கருவேல மரங்களை அகற்றி நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

அபிராமம் அருகே கருவேல மரங்களை அகற்றி நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது. நத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.
கருவேல மரங்களால் சூழ்ந்துள்ள நூலக கட்டிடம்.
கருவேல மரங்களால் சூழ்ந்துள்ள நூலக கட்டிடம்.
Published on

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இதன் சுவர்கள், தரைதளம், மேல்தளம் சேதமடைந்து உள்ளது. நூலகம் ஊருக்கு ஒதுக்குபபுறமாக இடத்தில் உள்ளதால் மக்கள் நீண்ட தூரம் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடி க்கையும் எடுக்காததால் கருவேல மரங்களால் புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து நத்தம் கிராம மக்கள் கூறுகையில், நூலகத்திற்க்கு சொந்த கட்டிட வசதி இருந்தும் அதை சீரமைக்கவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் நூலகத்திற்க்கு யாரும் படிக்க செல்வது கிடையாது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் செல்வது கிடையாது. இந்த நூலகத்தை ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் பயன்ப டுத்தி வந்த நிலையில், நூலக கட்டிடம் சேதமடைந்ததால் யாரும் செல்லவில்லை.

பொதுமக்கள் நடமாட்ட முள்ள பகுதியில் நூலகம் அமைத்து அனை வரும் பயன்படுத்தும் வகையில் நூலக கட்டிடத்தை கொண்டுவர வேண்டும். சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து, கருவேல மரங்களை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலக கட்டிடத்தை கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com