என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robo shankar"

    • ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார்.
    • தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

    சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

    ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது. பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். அதே சமயம், பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டனர்.

    இந்நிலையில், ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பேசிய மகள் இந்திரஜா சங்கர், "அப்பா இல்லாம முதல் பிரஸ் மீட் இங்க இருக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ரொம்ப பெரிய பெரிய நன்றி.. அவர் விட்ட பாதையில் இருந்து தொடர்வோம்... அப்பாவிற்காக அன்பை வெளிப்படுத்திய அம்மாவின் நடனத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான் விமர்சித்தார்கள்" என்று தெரிவித்தார்.

    மறைந்த நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது இணையத்தில் பேசுபொருளான நிலையில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் விளக்கம் அளித்துள்ளார். 

    • 69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
    • பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்க கட்டடம் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
    • ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனம் ஆடினார்.

    சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

    ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது. பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். அதே சமயம், பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டனர்.

    இந்நிலையில், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியதற்கு எதிரான பதிவுகளுக்கு பதிலளித்த தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தமிழ் காமராசன், "ஒரு கட்டுக்கடங்காத துக்கம், ஒரு பெரும் இழப்பு, எதுவும் செய்ய முடியாத நிலையில் என்ன பண்ண முடியும்? அந்த நேரத்தில் மனிதனுக்கு இறுதியாக இருக்கக்கூடிய ஒன்று நடனமும், இசையும், பாட்டும்தான்.. அதுதான் அவர்களை ஆற்றுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
    • ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    இவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இயக்குனர் செல்லா அய்யாவு இரங்கல் தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்," ஆறு மணி காமெடி ஹிட்டாக முக்கிய காரணம் ரோபோ சங்கர்தான்.. அது எடுக்கும்போது எங்களுக்கு தெரியாது இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று.

    நாள் முழுக்க ஒரே டோனில், ஒரே மீட்டரில் அட்சரம் பிசகாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

    ரியாக்சன் மாறாமல் ஸ்பாட்டிலேயே எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அதுதான் தியேட்டரிலும் எதிரொளித்தது. ரசிகர்களின் சிரிப்பினில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். கண்ணீர் அஞ்சலி அண்ணா" என்றார்.

    இயக்குனர்  செல்லா அய்யாவு தற்போது, கட்டாகுஸ்தி 2 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
    • திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், பிற்பகல் 3 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.

    • ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், பிற்பகல் 3 மணியளவில் சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    திரைத்துறையினரின் படை சூழ, கண்ணீர் மல்க ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    இந்நிலையில், ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர், ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    • ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார்.
    • ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், 'தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். அதன் பிறகு 'மாரி', 'விசுவாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.

    இவர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.

    ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. 'வெண்டிலேட்டர்' கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

    அவருக்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்னர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ரோபோ சங்கர் மறைவுக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அதில், "ரோபோ சங்கரின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

    • ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

    ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி.

    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

    • ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, சிவகார்த்திகேயன், காளி வெங்கட், நடிகை நளினி, சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் துணை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரோபோ சங்கர் உடலுக்கு நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரோபோ சங்கரின் உடலைக்கண்டு கதறி அழும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    மறைந்த ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
    • மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையை உருவாக்கி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இதனை தொடர்ந்து நடிப்பில் தீவிரம் கவனம் செலுத்தி வந்த ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46.

    ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரோபோ சங்கர் தன் உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் கல்லீரல் செயலிழந்ததால் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோபோ சங்கரின் உயிரிழப்பு, கல்லீரல் நோய்களின் தீவிரத்தையும், சரியான சிகிச்சையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...

    கல்லீரல், கல்லீரல் நோய்களின் தீவிரம், சரியான சிகிச்சையும் முக்கியத்துவமும்

    கல்லீரல் கொழுப்பு நோய் இரண்டு வகைகளாக உள்ளது:

    ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்.

    ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய்:

    அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது. மது, உடலுக்கு தேவையற்ற நச்சாக செயல்படுவதால், கல்லீரல் அதை வெளியேற்ற முயல்கிறது. இதனால் கல்லீரல் செல்கள் சேதமடைந்து, கொழுப்பு படிந்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மேலும் மோசமடைந்தால், ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் உருவாகலாம்.

    ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்:

    மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் இந்நோய்க்கு முழுமையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், உடல் பருமன், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்கை, இரண்டாம் வகை சர்க்கரை நோய், உயர் கொலஸ்ட்ரால், முறையற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

    தொடக்கத்தில் இந்நோய் அறிகுறிகளைக் காட்டாவிட்டாலும், முற்றிய நிலையில் சோர்வு, பலவீனம், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் போன்றவை தோன்றலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையுடன் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

    கல்லீரல் வீக்கம்:

    கல்லீரல் வீக்கம் பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ வைரஸ்கள், பாதிக்கப்பட்டவரின் ரத்தம் மூலமாகவோ, ஒரே சவரக்கத்தியை பலர் பயன்படுத்துவதாலோ பரவலாம். மேலும், அதிக மது அருந்துதல் மற்றும் மருத்துவர் பரிந்துரை இல்லாத மருந்துகளை உட்கொள்வதும் இந்நோயை உருவாக்கலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி போன்றவை இந்நோயை குணப்படுத்துவதாக நம்புவது தவறு, ஏனெனில் இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

    கல்லீரல் சிரோசிஸ்:

    கல்லீரல் சிரோசிஸ் என்பது கல்லீரல் திசுக்கள் வடு திசுக்களாக மாறி, நிரந்தரமாக சேதமடையும் நிலை. இதை குணப்படுத்த எந்த நாட்டு மருந்தும் இல்லை. இந்நிலையில் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டு, புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும். உடனடி மருத்துவ சிகிச்சை மட்டுமே இதற்கு தீர்வு.

    கல்லீரல் செயலிழப்பு:

    கல்லீரல் செயலிழப்பு என்பது நோயின் இறுதி மற்றும் மிக ஆபத்தான நிலை. இதற்கு நாட்டு மருந்துகளோ, ஆங்கில மருந்துகளோ தீர்வாகாது. ஒரே தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. இந்நிலையில் நாட்டு மருந்துகளை நம்புவது உடலில் நச்சுக்களை அதிகரித்து, ரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பு போன்ற அவசர நிலைகளை உருவாக்கலாம்.

    • ரோபோ சங்கர் சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
    • ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

    டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், பின்னாளில் 'தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தார். 'மாரி', 'விசுவாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.

    'அம்பி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு வர காத்திருந்தது.

    கட்டுமஸ்தான உடல் கொண்ட ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.

    ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. 'வெண்டிலேட்டர்' கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

    ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் தாமு, தனுஷ், விஜய் ஆண்டனி, பாடகர் மனோ, கவிஞர் சினேகன், நடிகர் ராதாரவி, சிவகார்த்திகேயன், காளி வெங்கட், நடிகை நளினி, சின்னத்திரை நடிகர் தீபக் மற்றும் துணை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

    ×