search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Measurement"

    • மழைநீர் வடிவதில் சிரமமும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது.
    • தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அளவீடு செய்து ஆய்வு செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே மடவளா கம் சாலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் சிறுபாலம் கல்வெட்டு அமைக்க ப்பட்டது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிவதில் சிரமமும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது. இதனை சீரமைத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சரிசெய்து அகலப்படுத்திட மாவட்ட கலெக்டர் மகாபாரதி நெடு ஞ்சாலைத்துறை அதிகாரிக ளை நேரில் வரவழைத்து அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து கல்வெர்ட் இருக்கும் பகு தியை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், பணிதள மேற்பா ர்வையா ளர் விஜயேந்திரன் மற்றும் நகர சர்வேயர், சாலை ஆய்வாளர் உள்ளிட்டோர் அந்த பகுதியில் நெடுஞ்சா லைத்துறை, நகராட்சி, தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அளவீடு செய்து ஆய்வு செய்தனர். விரைவில் சீரமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.
    • புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    கடலூர்:

    கடலூர் - மடப்பட்டு சாலையில் 230 கோடி மதிப்பீட்டில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே நெடுஞ்சாலைத்து றையினரால் வரையப்பட்ட குறியீடுகள் வரை ஆக்கிரமி ப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்ததால் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அரசியல் கட் சியினர் மற்றும் சமூக அமைப்பினர்கள் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை திட்ட கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, தனி தாசில்தார் (நில எடுப்பு) தமிழ்ச்செல்வி மற்றும் சர்வேயர் முன்னிலையில் நெல்லிக்குப்பம் வர சித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் வரை சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணிகள் நடைபெற்றன. அப்போது ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    இதனை தொடர்ந்து கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் அரசு வரைபடம் மூலம் அளவீடு பணிகளில் ஈடுபட்டு குறியீடு வரையப்பட்டது. அப்போது ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சரியான முறையில் அளவீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதை அனைவரும் ஏற்று வரவேற்றனர். பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிக்காக அரசிடம் இருந்து அனுமதி பெற்று அதற்கான நிதி பெற்று பணிகள் சரியான முறையில் அளவீடு செய்துசாலை விரிவாக்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டம் நிறைவேற்றுவதன் மூலம் விபத்து இல்லாமலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதன்படி அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை தொடர்ந்து மீண்டும் உரிய முறையில் அளவீடு செய்து குறியீடு வரையப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் பணி தொடங்கப்பட்டு முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மற்றொருபுரத்திலும் உரிய முறையில் அளவீடு நடைபெற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • தமிழ்நாடு முழுவதும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடந்துவருகிறது.
    • வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு முழுவதும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி நடந்துவருகிறது.

    அதன்படி வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி கடிநெல்வயல் பகுதியில் உள்ள வேதாரண்யேஸ் வரர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை நாகை தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) அமுதா தலமையில் அளவிடும் பணி நடைபெற்றது.

    இப்பணியில் கோவில் செயல் அலுவலர் அறிவழகன், கோவில் நில அளவையர் விக்னேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
    • வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் மற்றும் வட்டி முறையாக செலுத்தாததால் நிலத்தை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.

    தகவல் அறிந்து இடத்தின் உரிமையாளர் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இடத்திற்கு அளவீடு செய்ய செல்வதற்கு வழித்தடம் இல்லாததால் அருகே உள்ள இடத்தின் வழியாக சென்று வங்கி நிர்வாகத்தினர் அளவீடு செய்ய முயன்றனர். அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழித்தடத்திற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வருவதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க பட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆச்சனூர் முனியாண்டவர் கோவில் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அங்கன்வாடிக்கு சென்று அங்கு படிக்கும் குழந்தைகளிடம் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருவையாறு:

    திருவையாறு ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    திருவையாறு ஒன்றியம் வைத்தியநாதன்பேட்டை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் செலவு மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் இடங்களை ஆய்வு செய்தார்.

    அதை தொடர்ந்து பிரதமந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு அளவீடுகளையும், வீட்டின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.31.96 லட்சம் செலவு மதிப்பீட்டில் நடக்கும் ஆச்சனூர் முனியாண்டவர் கோவில் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தரமாக போடப்பட்டுள்ளதா என்று அளவீடு செய்தார்.

    பொது விநியோகத் திட்டத்தில் ரேசன் கடையை பார்வையிட்டு இருப்பு விவரங்களையும் பொருட்கள்

    வழங்கப்பட்ட விவரங்களையும் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் உறுதித்த ன்மையை ஆய்வு செய்தார்.

    அங்கன்வாடிக்கு சென்று அங்கு படிக்கும் குழந்தைகளிடம் வழங்கப்படும் உணவுகள் பற்றியும், குழந்தைகளின் கேட்டறிந்து குழந்தைகளின் கல்வி அறிவையும், பேச்சு திறமையையும் குழந்தையின் உடல் நலம் பற்றியும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    அதை தொடர்ந்து திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர்களுடன் கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு ஊராட்சிமன்றத் தலைவர்களின் கருத்துக ளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.

    ஆய்வி ன்போது உதவித்திட்ட அலுவலர் சித்ரா, உதவிசெயற் பொறியாளர் கருப்பையா, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நந்தினி, ஜான்கென்னடி மற்றும் தாசில்தார் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
    • நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள வடுகபாளையம் பகுதியில் குட்டை உள்ளது .இந்தக்குட்டையை பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் துார் வாரும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    குட்டை துார் வாரும் பணி நடந்து வரும் சூழலில் இங்குள்ள புறம்போக்கு இடத்தில் தனி நபர்களுக்கு புதிதாக வழித்தடம் தடம் விட்டு பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே குட்டையை அளவீடு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்), சசிரேகா ரமேஷ்குமார் (பா.ஜ.க,) ஆகியோர் நகராட்சி ஆணையாளர் மற்றும் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் விரைவில் அளவீடு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் குட்டையை அளவீடு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொங்கலுார் ஆர்.ஐ., கேத்தனூர் வி.ஏ.ஓ. ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை பணிக்காக அரசு மற்றும் தனியார் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    பனைக்குளம்:

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒ ன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் -ராமேசுவரம் இடையிலான சாலை இரு வழிச்சாலையாக உள்ளதால் அதிக வாகன போக்குவரத்து காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

    இதனை கருத்தில் கொண்டு ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இ ருந்து ராமேசுவரம் வரையிலும் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களை சர்வேயர்கள் மூலம் அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை பகுதியில் ஓய்வுபெற்ற சர்வேயர் வேலு மற்றும் சார்பு ஆய்வாளர் காமேஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நிலங்களை அளவீடு செய்து பதிவு செய்து கொண்டனர்.

    இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மதுரை-பரமக்குடி இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக பரமக்குடி-ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம்-ராமேசுவரம் தனுஷ்கோடி வரையிலும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்க உள்ளது. இதற்காக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ராமேசுவரம் வரையிலும் தற்போது உள்ள சாலையோடு சேர்த்து 60 மீட்டர் அகலத்திற்கு இடம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இதில் சர்வே துறையினர் மூலம் பல குழுக்களாக பிரிந்து அளவீடு செய்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே துறை மூலம் ஆய்வறிக்கை கிடைத்த பின்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அனுப்பப்படும். நான்கு வழிச்சாலைக்கு தேவைப்படும் நிலங்களுக்கு தனியார், பட்டா உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் தொகையானது வழங்கப்படும். ராமநாதபுரம்- ராமேசுவரம் இடையிலான நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்க இன்னும் 6 மாதத்திற்கு மேல் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
    அரசு தங்களுக்கு வழங்கிய நிலத்தை முறையாக அளந்து கொடுக்க வேண்டும் என்று நரிக்குறவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
    ராமநாதபுரம்:

    திருவாடானை சமத்துவபுரம் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த ஏராளமான நரிக்குறவர்கள் தலைவர் செல்வம் தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம். எங்களில் 152 பேருக்கு கடந்த 2015-ம் ஆண்டு அரசால் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.

    இந்த நிலத்தை முறையாக அளந்து பிரித்து வழங்கவில்லை. இதுதொடர்பாக நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் எங்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து கேட்டபோது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக எங்களுக்கு நிலத்தை அளந்து பிரித்து வழங்கி இருந்தால் நாங்கள் அந்த இடத்தில் குடிசை போட்டு வாழத்தொடங்கி இருப்போம்.

    தற்போது அரசு வழங்கிய நிலத்தை எங்கள் கண் எதிரேயே ஆக்கிரமித்து அபகரிக்கும் செயல் நடந்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக அதிகாரிகள் எங்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை முறையாக பிரித்து அளந்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வேறுவழியின்றி சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுஉள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 
    ×