என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உத்தரவு"
- 15 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.
- இந்த கடித நகல் மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
கடந்த 18-ந்தேதி மாணிக்கம்தாகூர் எம்.பி. நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எழுதிய கடிதத்தில் விருதுநகரில் கடந்த 19-–ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக் கான அழைப்பிதழில் மாவட்ட எம்.பி.க்கள் பெயர் இடம் பெறவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் நடை முறைக்குழு சார்பில் துணை செயலாளர் பாலகுரு அனுப்பியுள்ள கடி தத்தில், மத்திய நிதி அமைச்சகத்திற்கு இது குறித்து நிகழ்ச்சி நடத்திய வங்கி, 15 தினங்களுக்குள் விளக்கம் பெற்று அனுப்பு மாறும், இதுகுறித்த அறிக்கை நாடாளுமன்ற சபா நாயக ருக்கும் நிதி மந்திரிக்கும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதுகுறித்த தகவல் நாடா ளுமன்ற உறுப்பி னருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.
இந்த கடித நகல் மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடவ டிக்கை எடுத்ததற்காக நாடாளுமன்ற சபாநாய கருக்கு நன்றி தெரிவித்து உள்ளதுடன் இது ஒரு சரியான பாடமாக அமையும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
- புதுக்கோட்டை பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பழுதடைந்த கட்டிடங்களை இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள பேரிடர்மேலாண்மை அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர்மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர்மாவட்ட கலெக்டர் கூறும்போது:-இந்த ஆய்வின்போது, மழை அளவின் பதிவேடு களையும், மழையினால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள், கட்டட இடிமானங்கள் உள்ளிட்ட வைகளின் விவரங்களையும் கேட்டறியப்பட்டது.மேலும் இதுபோன்ற பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தீவிர மழைக்காலங்களில் பொது மக்களை பேரிடர்க ளிலிருந்து காப்பாற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்நிலையில் பேரிடர்மே லாண்மை அலுவலகத்தின் அலைபேசிக்கு உதவி கோரி வரும் அழைப்புகளை உரிய முறையில் பரிசீலனை செய்து, விரைவாக நட வடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.இடிந்துவிழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக எவ்வித இடையூறும் ஏற்ப டாத வகையில் அப்புறப்ப டுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 10 - பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளன.மேலும், மழைக்காலங்க ளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூ டிய மாவட்ட அவசரக் கட்டுபாட்டு அறை எண் - 1077, 04322-222207 ஆகிய கட்டணமில்லா தொலை பேசி எண்களைதொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க லாம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது, தனிவட்டாட்சி சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர்உடனிருந்தனர்.
- பட்டா வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது.
- இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மதுரை
மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளை யில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது:-
மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் பல வரு டங்களாக வசித்து வருவதா கவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறை யினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந் தது. அப்போது அரசு தரப் பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவில், நீர் நிலையை ஆக்கி ரமித்து செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறு வது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடி யாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் அரசு ஆவணங்க ளின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்து றையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை யும் சட்ட விதிகளுக்கு உட் பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் பெரியகாலாப்பட்டை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் மணி (வயது 23). இவர் கிளியனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் கட்டைகளுடன் சுற்றினார். மேலும், சாலையில் சென்றவர்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு சிலரின் மீது தாக்குதலும் நடத்தினார்.இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், புதுவை மாநிலத்தை சேர்ந்த மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- தொடா் மழை காரணமாக டால்பின் நோஸ் காட்சிமுனைக்குச் செல்லும் சாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது.
- விபத்துகளை தடுக்க போலீசார் அறிவுரை
ஊட்டி,
ஊட்டி,குன்னூரில் தொடா்மழை காரணமாக பகல் நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் குன்னூர் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு வாகனங்களில் செல்வோா் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சிமுனை உள்ளது. இப்பகுதிக்குச் செல்லும் வழியில் உயா்ந்த மலைகள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
மேகமூட்டத்துக்கு நடுவே அமைந்த டால்பினோஸ் பாறை, இம்மலையின் வலது மற்றும் இடது புறங்களில் உள்ள பரவ சமூட்டும் பள்ளத்தாக்குகள், மறுபக்கத்தில் கேத்தரின் அருவி என பல சுற்றுலாத்தலங்கள் உள்ளதால் இப்பகுதிகளைக் கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் தொடா் மழை காரணமாக டால்பின் நோஸ் காட்சிமுனைக்குச் செல்லும் சாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களைக் கண்டறிந்து வாகனங்களை இயக்குவது சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா்.
பகல் நேரத்திலும் கடும் பனி மூட்டமாக உள்ளதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனத்தை கவனமுடன் இயக்க வேண்டும் என காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊட்டி - குன்னூரில் பல பகுதிகள் அடர்ந்த பனி மூட்டமாக காணப்படுவது சுற்றுலாபயணிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது
- திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
- திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கானுயிர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான, தி ஜங்கிள் கேங் திரைப்படத்தை பள்ளிகளில் திரையிடுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும், கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் சர்வதேச, தேசிய விருதுகள் பெற்ற சிறந்த சிறார் திரைப்படங்கள், மாதந்தோறும் திரையிடப்படுகின்றன. இம்மாதத்திற்கான திரைப்படமாக 2012ல் தமிழில் வெளியான, தி ஜங்கிள் கேங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு, பதிவிறக்குவதற்கான லிங்க் பள்ளி எமிஸ் இணையதளத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்களான கருப்பு மான், வாத்து, தேவாங்கு ஆகியவை தங்கள் பயணத்தை வடகிழக்கு இந்தியாவில் இருந்து துவங்கி, மத்திய பகுதி வழியாக தென்னிந்தியாவை வந்தடைகின்றன.கதையில் காண்டாமிருகம், புலி, யானை, கரடி போன்ற விலங்குகளின் தகவல்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.
திரைப்படம் வழியே, விலங்குகள், தாவரங்கள், சூழலை பாதுகாப்பதன் அவசியம், பங்களிப்பு முறை குறித்து, குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.பல்வேறு விருதுகளை குவித்த இப்படத்தை பள்ளிகளில் திரையிடுவதோடு மாணவர்களை குழுக்களாக பிரித்து, திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், கதாபாத்திரங்கள் குறித்து விவாதித்து அறிக்கை வடிவில் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் காலாண்டு தேர்வு, விடுமுறை அறிவிக்கப்பட்டு குறைந்த நாட்களே பள்ளி இயங்கியதால், நவம்பர் முதல் வாரத்திற்குள் இப்படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.
புதுடெல்லி:
கழிவுநீரை மனிதர்கள் அகற்றுவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடந்தது. இன்று வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து தீர்ப்பு வழங்கினர்.
சாக்கடைகளில் கழிவுநீரை அகற்றும் போது தொழிலாளி உயிரிழந்தால் அவரது குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் நிவாரணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்க வேண்டும்.
கழிவுநீர் அகற்றும் போது தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்து நிரந்தரமாக உடல் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடாக குறைந்தது ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். தொழி லாளிக்கு மற்ற குறைபாடுகள் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு அமைப்புகள் ஒருங்கிணைக்க வேண்டும். கழிவுநீரை மனிதர்களை வைத்து அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை இறப்புகள் தொடர்பான வழக்குகளை ஐகோர்ட்டுகள் கண்காணிப்பதில் தடை இல்லை.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார்.
- ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
காரைக்குடி
கடந்த கிராமப்புற உள் ளாட்சி தேர்தலில் சிவ கங்கை மாவட்டம் சங்கராபு ரம் ஊராட்சியில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர் ஷினி அய்யப்பன் ஆகியோர் வெற்றி பெற்றதாக சான்றி தழ் வழஙகப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேவி மாங்குடி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதி மன்றம் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம தீர்ப்பின்படி தேவிமாங்குடி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப் பேற்றார்.
இதனிடையே பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த பாண்டியராஜன் உள் பட சில உறுப்பினர்கள் ஒரு தரப்பாகவும், தேவிமாங் குடி உள்பட சில உறுப்பி னர்கள் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வந்தனர். இவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட முடி யாத நிலை இருந்து வந்ததும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார். அதனை எதிர்த்து துணைத் தலைவர் பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு நிலுவை யில் இருந்து வருகிறது.
கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்த உத்தரவு காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மழைக் காலம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அத்தியா வசிய பணிகளை மேற் கொள்ளவும், ஊழியர்க ளுக்கு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்ள ஏது வாக தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 203-ன் படி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளரின் அவசரகால அதிகாரங்களின்படி அடிப் படை நிர்வாகம் செயல்பட ஏதுவாக சிற்றுராட்சிகளின் மீது விதிக்கப்பட்ட கடமைக ளில் முதல் நிலை கையொப் பமிட ஊராட்சிமன்ற தலை வருக்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் (கிராம ஊராட்சி), இரண்டா மிடம் கையொப்ப மிட ஊராட்சிமன்ற துணை தலைவருக்கு பதிலாக சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தற்காலிக மாக அனுமதி அளித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தர விட்டுள்ளார்.
- ஏரிகளின் மதகுகளை விரைந்து சீரமைக்க பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்
- பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழுமத்தூர் ஏரியினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கிழுமத்தூர், ஓகளுர், கை.பெரம்பலூர் ஆகிய 3 ஏரிகளுக்காக நபார்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பீட்டில் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆய்க்குடி ஏரியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் உட்புறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட உத்தரவிட்டார். ஆய்வின் போது நீர்வளத்துறை மருதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் தினகரன், குன்னம் தாசில்தார் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- நீர்க்கசிவு ஏற்பட்ட பிளாட்பாரத்தின் மேல் கூரையை பார்வையிட்டார்.
- வடசேரி பஸ் நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் மேல் கூரையில் நீர்க்கசிவு ஏற்படுவதாக மாநகராட்சி மேயருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்க்கசிவு ஏற்பட்ட பிளாட்பாரத்தின் மேல் கூரையை பார்வையிட்டார்.
நீர்க்கசிவுக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரை தொடர்ந்து கழிவறையையும் ஆய்வு செய்தார். கழிப்பறையின் தரை தளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தவும், மேலும் கழிவு தேங்காமல் இருக்க உறிஞ்சி குழாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஏ.டி.எம்.மிஷின் களை நிறுவுவதற்கும், நடைபாதையில் இடை யூறாக இருக்கின்ற கடைகளை மாற்றுவதற்கும் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேரமாக பஸ் நிலையம் முழுவதும் ஆய்வு மேற்கண்ட மேயர் மகேஷ் பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் மேயர்மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளாட்பாரத்தின் மேல் கூரையில் நீர்க்கசிவு இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதை சரி செய்ய என்னென்ன நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. அப்போது மேல் கூரை மேல் தகர கூரைகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எனவே நீர்கசிவு ஏற்படும் பகுதிகளில் தகர கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது ஆணை யாளர் ஆனந்தமோகன் நகர்நல அதிகாரி ராம் மோகன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலை மை செயற்குழு உறுப்பி னர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.