search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "misadventure"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது.
    • காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்

    புதுடெல்லி:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண் 14) புறப்பட்டு சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காலை 8.10 மணியளவில் அச்சரப்பாக்கம் அடுத்த தொழப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது முன்னால் இரும்பு கம்பியை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் இடது புறத்தில் இருந்த லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதும் நொறுங்கியது.

    இடதுபுற இருக்கைகளில் ஜன்னல் ஓரம் இருந்த 3 ஆண்கள், 2 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில், மேல் மருவத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மற்றொரு ஆண் பயணியும் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

    எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது. காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஆந்திரா வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வத்திகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராவ் மகன் வேமண்டு சீனு (வயது 38). இவர் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பாபநாசம் அருகே மேல செம்மங்குடி கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேமண்டுசீனு பாபநாசத்திற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தங்கி வேலை பார்க்க கூடிய இடத்திற்கு அரயபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் ஒன்பத்துவேலி மாதா கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வேமண்டு சீனு மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வேமண்டுசீனு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த சுரேசை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவர் கறம்பக்குடியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கார்த்திகா ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் சுப்பிரமணியன் சம்பவத்தன்று கறம்பக்குடியில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ராங்கியன் விடுதிக்குச் சென்றார். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு அவர் மட்டும் ஆட்டோவை ஓட்டி கொண்டு கறம்பக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பிள்ளகுறிச்சி சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை, அப்பகுதி மக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை பயணத்திற்கு ஏற்றபடி இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம், கீழ்பக்கம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், இரவில் கடைக்குச் சென்று உணவு அருந்தியுள்ளார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    ராமகிருஷ்ணாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அவர் வந்தபோது குண்டும், குழியுமான சாலையால் தவறி கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் அங்கு ராஜபாளையத்தில் இருந்து தேனி சென்ற அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் சந்திரசேகர் சிக்கிக் கொண்டார். சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நகமங்கலத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (15 ). இவர் வீட்டிலிருந்து அச்சங்குளம் சென்று கொண்டிருந்த போது கூனம்குளம் கண்மாய் கரையில் இருந்த இலுப்பை மரம் எதிர்பாராத விதமாக சாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மன்னார்குடியில் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ஐவர்சமாது பகுதியை சேர்ந்தவர் அமுதா. கணவரை இழந்த இவர் தன் தாயாருடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தாராம். அப்போது பூட்டிய வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து, மன்னார் குடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அவரது வீடு முற்றிலும் பற்றி எரிய தொடங்கியது. சுமார் 20 அடிக்கும் மேல் தீ எரிந்தது. இதனால் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இதற்குள் கூத்தாநல்லூரில் இருந்து, மற்றொரு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தது, சுமார் 2 மணிநேரம், கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது, வேகமாக பரவிய தீயினால் அருகிலிருந்த ராஜேந்திரன் என்பவரின் வீடும் தீப்பிடித்து கடும் சேதமடைந்தது.

    மன்னார்குடி டி.எஸ்.பி.அசோகன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், மேலும் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேர் விபத்தில் சிக்கியதால், போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பேரையூர்:

    திருமங்கலம் கலை நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஸ்வம் (வயது 16) தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று கடைக்குச் சென்ற விஸ்வம், கையில் செல்போனை எடுத்துச் சென்றார். அதனை பார்த்துக் கொண்டே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் விஸ்வத்தின் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் விஸ்வம் புகார் செய்தார். அப்போது செல்போன் பறித்த மர்ம நபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் நம்பர் பற்றியும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு 11 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அது செல்போன் பறித்தவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது.

    அதில் வந்த லோகேஸ்வரன் (25), ராகுல் ரோ‌ஷன் (18) ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாயல்குடி அருகே ஏடிஎம் பணம் 1.20 கோடி கொள்ளை போனதாக கூறப்பட்ட புகாரில் பணத்தை கொண்டு சென்ற பாதுகாப்பு ஊழியர்களே அதனை திருடி நாடகமாடியது தெரிய வந்துள்ளது. #AtmMoneyRobbery

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

    நேற்று சிவங்கையைச் சேர்ந்த அன்பு (வயது28), திருப்பாலைக்குடி வீரபாண்டி (54), இளையான்குடியைச் சேர்ந்த குருபாண்டி (22) மற்றும் சத்திரக்குடியைச் சேர்ந்த டிரைவர் கபிலன் (23) ஆகியோர் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்ப ரூ.1 கோடியே 60 லட்சத்தை கொண்டு சென்றனர்.

    இதில் ரூ.40 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பிய அவர்கள் மீதம் உள்ள பணத்தை சாயல்குடி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பாதுகாப்பு வேனில் சென்றனர்.

    கடலாடி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் வேன் சென்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததாகவும், அப்போது மர்ம நபர்கள் வேனில் இருந்த ரூ.1 கோடியே 20 லட்சத்தை திருடிக்கொண்டு சென்றதாக பணத்தை கொண்டு சென்ற 4 ஊழியர்களும் சாயல்குடி போலீசில் புகார் தெரிவித்தனர்.


    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் மற்றும் போலீசார் 4 ஊழியர்களையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 4 பேரும் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து 4 பேரையும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வேனை கவிழ்த்து விட்டு பணத்தை இவர்களே எடுத்துக் கொண்டு திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அன்பு, வீரபாண்டி, கபிலன், குருபாண்டி ஆகிய 4 பேரையும கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.32 லட்சத்தை கைப்பற்றினர். மீதமுள்ள பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AtmMoneyRobbery

    ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலைய பக்கவாட்டு சுவரில் மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து விபத்து நடந்த பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. #TrainAccident #StThomas

    ஆலந்தூர்:

    கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள், பக்கவாட்டு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து, இந்த பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் செல்வது நிறுத்தப்பட்டது. ஜூலை மாதம் 25-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் பரங்கிமலை ரெயில் நிலையம் வந்து அதிகாரிகளிடமும், பொது மக்களிடமும் கருத்து கேட்டார்.

    அதை தொடர்ந்து விபத்து நடந்த 4-வது பிளாட்பாரத்தை 2 அடி நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

    இரவு பகலாக தண்டவாளத்தை மாற்றும் வேலை நடந்தது. அது இப்போது முடிவடைந்துள்ளது. இந்த பிளாட்பாரத்தின் வழியாக தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே செல்லுகின்றன. மின்சார ரெயில்கள் விடப்படவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் இன்று பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அங்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள 4-வது பிளாட்பாரத்தை பார்வையிட்டார். அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    4-வது பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி சிறப்பாக நடந்துள்ளது. ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கருத்துக்களை கேட்ட பின்னர் இந்த பிளாட்பாரத்தின் தண்டவாளம் 2 அடி நகர்த்தப்பட்டுள்ளது. அதிகமான பயணிகள் தொங்கிக் கொண்டு சென்றதால்தான் பக்கவாட்டு சுவரில் அவர்கள் மோதி விழுந்துள்ளனர்.

    அடுத்து தானாக மூடும் கதவுகளை கொண்ட ரெயில் பெட்டிகளுடன் மின்சார ரெயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த பிளாட்பாரத்தில் மீண்டும் மின்சார ரெயில்களை விடுவது பற்றி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TrainAccident #StThomas

    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திண்டிவனம்:

    நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மீனாட்சிமுத்து (49), நெல்லையை சேர்ந்த மல்லிகா (60), தினேஷ்பாபு (27), சென்னையை சேர்ந்த சுசீலா (45), மேரிநிர்மலா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் (90), சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜகுமாரி (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை நடந்த சாலை விபத்தில் 370 பேர் பலியானதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார். #accident

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை நடந்த சாலை விபத்தில் 370 பேர் பலியானதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.

    சாலை விபத்துகளை குறைப்பது குறித்து விழிப்புணர்வு முகாம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் இன்று நடந்தது. எஸ்.பி. பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி.க்கள் அதிவீரபாண்டியன், ஆசைதம்பி, டி.எஸ்.பி.க்கள் ஸ்ரீதரன், அலெக்ஸ், பெண்கள் வன் கொடுமை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.க்கள் ஜெயசுப்பிரமணியன், ராதா கிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன் மற்றும் அசோகன் (தனிப்பிரிவு), மணி (வேலூர் போக்குவரத்து), சுந்தர மூர்த்தி (சத்துவாச்சாரி போக்குவரத்து) மற்றும் பள்ளி வாகன டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் எஸ்.பி. பிரவேஷ்குமார் பேசியதாவது:- சாலைகளை அனைவரும் பயன்படுத்துகிறோம். வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 370 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விபத்தில் உயிர் இழப்புகள் குறைவு தான்.

    இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தில் இறக்கின்றனர். சாலை விதிகளை மதித்து நடந்தாலே விபத்துகளை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும். குடித்து விட்டும், செல்போன் பேசிய படியும் வாகனங்களை ஓட்ட கூடாது.

    வாகனங்களை ஓட்டுபவர் தங்கள் குடும்ப நலனையும், எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளன் குடும்ப நலனையும் மனதில் வைத்து ஓட்ட வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. அதி வீரபாண்டியன் பேசுகையில், பள்ளி வாகனங்களில் டிரைவர்களும், உதவியாளர்களும் மாணவ, மாணவிகளிடம் பாதுகாப்போடு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். ‘குட் டச்... பேட் டச்’ தொடுதலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    ஊனமுற்ற மாணவ, மாணவிகளை வாகனங்களில் ஏற்றும் போது மட்டுமே உதவி செய்ய வேண்டும். அதுவும் சரியாக பிடித்து தவறான தொடுதல் இல்லாமல் உதவ வேண்டும்.

    தவறான தொடுதல் உள்ளிட்ட பாலியல் புகார் வந்தால், போக்சோ சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும். 50 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளுக்கு போக்சோ சட்டப்பிரிவுகள் வழி வகுக்குகின்றன. கைதாகும் நபர்களின் குடும்பமே பாதிக்கப்படும் என்றார். #accident

    கேரளாவில் கார் விபத்தில் காயமடைந்த மாணவி ஹனான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பேஸ்புக்கில் நேரடி ஒளிப்பரப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். #Hanan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹனான், கல்லூரி மாணவி. படிப்பு செலவிற்காக மாணவி ஹனான் தெருக்களில் மீன் விற்று பணம் திரட்டினார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து மாணவி ஹனான் பிரபலமானார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இச்சம்பவத்திற்கு பிறகு மாணவி ஹனானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்தன. அவர், தனது செலவிற்கு கிடைத்த பணத்தில் சிறு தொகையை கேரள வெள்ள நிவாரண நிதிக்கும் அளித்தார்.

    மேலும் ஹனான் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பினார். அப்போது ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கார் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இதில் ஹனான் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஹனானை மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவி ஹனான்னுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சியை பதிவு செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக பதிவிட்டார். மேலும் ஹனானுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சியை நான்தான் முதலில் பதிவிட்டுள்ளேன் என்றும் குறிப்பு அனுப்பினார்.

    வாலிபரின் செய்கையால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சிகிச்சை அறையில் இருந்து வெளியேறுமாறு கூறினர். ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளும் வாலிபரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர் இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இதுபற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனுமதியின்றி ஹனானின் சிகிச்சை காட்சிகளை பதிவு செய்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவர், பேஸ்புக்கில் பதிவிட்ட காட்சிகள் அடிப்படையில் அவரை தேடி வருகிறார்கள். #Hanan
    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணம் செய்த போது சுவரில் மோதி பலியான நாசரேத் என்ஜினீயர் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    நாசரேத்:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள். இந்த விபத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் அதே இடத்தில் நடத்த விபத்தில் விக்னேஷ்(20), ஸ்டீபன் முத்துராஜ்(23) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

    விக்னேஷ் தாம்பரம் சேனடோரியத்தை சேர்ந்தவர் ஆவார். ஸ்டீபன் முத்துராஜ் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர். ஸ்டீபன் முத்துராஜின் தந்தை ஐசக் ஜோதிராஜ் நாசரேத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது தாய் பியூலாபுல்மணி மூக்குப்பீறியில் ஒரு பாலர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஸ்டீபன் முத்துராஜுக்கு சுரேஷ் ஆல்வின் பால் (20), பெவின் புஷ்பராஜ் (18) ஆகிய 2 சகோதரர்கள் உள்ளனர். ஐசக் ஜோதிராஜ் தனது குடும்பத்துடன் நாசரேத் பிரகாசபுரத்தில் குடியிருக்கிறார்.

    ஸ்டீபன் முத்துராஜ் என்ஜினீயரிங் படித்துள்ளார். அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இதனால் அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கியிருந்தார். விக்னேசும், ஸ்டீபன் முத்துராஜ் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பணி புரிகிறார். இதனால் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

    அவர்கள் தினமும் ஒரே ரெயிலில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் வேறொரு நிறுவனத்தில் பணிக்கு சேர நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவர்கள் இரவில் மின்சார ரெயிலில் திரும்பி வந்தனர். பரங்கிமலை அருகே வந்த போது விக்னேசின் தோளில் மாட்டியிருந்த பை, தடுப்பு சுவரில் சிக்கியதால் ரெயிலில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

    ஸ்டீபன் முத்துராஜ் இறந்த சம்பவம் நாசரேத் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னையில் இருந்து சொந்த ஊரான நாசரேத்துக்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    மகன் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகும் முன்பே பலியாகிவிட்டானே என அவரது தாய் பியூலாபுல்மணி மற்றும் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது. ஸ்டீபன் முத்துராஜ் கல்லூரி படிக்கும் போது தனது தந்தை கடை வைத்து கஷ்டப்பட்டு வேலை செய்ததை பார்த்து, காலையில் வீடு வீடாக பேப்பர் போட்டுக்கொண்டே படித்தார் என்று அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    ×