search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரபரப்பு"

    • 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக தகர கொட்டகை அமைக்கப்பட்டது.
    • போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கடந்த 1959-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி 2 கட்டிடங்கள் மூலம் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பழுது காரணமாக இடிக்கப்பட்டது.

    மீதம் இருந்த ஒரு கட்டிடம் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தின் போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் இல்லை.

    இரண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர கொட்டகையில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 63 பேரும் நெருக்கடியில் இருந்து வருகின்றனர்.

    தற்போது மழை காலத்தில் சாரல் விழுவதால் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்து வந்தனர்.

    தகவறிந்து நேரில் வந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், காவல் ஆய்வாளர் காவேரி சங்கர் விரைவில் பள்ளி கட்டிடம் கட்டி தரப்படும் என உறுதி கூறினர்.

    இருப்பினும் பெற்றோர்கள், மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பரமத்தி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே  உள்ள மாவுரெட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). விவசாயி. இவரது பாட்டி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார். 

    இந்நிலையில் அந்த கூரை வீட்டுக்குள் 6 அடி நிளமுள்ள சாரைப்பாம்பு சென்றுள்ளது.  இதனால் மூதாட்டி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை விரட்டினார்கள். ஆனால் பாம்பு அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வரவில்லை. 

    இதுகுறித்து பிரபாகரன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலை–மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று வீட்டுக்குள் இருந்த 6அடி நீளமுள்ள சாரைப்பாம்பை குச்சியால் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டு அருகாமையில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
    தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை பெண்கள் திருடி சென்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர்.அவர்கள் நகை வாங்குவது போல் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர்.

    செயின் வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் தங்க செயினை திருடி பேக்கில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் செயினை டேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர். 

    இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்  செயினை பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து கடை உரிமையாளர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த  கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாகவில்லை. இருந்தா லும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய அரிவாளுடன் பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் தனிப்படைபோலீசார் இன்று காலை மாதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

    அங்கு 7பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்த அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள், ஆவடியை சேர்ந்த பிரகாஷ்,புத்தாகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த இசாக், திருமுல்லைவாயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஐசக் ராபர்ட் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்டவர்கள் பெரம்பூரை சேர்ந்த 3 பேரை தீர்த்து கட்ட அரிவாளுடன் பதுங்கி இருந்தது. விசாரணையில் தெரியவந்தது. கைதான பிரகாஷ், பாலகிருஷணன் ஆகியோருக்கும் பெரம்பூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்றுமாலை தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இந்த மோதலில் பெரம்பூரை சேர்ந்த 3 வாலிபர்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    சரியான நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்ததால் கொலைதிட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ×