search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ordered"

    • தொடா் மழை காரணமாக டால்பின் நோஸ் காட்சிமுனைக்குச் செல்லும் சாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது.
    • விபத்துகளை தடுக்க போலீசார் அறிவுரை

    ஊட்டி,

    ஊட்டி,குன்னூரில் தொடா்மழை காரணமாக பகல் நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் குன்னூர் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு வாகனங்களில் செல்வோா் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    நீலகிரி மாவட்டம், குன்னூரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சிமுனை உள்ளது. இப்பகுதிக்குச் செல்லும் வழியில் உயா்ந்த மலைகள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

    மேகமூட்டத்துக்கு நடுவே அமைந்த டால்பினோஸ் பாறை, இம்மலையின் வலது மற்றும் இடது புறங்களில் உள்ள பரவ சமூட்டும் பள்ளத்தாக்குகள், மறுபக்கத்தில் கேத்தரின் அருவி என பல சுற்றுலாத்தலங்கள் உள்ளதால் இப்பகுதிகளைக் கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

    இந்நிலையில் தொடா் மழை காரணமாக டால்பின் நோஸ் காட்சிமுனைக்குச் செல்லும் சாலையில் பனி மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களைக் கண்டறிந்து வாகனங்களை இயக்குவது சிரமமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா்.

    பகல் நேரத்திலும் கடும் பனி மூட்டமாக உள்ளதால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனத்தை கவனமுடன் இயக்க வேண்டும் என காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஊட்டி - குன்னூரில் பல பகுதிகள் அடர்ந்த பனி மூட்டமாக காணப்படுவது சுற்றுலாபயணிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது

    • பெரம்பலூரில் மாற்றுத்திறனாளியின் நிலத்தை அளவீடு செய்ய மறுத்தமைக்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த விளாமுத்தூரை சேர்ந்தவா் விவசாயி சந்திரசேகர் (வயது 53). மாற்றுத்திறனாளியான இவர், நொச்சியம் கிராம எல்லையில் உள்ள ஏறத்தாழ 49 சென்ட் நிலத்தில் தனது மகன் சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார். இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிலம் அளப்பதற்குரிய கட்டணமும் செலுத்தியிருந்தார்.

    இதுதொடர்பாக சந்திரசேகர் நில அளவைத்துறையினரை பலமுறை நேரில் அணுகினார். ஆனால் அவரது மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கிராம மக்கள் சிலர் ஆட்சேபணை தெரிவிப்பதாக கூறி வட்ட துணை ஆய்வாளர், மனுதாரர் சந்திரசேகரின் நிலத்தை அளந்துகாட்டி, எல்லைக்கற்கள் நடாமல், அவரை அலையவிட்டுள்ளார். நில அளவைத்துறையினரின் அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான சந்திரசேகர், தனது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வட்ட துணை ஆய்வாளர், பெரம்பலூர் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நில அளவையர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். பெரம்பலூரில் சந்திரசேகரின் மனுவின் மீது உரிய தீர்வு காணாமல் சேவைக்குறைபாடு காரணமாக அவரை அலையவிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கியமைக்காக வட்ட துணை ஆய்வாளர் ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அவரது நிலத்தை அளவீடு செய்து நான்கு புறத்திலும் எல்லைக்கல் நட்டுத்தரவேண்டும் என்றும், அதனை அறிக்கையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், மேலும் மற்ற எதிர்மனுதாரர்களான தாசில்தார் முதல் கலெக்டர் வரை அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தனர்.

    • மதுரை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்.
    • என்ஜினீயருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க கோரி தமிழக அரசுக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது.

    மதுரை

    மதுரை சிலைமான் புளியங்குளத்தை சேர்ந்தவர் சையது முகமது. தேசிய நெடுஞ்சாலைத்துறையில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இவருடைய சகோதரர் ராஜா முகமது.

    இவர்கள் இருவரும் அக்காள்-தங்கையை திருமணம் செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக சையது மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டவர்கள் மீது மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை விசாரிக்குமாறு மேலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார், இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் அவர்கள் வெளி யில் வந்தனர்.

    இந்தநிலையில் சையது முகமது, மாநில மனித உரிமை கமிஷனில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    என் மீதும், எனது சகோரேர் மீதும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மேலூர் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் வழக்கு குறித்து முறையாக விசாரணை செய்வதற்கு எங்களை அழைக்கவில்லை. எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் 20 போலீசாருடன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி கடந்த 6.7.2019 அன்று எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    அங்கிருந்த என்னையும், என் சகோதரர் ராஜா முகமதுவையும் கடுமையாக தாக்கி, கைது செய்து அழைத்துச்சென்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை சுப்ரீம் கோர்ட்டு கூறிய வழிகாட்டுதல்களை மேலூர் அனைத்து மகளிர் போலீசார் பின்பற்றவில்லை.

    இதனால் எங்களின் கன்னியத்திற்கு பங்கம் ஏற்பட்டு, கடும் மன உளைச்சலுக்கு ஆளா னோம். எனவே இதற்காக உரிய இழப்பீடு வழங்கவும், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று கூறியி ருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த நிர்மலா தேவியின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.1 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவியிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

    மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கண்டம் தெரிவித்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது.

    வாஷிங்டன்:

    உலகம் முழுவதும் டுவிட்டரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை டுவிட்டர் நிறுவனம், பயனாளிகளின் கணக்கு பாதுகாப்புக்காக, அவர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரிகளை சேகரித்தது.

    ஆனால் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    டுவிட்டர் நிறுவனத்தின் இந்த நடைமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் டுவிட்டரின் முதன்மை வருவாய் அதிகரித்தது என்று பெடரல் டிரேட் கமிஷன் தலைவர் லினா காக் கோர்ட்டில் தெரிவித்தார்.

    இந்த புகாரில் 150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் (இந்திய மதிப்பு ரூ.1100 கோடி) செலுத்த வேண்டும் என்றும் பயனாளிகளின் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பெடரல் டிரேட் கமிஷன் தெரிவித்துள்ளது.

    கமிஷனின் இந்த கோரிக்கையை கூட்டாட்சி கோர்ட்டு அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்தால் டுவிட்டர் நிறுவனம் ரூ.1100 கோடி அபராதம் செலுத்த வேண்டும்.

    நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்குப் பருவமழையையொட்டி முன் கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருக்கிறேன்.

    அமைச்சர்களும் இதுபோன்ற நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வீடுகளில் மழைநீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்

    இந்நிலையில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மக்களின் இன்னல்களைப் போக்கிட தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க.வினர் உதவ வேண்டும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    சாலை விபத்தில் பலியான பெண் என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.26½ லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என மோட்டார் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி-பத்மா தம்பதிகளின் மகள் ஸ்ரீமதி. என்ஜினீயரிங் படித்திருந்த இவர் இருங்காட்டுகோட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முத்து சுப்பிரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் ரெட்டேரியில் இருந்து மணலிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது தொடர்பாக மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் லாரி உரிமையாளர் மோகன், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருமான முத்து சுப்பிரமணி தந்தை ஜெய சங்கர் ஆகியோர் ஸ்ரீமதி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

    வழக்கு விசாரணையின் போது பதிலளித்த ஐ.சி.ஐ. சி.ஐ. லாம்பார்ட், இன்சூரன்ஸ் நிறுவனம், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது. லாரி சாலை ஓரமாக தான் நிறுத்தப்பட்டு இருந்தது என்று கூறி இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் கூறும்போது, “முத்து சுப்பிரமணி மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி லாரி மீது மோதி இருக்கிறார். அவர் கவனமாக வாகனத்தை ஓட்டி இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்கலாம். அதே போல் லாரியை ஒழுங்காக சாலையில் நிறுத்தி இருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை ஓட்டியவர், லாரி டிரைவர் இருவர் மீதும் தவறு உள்ளது.

    எனவே லாரி உரிமையாளர் மோகன், ஐ.சி.ஐ.சி.ஐ. இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஜெயசங்கர், மோட்டார் சைக்கிள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள நே‌ஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு என ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு தொகையை ஸ்ரீமதி குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனை அழைத்து கவர்னர் சதாசிவம் விளக்கம் கேட்டார். #sabarimala #Sathasivam #PinaraiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டுள்ளது.

    சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்லக்கூடாது, இரவு நேரத்தில் சன்னிதானத்தில் தங்க கூடாது, சரண கோ‌ஷம் எழுப்பக்கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

    அதே போல பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து கேரள அரசு பஸ்கள் மூலம் மட்டுமே அவர்கள் பம்பை செல்ல முடியும்.

    இது போன்ற கெடுபிடிகள் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. இதுவரை சபரிமலையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகும்.

    சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. பக்தர்கள் குழுவாக செல்லவும் சன்னிதானத்தில் சரண கோ‌ஷம் எழுப்பவும் தடை விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

    சபரிமலை சென்ற மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவை எல்லாம் கேரள கவர்னர் சதாசிவம் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை நேரில் அழைத்து விளக்கம் கேட்டார்.

    சபரிமலை செல்லும் அனைத்து அய்யப்ப பக்தர்களையும் குற்றவாளிகள் போல கருதக் கூடாது. பக்தர்களிடம் போலீசார் கெடுபிடி செய்து தாக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். சபரிமலையில் தற்போதைய நிலவரம், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கவர்னரிடம், பினராயி விஜயன் விளக்கி கூறினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

    கேரள ஐகோர்ட்டு மற்றும் கவர்னரின் தலையீட்டை தொடர்ந்து சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகள் சற்று குறைந்து உள்ளது. இனி அய்யப்ப பக்தர்கள் குழுவாக சபரிமலை செல்லவோ, சன்னிதானத்தில் சரண கோ‌ஷம் எழுப்பவோ, இரவு அங்கு தங்கவோ எந்த தடையும் கிடையாது.

    அதே சமயம் சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வருகிற 26-ந்தேதி நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு சபரிமலையில் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் கெடுபிடிகள் குறைந்துள்ளதால் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. நேற்று தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள்.

    சபரிமலையில் கெடு பிடிகள் குறைந்துள்ளதைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் வருகை சற்று அதிகரித்துள்ளது. நேற்று வலியநடைபந்தல் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. இனி வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

    சபரிமலை வரும் பக்தர்கள் அரவணை மற்றும் அப்பம் பிரசாதத்தை போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள். கடந்த ஆண்டு இந்த பிரசாதத்துக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் இந்த முறை 3 லட்சம் டின் வரை அரவணை தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரவணை விற்பனை மிகவும் குறைவாகவே உள்ளது.  #sabarimala #Sathasivam #PinaraiVijayan
    பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் அந்த பாருக்கு சீல் வைக்க காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். #DenguFever
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகின்றன.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பொன்னையா இன்று அதிகாலை காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழிவு நீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார்.

    பின்னர் ரெட்டிப்பேட்டை பகுதியில் உள்ள கோழிக்கறி கடை மற்றும் ஐஸ் பேக்டரிகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.

    இந்தபகுதியில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாததாலும் முறையான அனுமதி இல்லாமல் மதுபான பார் செயல்பட்டதாலும் உடனடியாக அந்த பாருக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் அனுமதி இல்லாமல் பார் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

    மாவட்டத்தில் சுகாதாரத்தை உறுதி செய்ய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமான இடங்களை சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. #DenguFever
    தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மீது நடிகை ரோஜா அளித்த புகாரில் வழக்கு பதிய வேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#ActorRoja #TeluguDesamParty

    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜாவை, பெணமலூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பொடே பிரசாத் அவதூறாக பேசி பேட்டி கொடுத்தார்.

    இதையடுத்து ரோஜா போலீசில் பொடெ பிரசாத் மீது புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதுதொடர் பாக ரோஜா ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

     


    அதில், என்னைப்பற்றி அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய பொடே பிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விடவேண்டும் என்று கூறி இருந்தார்.

    மேலும், பொடே பிரசாத் பேசிய சிடியையும் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், பெண் எம்.எல்.ஏ.வான ரோஜா பற்றி பொடே பிரசாத் தரக் குறைவாக பேசி இருக்கிறார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.#ActorRoja #TeluguDesamParty

    தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க வாலிபர் ஜாமினுக்கு மனு தாக்கல் செய்த நிலையில், நள்ளிரவில் தட்டச்சு செய்ய ஆளில்லாததால் நீதிபதி கைப்பட தீர்ப்பு எழுதி உத்தரவிட்டார்.

    சென்னை:

    ராயபுரத்தை சேர்ந்தவர் டேவிட்சன். அதேபகுதியை சேர்ந்த பெண்ணை வாய் தகராறில் தாக்கிய வழக்கில் இவர் கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று மரணம் அடைந்தார்.

    இவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக டேவிட்சன் தனது வக்கீல் ஏ.கே. கோபால் மூலமாக மனு தாக்கல் செய்தார்.

    ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா வீட்டில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் கோபால் மனு அளித்தார். இதனையடுத்த நீதிபதி ஜெகதீஷ்சந்த்ரா, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் அனுமதி பெற்று ஜாமீன் மனுவை விசாரித்தார்.

    இதுபற்றி தலைமை குற்றவியல் வக்கீல் எமலியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    ஜாமீன் மனு தொடர்பான விசாரணையில் அரசு தரப்பில் ஆஜராவதற்காக வக்கீல் முகமது ரியாஸ் நியமிக்கப்பட்டார்.

    இதனையடுத்து நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா, தனது வீட்டிலேயே ஜாமீன் மனுவை விசாரித்தார். ராயபுரம் போலீசாருக்கும் அரசு வக்கீலும் வீட்டுக்கே சென்றனர்.

    வாலிபர் டேவிட்சன், தந்தை விஜயகுமாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு வசதியாக அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    ஜாமீன் உத்தரவு கோர்ட்டில் தட்டச்சு செய்து வழங்கப்படுவது வழக்கம். நள்ளிரவில் தட்டச்சு செய்ய யாரும் இல்லாததால் நீதிபதி ஜெகதீஷ் சந்த்ரா தனது கைப்பட ஜாமீன் உத்தரவை எழுதினார். இன்று முறைப்படி தட்டச்சு செய்து கொடுக்கப்படுகிறது. புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுதலை செய்யப்படுகிறார். #tamilnews

    கூவம் மற்றும் அடையாறு கரையோரத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். #ChennaiCorporation

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை நகரத்தில் 2015-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம், சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களே என நீதி மன்ற ஆணைகளின்படி நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியாக உள்ளது.

    அந்த அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

    கூவம், அடையாறு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கும் நாவலூர், திருவொற்றியூர், எழில்நகர் ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடையாறு நதியின் கரையோரம் 9,539 குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர் என கண்டறியப்பட்டு, 4,134 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, கூவம் நதியோரம் 14,257 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 6,879 குடும்பங்கள் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக் கால்வாய்கள் ஓரம் மொத்தம் 3,041 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இவர்களில் 1,671 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    விரிவாக்கப்பட்ட பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் வெள்ளத்தடுப்பு கட்டும் பணி மேற்கொள்ள நான்கு கால்வாய்களின் ஓரம் வசித்த 81 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கண்டறியப்பட்டு, 81 குடும்பங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கூவம் நதி, அடையாறு நதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழிக்கால்வாய்களில், 26,837 குடும்பங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கண்டறியப்பட்டு, இதுவரை 12,765 குடும்பங்கள் தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி, மறுகுடியமர்வு செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiCorporation

    விபத்தில் உயிரிழந்த சென்னை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.16½ லட்சம் நஷ்டஈடு வழங்க இன்சூரன்சு நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ஆர்.நாராயணன். இவரது மகன் மணிகண்டன் (20). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ‘சூப்பர்வைசர்’ ஆக பணிபுரிந்தார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் டேங்கர் லாரியில் அமர்ந்து பயணம் செய்தார். அவருடன் 2 ஊழியர்களும் இருந்தனர். அப்போது நடந்த விபத்தில் லாரி கவிழ்ந்து மரணம் அடைந்தார்.

    இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே விபத்தில் இறந்த மணிகண்டனின் தந்தை நாராயணன் சென்னையில் உள்ள மோட்டார் விபத்துகள் இழப்பீடு நடுவர்மன்ற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    எனது மகன் மணிகண்டன் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கி வந்தது. தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் லாரியை ஓட்டியதால் விபத்த ஏற்பட்டுள்ளது. எனவே லாரி நிறுவனமும், தனியார் இன்சூரன்சு நிறுவனமும், ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் விசாரணையின் போது லாரி நிறுவனம் ஆஜராகவில்லை. தனியார் இன்சூரன்சு கம்பெனியும் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

    ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ரமேஷ் விபத்தில் மரணம் அடைந்த மணிகண்டன் குடும்பத்துக்கு தனியார் இன்சூரன்சு நிறுவனம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் நஷ்டஈடு தொகையை 2015-ம் ஆண்டு முதல் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார். டிரைவர் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். #Tamilnews

    ×