search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்ட தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்-நாளை நடக்கிறது
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    நெல்லை மாவட்ட தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்-நாளை நடக்கிறது

    • அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.
    • முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொறு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறும். இக்குறைதீர் முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல் ஆகிய சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    பயனாளர் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று மற்றும் குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும். மேலும் செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு செல்ல வேண்டும்.

    முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×