஏ.டி.எம் பயன்படுத்தியதற்காகவும், குறுந்தகவல் அனுப்பும் வசதிக்காகவும் என சுமார் 35 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இனி ஏழை பெண்களின் வங்கி கணக்குகளில் இருந்து இதுபோன்ற அபராத தொகைகள் எடுக்கப்படாது என்ற நிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினால் ஏற்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட 2,000 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான பண பரிவர்த்தன அட்டை களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    இதில் மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலை ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்ல துரை, வீரபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ராஜன், கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழா மேடையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    • நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
    • ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைத்திட உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவு, பசுமை தீர்ப்பாய உத்தரவு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படை யில் விநாயகர் சதுர்த்திக்கு நீர்நிலைகளில் கரைக்கும் வகையில் சிலைகளை வைக்க விரும்புவோர் நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் செய்யப் பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

    பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட ரசாயன பொருட் களால் செய்யப்பட்ட மற்றும் ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைத்திட உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

    எனவே கூனியூர், காருக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்களால் செய்யப்படக்கூடிய நீர்நிலைகளை பாதிக்காத வகையிலான விநாயகர் சிலைகளை, சிலை வைப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறும், ரசாய னத்தால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு இதில் கூறியிருந்தார்.

    ×