search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pond"

    • தூத்துக்குடியில் குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள் உயிரிழப்பு.
    • உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் ஆறுதல்.

    தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி மற்றும் செல்வன் என மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் மூவரும் உறவினருடன் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.

    மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    • சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
    • 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.

    இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.

    இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.

    இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

     

    பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • உடன்குடி வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், மற்றும் ஆறு உள்ளது.
    • தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள அடைப்புகளை விவசாயிகள் தண்ணீருக்குள் இறங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், மற்றும் ஆறு உள்ளது. இவைகளுக்கு இந்த ஆண்டு எப்படியாவது தண்ணீர் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர். தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள அடைப்புகளை விவசாயிகள் தண்ணீருக்குள்இறங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டு பருவமழை வரும். குளம்- குட்டைகள் முழுமையாக நிரம்பி விடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு விவசாய அமைப்புகள் தண்ணீர் வரும் கால்வாய் மற்றும் குளம்- குட்டைகளை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.

    இது பற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், அரசு சீரமைப்பதாக சொல்லி குளம், குட்டைகளில் உள்ள மணலை அள்ளி எடுத்துசென்று விடுவார்கள். நாங்கள் குளம், குட்டைகளில் உள்ள மணலை எடுத்து கரையோரமாக வைத்து கரைகளை பலப்படுத்துகிறோம். எல்லாமே அரசுசெய்யும் என்று காத்திருந்தால் காலதாமதம் ஆகிவிடும். அதனால் நாங்கள் இப் பணியை செய்து வருகிறோம் என்று கூறினார்.

    • பச்சையாறு அணையில் இருந்து 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் பூலாங்குளமும், மேலவடகரையில் பம்பன்குளமும் உள்ளன. இந்த குளங்களின் மூலம் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த குளங்களுக்கு மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் சென்றது. ஆனால் பச்சையாறு அணை கட்டப்பட்ட போது கால்வாய் அணைக்குள் சென்று விட்டது. அதன் பின்பு பச்சையாறு அணையில் இருந்து மடத்துக் கால்வாய் மூலம் 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குளங்களுக்கு தண்ணீர் வரும் மடத்துக் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    இதையடுத்து 2 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் பெய்து வரும் கனமழையினால் இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் பம்பன்குளமும், பூலாங்குளமும் இன்னும் நிரம்பவில்லை. பராமரிப்பு இல்லாததால், மடத்து கால்வாயில் வரும் தண்ணீர் தடைபட்டு குளங்களுக்கு வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    குளங்கள் நிரம்பாததால் குளங்கள் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மடத்து கால்வாயை பராமரித்து, 2 குளங்களுக்கும் போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனால் வேறு எந்த வழியிலாவது தண்ணீர் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் முழுமை யாக நிரப்ப வேண்டும்.
    • இல்லையெனில் உடன்குடி பகுதியில் விவசாயம் முழுமையாக அழிந்து விடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட தாங்கை குளம், சடையனேரி குளம், தருவைகுளம், கருமேணிஆறு புதிதாக நிலத்தடி நீர் பிடிப்பு ஏற்படு வதற்காக அய்யனார்குளம், மாநாட்டுக்குளம், பரமன் குறிச்சிகுளம், வெள்ளா ளன்விளை குளம், நரிகுளம் உட்பட ஏராளமான புதிய நீர்பிடிப்புகுளங்கள் மற்றும் தண்ணீர்வரும் கால்வாய்கள் இன்று வரை வறண்ட நிலையில் இருக்கிறது.

    ஊரெல்லாம் கொட்டி தீர்க்கும் மழை உடன்குடியை தொடர்ந்து ஒரங்கட்டுகிறது. இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனால் வேறு எந்த வழியிலாவது தண்ணீர் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் முழுமை யாக நிரப்ப வேண்டும்.

    இல்லையெனில் உடன்குடி பகுதியில் விவசா யம் முழுமையாக அழிந்து விடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் குடிதண்ணீரும் இருக்காது என்று வேதனை யுடன் கூறுகின்றனர்.

    இதுசம்பந்தமாக விவசாய சங்க பிரதிநிதிகள் பலரிடம் கையொப்பம் வாங்கி பரமன்குறிச்சி பிர்லா போஸ் மூலம் முதல்-அமைச்சர் மற்றும் சம்பந்த ப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

    • செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
    • சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 75).

    மணி இறந்து விட்ட நிலையில் செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று இரவு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆன்ரோஅஸ்வந்த் ஆரோக்கியராஜ் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்

       மங்கலம்:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பல்லடம், மங்கலம், திருப்பூர், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.

    • வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
    • போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டி னம் 4 வழி சாலைப்பணி நடைபெற்று வருகிறது.

    இச்சாலைக்காக சாலை யின் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த சர்வீஸ் சாலை முழுமை பெறாமல் இருப்பதால் ஆங்காங்கே பள்ளமாக உள்ளது.

    இதனால் நேற்று பெய்த மழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. அவ்வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளா னார்கள்.

    மேலும் காலை நேரத்தில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருப்பதால் பள்ளப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தும் ஏற்படுகிறது.

    விபத்தினை தடுக்கும் வண்ணம் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை 2 பக்கங்களில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை.
    • சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னர்கோவில் பகுதியை சுற்றி பல்வேறு சிறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு குளங்கள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் வட்டம் திருநாரையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குளத்தின் கரை ஓரத்தில் கிடந்தது. இதை அந்த வழியாக கிராமத்திற்குள் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தசெய்தி கிராமத்தில் காட்டுதீ போல பரவி உடனே பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குளத்தின் அருகே வந்து குளத்தின் ஓரத்தில் கிடந்த முதலையை பார்த்தனர். அதிஷ்டவசமாக குளத்தினுள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிதம்பரம் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த வனசரக அலுவலர் வசந்த், பாஸ்கரன் தலைமையிலான வன ஊழியர்கள் விரைந்தனர். பின்னர் குளத்தின் ஓரத்தில் இருந்த முதலையை லாவகமாக பிடித்து சிதம்பரம் அருகே வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளத்தில் முதலை புகுந்தது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. 

    • கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • தப்பி ஓடியவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது களக்காடு கீழத்தெருவை சேர்ந்த சதீஸ் (வயது25), சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த பாலதுளசி (34) ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் எந்தவித அனுமதியும் இன்றி மண்ணை திருடி வயல் வரப்பில் வைத்து கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மண்திருட்டுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தாமரைக்குளம் சீரமைக்கும் பணி தொடங்கியது.
    • ஆக்கிரமப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் நகரில் மிகப்பெரிய குளமான தாமரைக் குளம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த தாமரைக் குளம் பொய்கை தீர்த்தம் என முன்பு அழைக்கப்பட்டு வந்தது.

    சீர்காழி நகர் பகுதியில் பெரும் நீர் ஆதாரமாகவும் இந்த தாமரைக் குளம் இருந்தது இந்நிலையில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த தாமரைக் குளம் தற்போது சீர்காழி நகர்பதி போகுது மக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கியது.

    குளத்தில் உள்ள ஆக்கிரமப்புகள் அகற்றாமல் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தாமரைக் குளம் தூர்வாரும் பணியை திடீர் ஆய்வு செய்தார் .அப்போது தாமரைக் குளத்தில் நடைபெற்று வரும் சிமெண்ட் கட்டைகள் கட்டும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் மகாபாரதி பணிகள் தரமாக செய்திட அறிவுறுத்தினார்.

    குளத்தின் படித்துறையை மீட்டு பார்க்கிறது முழுமையாக அகற்றி தூர்வாரிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இந்த ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி பாபு, நித்யா தேவி பாலமுருகன்,மற்றும் ஒப்பந்ததாரர் வெற்றி உடனிருந்தனர்.

    • சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.
    • மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சிக்குட்பட்ட மைலப்பபுரம் கிராமத்தில் பேராமணி குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வரும் நிலையில் குளக்கரையின் கீழ்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த சுற்றுச்சுவரானது 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிது சிறிதாக இடிந்து விழத் தொடங்கியது.

    தற்பொழுது கீழ்ப்பகுதியில் மொத்தமாக சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால் மைலப்பபுரம், மலையான்குளம், பேராமணி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை அந்த குளக்கரை தான் என்பதாலும் ஊருக்குள் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் அருகில் இருந்து அதிகளவில் மாணவ- மாணவிகள் சைக்கிள், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே விபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், தொடர்ந்து குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையும் வலுவிழந்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பேராமணி குளத்தில் இடிந்து விழுந்துள்ள சுற்று சுவரை மீண்டும் புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×