search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
    X

    குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம்வர்கீஸ் மனுக்களை பெற்றார்.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    • மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் 274 மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொது மக்களிடம் கோரிக்கையில் 274 மனுக்கள் பெற்று உடனை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொது மக்களிடம் பெறக்கூ டிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் அப்துபோது தான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது, எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்றார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×