search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "replanting"

    • சாலை விஸ்தரிப்பு பணியின்போது ஏராளமான பனை மரங்கள் இடையூறாக இருந்தது.
    • பனை மரத்தை மாற்று இடத்தில் நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியா புரத்தில் இருந்து கேசவனேரி வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை ஓரங்களில் விஸ்தரிப்பு பணியின்போது இடையூறாக ஏராளமான பனை மரங்கள் இருந்தது.

    இதனை பிடுங்கி அப்புறப்ப டுத்தாமல் ஒப்பந்தக்காரர்கள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பனைமரத்தை வேருடன் எடுத்து மாற்று இடத்தில் நட்டனர். ஆங்காங்கே பனை மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ரோடு போடுவதற்கு இடையூறுகளாக உள்ள பனை மரத்தை அழிக்காமல் மாற்று இடத்தில் பிடுங்கி நட்ட செயல் அந்த வழியாக சென்றவர்களை வியக்க செய்தது.

    இந்த நிகழ்வில் கிரீன் கேர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் சையது, வள்ளியூர் உதவி பொறியாளர் முத்து முருகன், ராதாபுரம் உதவி கோட்ட பொறியாளர் சேகர் மற்றும் ஏர்வாடி அறம் செய் பசுமை இயக்கம் சேக் முகமது, வள்ளியூர் பசுமை கரங்கள் சித்திரவேல், பணகுடி மூக்க மாணிக்கம், ரோஸ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நான்கு வழிச் சாலை பணியின் போது ஆலங்குளம் பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன.
    • மரங்களை வேரோடு பிடுங்கி, மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை பூவுலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பகுதியில் நான்கு வழிச் சாலை பணியின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இருப்பினும் சில மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது மழை நன்கு பெய்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மரங்களை வேரோடு பிடுங்கி, மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை பூவுலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே நடவு செய்த மரக்கன்றுகளுக்கு வாரந்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடந்து அதிகளவு பனை விதைகளும் விதைக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் இச்செயலுக்கு ஆலங்குளம் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • நான்கு வழிச்சாலை பணிகளுக்காக சாலையோரங்களில் இருந்த சுமார் 1200 பழமையான மரங்கள் அகற்றப்பட்டு மறு நடவு செய்யப்பட்டது.
    • மறு நடவு செய்த உடன் துளிர்விட்டு வளர்ந்த மரங்கள் பல காய்ந்து காட்சிப் பொருளாய் நிற்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக சாலையோரங்களில் பசுமை காடுகள் போல் காட்சியளித்து வந்த சுமார் 1200 பழமையான மரங்கள் அகற்றப்பட்டு மறு நடவு செய்யப்பட்டது.

    இதற்காக அரசு சார்பில் நிதியும் செலவிடப்பட்டது. இருப்பினும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் முதல் தென்காசி வரையிலான இடைப்பட்ட பகுதிகளில் மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    மறு நடவு செய்த உடன் துளிர்விட்டு வளர்ந்த மரங்கள் பலவும் தற்போது எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளப்படாததால் சாலையின் இருபுறங்களிலும் காய்ந்து காட்சிப் பொருளாய் பரிதாப நிலையில் நிற்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    தற்போது எஞ்சி இருக்கும் ஒருசில துளிர்விட்ட மரங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×