search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகள்- கலெக்டர் ஆய்வு
    X

    அங்கன்வாடி பள்ளியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகள்- கலெக்டர் ஆய்வு

    • ஆச்சனூர் முனியாண்டவர் கோவில் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அங்கன்வாடிக்கு சென்று அங்கு படிக்கும் குழந்தைகளிடம் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருவையாறு:

    திருவையாறு ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    திருவையாறு ஒன்றியம் வைத்தியநாதன்பேட்டை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் செலவு மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் இடங்களை ஆய்வு செய்தார்.

    அதை தொடர்ந்து பிரதமந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு அளவீடுகளையும், வீட்டின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.31.96 லட்சம் செலவு மதிப்பீட்டில் நடக்கும் ஆச்சனூர் முனியாண்டவர் கோவில் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தரமாக போடப்பட்டுள்ளதா என்று அளவீடு செய்தார்.

    பொது விநியோகத் திட்டத்தில் ரேசன் கடையை பார்வையிட்டு இருப்பு விவரங்களையும் பொருட்கள்

    வழங்கப்பட்ட விவரங்களையும் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் உறுதித்த ன்மையை ஆய்வு செய்தார்.

    அங்கன்வாடிக்கு சென்று அங்கு படிக்கும் குழந்தைகளிடம் வழங்கப்படும் உணவுகள் பற்றியும், குழந்தைகளின் கேட்டறிந்து குழந்தைகளின் கல்வி அறிவையும், பேச்சு திறமையையும் குழந்தையின் உடல் நலம் பற்றியும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    அதை தொடர்ந்து திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர்களுடன் கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு ஊராட்சிமன்றத் தலைவர்களின் கருத்துக ளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.

    ஆய்வி ன்போது உதவித்திட்ட அலுவலர் சித்ரா, உதவிசெயற் பொறியாளர் கருப்பையா, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நந்தினி, ஜான்கென்னடி மற்றும் தாசில்தார் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×