என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டி.என்.பாளையம் அருகே இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.
தற்போது கோடை காலம் நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் காட்டை விட்டு வெளியேறிகிறது.
இது வரை இப்படி வெளியேறும் யானைகள் ஊரையொட்டி உள்ள தோட்டங்களில் மட்டும் தான் புகுந்து வந்தது. விவசாயிகள் அதை காட்டுக்குள் விரட்டி வருகிறார்கள்.
ஆனால் இதுவரை இல்லாத அதிர்ச்சி சம்பவமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒற்றை யானை ஒன்று வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது.
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் போலீஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் இந்த யானை அட்டகாசமாக நடந்து சென்றதை பார்த்த அந்த பகுதி மக்களும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் அந்த யானை யாரையும் தாக்கவில்லை. எந்த அட்டகாசமும் செய்ய வில்லை. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரேஞ்சர் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஒற்றை யானையை சத்தமிட்டப்படி விரட்டினர். எருமை குட்டை வழியாக அந்த யானை காட்டுக்குள் புகுந்தது.
அதிகாலை 2 மணிக்கு புகுந்த அந்த ஒற்றை யானை காலை 6.30 மணிக்கு காட்டுக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்