search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank officials"

    • கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
    • வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து கோவை எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் மற்றும் வட்டி முறையாக செலுத்தாததால் நிலத்தை ஏலம் விடுவதாக வங்கி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று வங்கி நிர்வாகத்தினர் இடத்தை அளவீடு செய்ய வந்தனர்.

    தகவல் அறிந்து இடத்தின் உரிமையாளர் தனபால் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இடத்திற்கு அளவீடு செய்ய செல்வதற்கு வழித்தடம் இல்லாததால் அருகே உள்ள இடத்தின் வழியாக சென்று வங்கி நிர்வாகத்தினர் அளவீடு செய்ய முயன்றனர். அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழித்தடத்திற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வருவதாக வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்க பட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மண்ணச்சநல்லூர் அருகே வாங்கிய கடனை காலக்கெடுவுக்குள் கட்டத் தவறியதால் வங்கி அதிகாரிகள் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டுக்கு சீல்வைத்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர் உப்புகார தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் ( வயது 50). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கேபிள் டி.வி. ஆப்பரேட்டராக உள்ளார். அதே ஊர் வெள்ளைச் செட்டித்தெருவை சேர்ந்த பெரியண்ணன், இந்திரா நகரை சேர்ந்த ராஜலட்சுமி. இவர்கள் 3பேரும் தொழில் செய்வதற்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள வங்கியின் வீட்டு அடமான பத்திரம் வைத்து கடன் வாங்கியதாக தெரிகிறது.

    வாங்கிய கடனை காலக்கெடுவுக்குள் கட்டத் தவறியதால் , வங்கி அதிகாரிகள் மதுரையில் கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் படி மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகா , மண்டல துணை தாசில்தார் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்தனர். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×