என் மலர்
நீங்கள் தேடியது "Special guidance camp"
- மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்துஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வழிகாட்டு ஆலோசனை சிறப்பு முகாம் வருகிற 29-ந் தேதியும் நடைபெற உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2023-24-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து தன்னார்வ இயக்கத்தால் தொழில் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற்றது. இதேபோல் இந்த வழிகாட்டு ஆலோசனை சிறப்பு முகாம் வருகிற 29-ந் தேதியும் ( சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.