என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலத்தை அளவீடு செய்ய வந்த வங்கி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு
- கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
- வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் மற்றும் வட்டி முறையாக செலுத்தாததால் நிலத்தை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.
தகவல் அறிந்து இடத்தின் உரிமையாளர் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இடத்திற்கு அளவீடு செய்ய செல்வதற்கு வழித்தடம் இல்லாததால் அருகே உள்ள இடத்தின் வழியாக சென்று வங்கி நிர்வாகத்தினர் அளவீடு செய்ய முயன்றனர். அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழித்தடத்திற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வருவதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க பட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்