search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "four way road"

    • புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
    • புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட பல்வேறு தரப்பினரும் திணறி வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் நகர்புற பகுதியில் தற்போது தான் பழைய தார் சாலைகளை பெயர்த்து அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சி யம் காட்டி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் ஆலங்குளம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு, தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர்.

    பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் தண்ணீரை பீச்சி அடித்து சாலை அமைக்கவும் வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். 

    • நான்கு வழிச்சாலை பணிகளுக்காக சாலையோரங்களில் இருந்த சுமார் 1200 பழமையான மரங்கள் அகற்றப்பட்டு மறு நடவு செய்யப்பட்டது.
    • மறு நடவு செய்த உடன் துளிர்விட்டு வளர்ந்த மரங்கள் பல காய்ந்து காட்சிப் பொருளாய் நிற்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளுக்காக சாலையோரங்களில் பசுமை காடுகள் போல் காட்சியளித்து வந்த சுமார் 1200 பழமையான மரங்கள் அகற்றப்பட்டு மறு நடவு செய்யப்பட்டது.

    இதற்காக அரசு சார்பில் நிதியும் செலவிடப்பட்டது. இருப்பினும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் முதல் தென்காசி வரையிலான இடைப்பட்ட பகுதிகளில் மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    மறு நடவு செய்த உடன் துளிர்விட்டு வளர்ந்த மரங்கள் பலவும் தற்போது எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளப்படாததால் சாலையின் இருபுறங்களிலும் காய்ந்து காட்சிப் பொருளாய் பரிதாப நிலையில் நிற்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    தற்போது எஞ்சி இருக்கும் ஒருசில துளிர்விட்ட மரங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை பணிக்காக அரசு மற்றும் தனியார் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    பனைக்குளம்:

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒ ன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் -ராமேசுவரம் இடையிலான சாலை இரு வழிச்சாலையாக உள்ளதால் அதிக வாகன போக்குவரத்து காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

    இதனை கருத்தில் கொண்டு ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இ ருந்து ராமேசுவரம் வரையிலும் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை சர்வேயர்கள் மூலம் அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை பகுதியில் ஓய்வுபெற்ற சர்வேயர் வேலு மற்றும் சார்பு ஆய்வாளர் காமேஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நிலங்களை அளவீடு செய்து பதிவு செய்து கொண்டனர்.

    இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மதுரை-பரமக்குடி இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக பரமக்குடி-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம்-ராமேசுவரம் தனுஷ்கோடி வரையிலும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்க உள்ளது. இதற்காக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ராமேசுவரம் வரையிலும் தற்போது உள்ள சாலையோடு சேர்த்து 60 மீட்டர் அகலத்திற்கு இடம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இதில் சர்வே துறையினர் மூலம் பல குழுக்களாக பிரிந்து அளவீடு செய்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே துறை மூலம் ஆய்வறிக்கை கிடைத்த பின்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அனுப்பப்படும். நான்கு வழிச்சாலைக்கு தேவைப்படும் நிலங்களுக்கு தனியார், பட்டா உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் தொகையானது வழங்கப்படும். ராமநாதபுரம்- ராமேசுவரம் இடையிலான நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்க இன்னும் 6 மாதத்திற்கு மேல் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் கணேஷிடம் மனு கொடுக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    கூட்டத்தில் மாக்சிஸ்ட் லெனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விடுதலைக்குமரன் தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், தஞ்சாவூரில் இருந்து மதுரை வரை அமைக்க இருக்கும் 4 வழிச்சாலை திட்டத்திற்காக புதுக்கோட்டை மாவட்ட விவசாய நிலங்களில் அதன் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக கல் ஊன்றியவர்கள் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இரு வழி தேசிய நெடுஞ்சாலையிலேயே போதிய அளவு வாகன போக்குவரத்து இல்லாததால் கந்தர்வக்கோட்டை சுங்கச்சாவடியில் நாள் ஒன்றுக்கு ரூ.68 ஆயிரம் இழப்பு என்று கூறப்படும் நிலையில், இந்த திட்டம் தேவையற்றது. எனவே நான்குவழி சாலைக்காக விளை நிலங்களை அபகரிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காத இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

    இதேபோல தி.மு.க. நகர செயலாளார் நைனாமுகமது தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சி 42-வது வார்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி வழங்க வேண்டிய குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. கழிவுநீர் கால்வாய் வசதியை முறையாக செய்து தர வில்லை. மேலும் சாலை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை.எனவே இனியாவது முறையாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். மேலும் அந்த பகுதியில் பழுதடைந்துள்ள மின்கம்கம்பத்தை மாற்றி தர வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

    அரிமளம் பசுமை மீட்புக்குழு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, அரிமளத்தில் உள்ள நீர்நிலை வரத்து வாரிகளை தூர்வாரும் பணிகள் பசுமை மீட்புக் குழுவினரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிந்த பிறகு இரண்டு முறை மழை பெய்தும் வரத்து வாரிகளில் மழை நீர் வரவில்லை. இதுகுறித்து இங்கு களப்பணியாற்றிய இளைஞர்கள் ஆய்வு செய்தபோது, வனப்பகுதியினரால் பல இடங்களில் நீர்வரும் பாதைகளில் பெரிய வரப்பு அணைகள் அமைக்கப் பட்டிருப்பதை கண்டறிந்தனர். எங்கள் குழு வரத்து வாரிகளை தூர்வாரிய பிறகு அரிமளத்தில் 6 செ.மீ மழை பெய்தும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் வனத்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட வரப்பணைகள் தான். எனவே இந்த வரப்பணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

    மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
    ×