என் மலர்
நீங்கள் தேடியது "சோனு சூட்"
- புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து சாம் சிஎஸ் பெரும் புகழைப்பெற்றார்.
- இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா நல்ல வரவேற்பை பெற்றுது
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் சாம் சிஎஸ். இவரது இசையில் உருவான விக்ரம் வேதா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கைதி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்து சாம் சிஎஸ் பெரும் புகழைப்பெற்றார்.
இந்நிலையில், சோனு சூட் நடிக்கும் புதிய படத்தின் மூலம் இசையமைப்பாளர் சாம் சி எஸ் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
ஏற்கனவே இவர் பின்னணி இசையில் வெளியான இந்தி திரைப்படமான விக்ரம் வேதா பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுது குறிப்பிடத்தக்கது.
- அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு ஆகும்.
- பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
பிரபல இந்தி நடிகர் சோனு சூட், தான் வசிக்கும் வீட்டு வளாகத்திற்குள் வந்த ஒரு பாம்பை வெறும் கைகளால் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட அவர், அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு என்றும், அது விஷத்தன்மை வாய்த்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் தான் செய்ததை பின்பற்ற வேண்டாம் என்றும் எச்சரித்தார். சோனு சூட் தமிழில் நெஞ்சினிலே, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் படியில் பயணம் செய்த சோனு சூட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் கண்டனம் தெரிவித்தது.
- இதற்கு பதிலளித்து சோனு சூட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பையில் புறநகர் ரெயில்களில் வாசலில் நின்று பயணம் செய்து ஒவ்வொரு ஆண்டும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க ரெயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனுசூட் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோனு சூட்
அவரின் வீடியோவை பார்த்த வடக்கு ரெயில்வே சோனுசூட்டை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரெயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படியில் பயணம் செய்த சோனு சூட்
மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனரும் இது தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான பயணம் என்றும், இது போன்ற காரியத்தில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். படங்களில் வேண்டுமானால் ரெயிலின் வாசலில் அமர்ந்து பயணம் செய்யலாம். படம் நிஜ வாழ்க்கை கிடையாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றும்படி மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

சோனு சூட்
நடிகர் சூனு சூட் இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ளார். அதில், மன்னிக்கவும், சும்மா அங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரயிலின் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து செல்லும் அந்த லட்சக்கணக்கான ஏழைகள் எப்படி உணருவார்கள். இந்தச் செய்திக்கும், நாட்டின் ரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து நாடு முழுவதும் பிரபலமடைந்தார் என்பதும் அதிலிருந்து சோனுசூட் எதைச்செய்தாலும் அது செய்தியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர் சோனுசூட்.
- இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.
'அருந்ததி' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் சோனுசூட் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் நூற்றுக்கணக்கானோர் உதவிகள் கேட்டு அவரை தேடி செல்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரிசியில் ரசிகர்கள் வரைந்த சோனுசூட் உருவம்
அவர்களுக்கு உதவி செய்வதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். அவரை போற்றும் விதமாக மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் அவரது ரசிகர்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியை கொண்டு அவரது உருவத்தை வரைந்துள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வரைந்த அவரது உருவப்படத்தை சோனுசூட் தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், '2,500 கிலோ... 1 ஏக்கர் நிலம், எல்லையில்லா அன்பு' என்று பதிவிட்டு இருக்கிறார்.
- உயிர் காக்கும் ஊசி மருந்துக்காக 9 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது
- இதில் பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரை அனைவரும் அடக்கம்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் போலீஸ் எஸ்.ஐ. ஆக இருந்து வருபவர் நரேஷ் ஷர்மா. இவரது 2 வயதில் ஹிருதயான்ஷ் ஷர்மா என்ற மகன் உள்ளார்.
ஷர்மா ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) எனப்படும் அரிய மரபணு கோளாறால் பாதிப்பு அடைந்துள்ளார். இதற்கு ஒற்றை டோஸ் மரபணு சிகிச்சை ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருந்தின் விலை ரூ.17. கோடி. இது உலகின் மிக விலை உயர்ந்த மருந்துகளில் ஒன்றாகும்.
ஷர்மா இடுப்பிற்குக் கீழே உள்ள அனைத்து உடல் செயல்பாடுகளையும் கிட்டத்தட்ட இழந்திருந்தான். ஊசி போடப்படுவதற்கு முன் அவனால் இயல்பான வாழ்க்கையை நடத்தமுடியும் என்பதை உறுதிப்படுத்தினர்.
ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனையில் 3 மாதத்துக்குள் ₹9 கோடி திரட்டப்பட்டு, ஹிருதயன்ஷுக்கு ஊசி போடப்பட்டது. மீதமுள்ள தொகையை ஒரு வருடத்திற்குள் 3 முறை செலுத்தவேண்டும்.
பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரையிலான பலரது முயற்சியால் நிதி திரட்டப்பட்டது.
பிரபல நடிகர் சோனு சூட் மற்றும் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் ஆகியோர் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தனர். ஜெய்ப்பூரில் பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பழங்களை விற்பவர்கள் உள்பட அனைத்து இனத்தைச் சேர்ந்த தனிநபர்களும் நிதி திரட்டுவதில் பங்களித்தனர். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள் பிரசாரத்திற்காக நிதி திரட்ட உதவியது.
மாநில காவல்துறை பணியாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 5 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராஜஸ்தானில் இதுபோன்று நிதி திரட்டப்படுவது முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
- உணவக உரிமையாளர்களின் பெயர்களை பெயர்களைக் காண்பிக்க வேண்டும் உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
- உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக ரசின் இந்த உத்தர இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வழக்கில் சாட்சியம் அளிக்க சோனுவை கோர்ட்டுக்கு வரவழைக்க சம்மன் அனுப்பினர்.
- அவர் சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
லூதியானா:
பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக லூதியானா ஐகோர்ட் நீதிபதி ராமன்பிரீத் கவுர் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
லூதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா. இவர் மோகித் சுக்லா என்பவர்மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார். அதில், அவர் போலி ரிஜிகா நாணயத்தில் முதலீடு செய்ய வற்புறுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு லூதியானா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க சோனு சூட்டுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இந்நிலையில், சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகாத நிலையில், சோனு சூட்டுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சோனு சூட்டுக்கு முறைப்படி சம்மன் அல்லது வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்துகொள்ளத் தவறிவிட்டார். எனவே சோனு சூட்டை கைதுசெய்து ஆஜர்படுத்தும்படி லூதியானா கோர்ட் உத்தரவிட்டது.










