search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snake"

    • கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
    • பாம்பு வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம்.

    கண்ணூர்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28). டெக்னீஷியனான இவர் கடம்பேரி பகுதியில் உள்ள பாபு என்பவரது வீட்டில் சலவை எந்திரத்தை பழுதுபார்க்க சென்றார். அங்கு எந்திரத்தை இயக்க முயன்றபோது, உள்ளே ஏதோ ஒன்று சுழல்வதை கண்டார். அது துணி என நினைத்து எந்திரத்திற்குள் கையை நீட்டி எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரியவந்தது. உடனே ஜனார்த்தனன் கையை மேலே தூக்கினார். இதை பார்த்த அவர், பாபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை என்று பாபு கூறினார்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப்பாம்பு ஆகும். வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன.
    • 9 வது முறை பாம்பு தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டும் 7 முறை தன்னை விஷப்பாம்புகள் கடித்துள்ளதாக அவர் தெரிவித்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார்.

    இதன்பிறகு ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தன்னை பாம்பு கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் அவர் தெரிவித்தார்.

    சனி ஞாயிற்றில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று இந்த விவாகரத்தில் மருத்துவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

    இதனையடுத்து விகாஸின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக பத்தேபூர் ஆட்சியர் இந்துமதியின் உத்தரவின்பேரில் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த விசாரணையில், விகாஸ் தூபேவை இதுவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    முதல்முறை பாம்பு கடித்ததில் பயம் ஏற்பட்டு (Snake Phobia) தன்னை அடிக்கடி பாம்பு கடித்ததாக எண்ணி விகாஸ் தூபே அச்சப்பட்டுள்ளார்.  ஆகவே அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது.
    • சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.

    ராஜஸ்தானில் ஷூவுக்குள் பதுங்கிய பாம்பு ஒன்று படமெடுத்து சீறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை கொட்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு மனிதனின் குடியிருப்புகள்கூட சேதம் அடைந்துள்ளன.

    இதுபோன்ற காலங்களில், நிலத்தில் சந்துபொந்து, இண்டு இடுக்குகளில் வாழும் உயிரினங்களின் வாழ்விடங்கள் அதிக அளவில் சேதம் அடைந்து அவை வீதிக்கு வருகின்றன. குறிப்பாக பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பான, மேடான வாழ்விடங்களைத் தேடி மனிதனின் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுவது வாடிக்கை. புதர் மண்டிய பகுதிகள், ஒதுக்குப்புறமான வீடுகளில் பாம்புகள் புக அதிக வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தானை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரர், நீரஜ் பிரஜாபத், ஒரு வீட்டில் சிறுவர்களின் ஷூவில் பதுங்கியிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அதுபற்றிய வீடியோக்கள்தான் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் அதில் ஒரு பாம்பு பதுங்கியிருப்பது மேலோட்டமாக பார்த்தபோதே தெரிந்ததால் வீட்டின் உரிமையாளர், பாம்புபிடிவீரரை அழைத்துள்ளார். அவர் வந்து பாம்பு பிடிக்கும் குச்சியால் காலணியை தொட்டதும், அதில் பதுங்கியிருந்த பாம்பு சீறியபடி வெளியே வந்தது. அது படமெடுத்தபடி நிற்கும் காட்சி பார்ப்பவர்களை மிரள வைத்தது.

    நீரஜ், அந்த பாம்பை லாவகமாக பிடித்ததுடன், அதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப பொத்தானை அழுத்தி உள்ளனர்.

    • கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.
    • 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.

    பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டுமே இவர் 7 முறை விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

    அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் குணமாகி வீடு திரும்பிய அவரை மீண்டும் இன்று [ஜூலை 13] சனிக்கிழமை வந்து பாம்பு கண்டித்துள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராமத்தின் அருகில் உள்ள ஒரே மருத்துவமனையில் அவர் மீண்டும் மீண்டும் சிகிச்சை பெற்று வருவதால் அவரது நிலைமை மோசமாகியுள்ளது. சனி ஞாயிறில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று மருத்துவர்களும் குழப்பத்தில் உள்ளனர். 

    • கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது.
    • அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    பாம்புகள் வஞ்சம் வைத்து கடிக்கும் என்பது வாய்மொழிக் கதையாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. ஆனால் கதைகளேயே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்து வரும் சம்பவம் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் ௨௪ வ்யாவிகாஸ் தூபே. கடந்த 35 நாட்களில் மட்டுமே  இவர் 6 முறை  விஷப் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கியுள்ளார்.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடிதித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 5 வது முறையாக பாம்பு கடித்துள்ளது.

     

    அதன்பின் சிகிச்சை பெற்று அவர் தனது வீட்டுக்கே திரும்பிய நிலையில் நேற்று அவரை மீண்டும் பாம்பு கடித்துள்ளது. தற்போது 6 வது பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று உயிர்பிழைத்துள்ள தூபே பேசுகையில், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    • மூச்சு விட முடியாமல் பாம்பு தவித்து கொண்டிருந்தது.
    • வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாகப்பாம்பு ஒன்று, தூக்கி எறியப்பட்ட இருமல் மருந்து பாட்டிலை விழுங்கி உள்ளது. அந்த பாட்டில் பாம்பின் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் பாம்பு தவித்து கொண்டிருந்தது.

    இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்த தன்னார்வலர்கள் கொக்கி முனையால் நாகப்பாம்பின் கீழ் தாடையை மெதுவாக விரித்து அந்த பாட்டிலை எடுத்தனர். பின்னர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    இதுகுறித்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார்.
    • சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர்.

    நவாடா:

    பாம்பு கடித்து இறந்தவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கடித்த பாம்பை வாலிபர் ஒருவர் திருப்பி கடித்ததில் அந்த பாம்பு இறந்துள்ளது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    பீகார் மாநிலம் நவாடாவில் உள்ள ராஜவுலி வனப்பகுதியில் ரெயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பாண்டுகா பகுதியை சேர்ந்த சந்தோஷ் லோகர் (வயது 35) என்ற வாலிபரும், அப்பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2-ந்தேதி இரவு சந்தோஷ் லோகர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து அப்பகுதியில் உள்ள தங்களது முகாம்களுக்கு சென்று தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு பாம்பு சந்தோஷ் லோகரை கடித்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பாம்பு கடித்ததால் ஆவேசமடைந்த சந்தோஷ் லோகர் உடனே அந்த பாம்பை பிடித்து கடித்தார். மூன்று முறை அவர் பாம்பை தொடர்ந்து கடித்ததால் அந்த பாம்பு இறந்துபோனது.

    இதற்கிடையே சத்தம் கேட்டு சக தொழிலாளர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் பாம்பு கடிபட்ட சந்தோஷ் லோகரை அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் சதீஷ் சந்திரசிங்கா சிகிச்சை அளித்தார். தீவிர சிகிச்சைக்கு பின் சந்தோஷ் லோகர் வீடு திரும்பி உள்ளார்.

    பாம்பு கடித்தால், கடித்த பாம்பை திருப்பி 3 முறை கடிக்க வேண்டும் என்று தங்களது கிராமத்தினர் கூறுவதாகவும், அதன்படியே பாம்பை கடித்ததாகவும் சந்தோஷ் லோகர் கூறி உள்ளார்.

    • அங்கன்வாடியில் இருந்து அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு உணவு பொருள் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.
    • குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரத்தில் 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அங்கன்வாடிகள் மூலம் மதிய உணவு மற்றும் கொண்டை கடலை, பச்சை பயறு, கோதுமை போன்ற உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் சாங்கிலி மாவட்டம் பாலஸ் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் இருந்து அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு உணவு பொருள் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்டை திறந்தபோது, அதில் சிறிய அளவிலான பாம்பு செத்து கிடந்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உணவுப்பொருளில் பாம்பு கிடப்பதை செல்போனில் படம் பிடித்தனர். மேலும் அது குறித்து அங்கன்வாடி பணியாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அங்கன்வாடி பணியாளர் உணவுப்பொருளில் பாம்பு இருக்கும் படத்தை மாவட்ட அங்கன்வாடி பணியாளர்கள் வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்தார். இதையடுத்து இந்த சம்பவம் அம்பலமானது.

    இந்த பிரச்சினை குறித்து கடந்த 2-ம் தேதி நடந்த சாங்கிலி ஜில்லா பரிஷத் துணை தலைமை நிர்வாக அதிகாரி கூட்டத்தில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட உணவுப்பொருள் இருந்த குடோன் உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டது.

    • விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
    • தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா? கெட்டதா என்று பார்க்கலாம்.

    நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பாம்புகள் துரத்துவது போல அடிக்கடி கனவில் வரும். சிலருக்கு பாம்புகள் கொத்தி விடும். அந்த கனவு வந்த உடன் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பாம்பு கனவில் வந்தால் குறிப்பாக விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

    நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.

    பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும். இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும். கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.

    பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் அரசு அல்லது தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

    அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.

    • வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு குவினாவை தீண்டியது.
    • முன்னதாக பாம்புடன் வந்த பெற்றோரால் ஆஸ்பத்திரி வளாகத்தி பரபரப்பு நிலவியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சங்கம் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன், விவசாயி. இவரது மகள் குவினா (வயது 17 ). இவர் கல்லாகோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குவினா தனது பெற்றவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு குவினாவை தீண்டியது. உடனே விழித்துக் கொண்ட மாணவி தனது பெற்றோரை எழுப்பி கூறியுள்ளார்.

    துரிதமாக செயல்பட்ட மதியழகன் தனது மகளை கடித்த பாம்பை அடித்து ஒரு பையில் போட்டுக் கொண்டு தனது மகளையும் அழைத்துக் கொண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குவினா இன்று காலை கண்விழித்து தனது பெற்றோர்களிடம் பேசினார். மருத்துவர்கள் கூறும்போது மாணவி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்பலாம் என்றும் கூறினார்கள்.

    முன்னதாக பாம்புடன் வந்த பெற்றோரால் ஆஸ்பத்திரி வளாகத்தி பரபரப்பு நிலவியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
    • வீடியோவில் உள்ள நபர் மலையாளத்தில் பேசுவதால் இது கேரளாவில் நடந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

    பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. அவற்றில் பல விமர்சனத்துக்குள்ளாவதும், வைரலாவதும், பயனர்களை ரசிக்கவும் வைக்கும்.

    அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சாலிஹ்க்ட் முள்ளம்பத் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்கில் மலைப்பாம்பு இருந்த காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

    வீடியோவில், ஒருவர் ஸ்கூட்டரின் இருக்கையை நீண்ட கட்டையை கொண்டு திறக்கிறார். அப்போது, பெட்ரோல் டேங்கில் மலைப்பாம்பு சுருண்டு உருளும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இருப்பினும் வீடியோவில் உள்ள நபர் மலையாளத்தில் பேசுவதால் இது கேரளாவில் நடந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

    வைரலான இந்த வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பல பயனர்கள் ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதில் ஒரு பயனர், வாகனத்தில் டேங்கில் முழு பெட்ரோல் இருக்கிறதா என்று சோதிக்க பாம்பு வந்துள்ளது என்று நகைச்சுவையாக கருத்து பதிவிட்டு இருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர்.
    • பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரிடம் பெரும் வரவேற்பை பெற்ற தளம் அமேசான். இருந்த இடத்தில் இருந்துகொண்டே வாங்க நினைக்கும் பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய நினைக்கும் போது பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருது அமேசான் தான். அவ்வாறு ஆர்டர் செய்பவர்களுக்கு தவறுதலாக பொருட்களை மாற்றி அனுப்பும் நிகழ்வுகளும் பல நடந்துள்ளது.

    ஆனால், தாங்கள் ஆர்டர் செய்த பொருளுடன் கூடுதலாக வந்த ஜீவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர்.

    சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமேசானில் இருந்து பார்சல் வந்தது. அவர்கள் ஆர்டர் செய்த கண்ட்ரோலருடன் உயிருடன் நாகப்பாம்பு இருந்தது. ஆர்டர் செய்யப்பட்ட பொருளுடன் பாம்பை நெளிந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அத்தம்பதி எக்ஸ் தள பக்கத்தில், அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தேன். அதனுடன் இலவசமாக பாம்பு கிடைத்தது என்று பதிவு செய்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த பதிவை கண்ட அமேசான் நிறுவனம், அமேசான் ஆர்டரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை அறிந்து வருந்துகிறோம். இதை சரிபார்க்க விரும்புகிறோம். தேவையான விவரங்களை தருமாறும், விரைவில் எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும் என்று கூறியுள்ளது.

    ×