search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robo Shankar"

    • நார்வே தமிழ்த்திரைப்பட விழா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா.
    • விருது தம்பி கே.பி.ஒய். பாலாவுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

    15-வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் 'வீரத்தின் மகன்' திரைப்பட திரையிடல் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

    நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், "கலைஞர்கள் மீது அன்பும், பேராதரவும் காட்டக்கூடியவர்கள் இலங்கை தமிழர்கள் தான், அவர்களை விட யாரும் இருக்க முடியாது. நார்வே தமிழ்த்திரைப்பட விழா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா. அதில், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவது, அந்த விருது தம்பி கே.பி.ஒய். பாலாவுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர் தம்பி பாலா.

    புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் வழங்கப்படும் முதல் விருது அவருக்கு கிடைத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. இதுபோல் பலர் கலைஞர்களை நீங்கள் கெளரவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.

    • நடிகர் ரோபோ சங்கர் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார்.


    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் ரோபோ சங்கர், முடிதிருத்தும் தொழிலாளிகளை நேரில் சந்தித்தார். இதையடுத்து முடிதிருத்தும் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக, நாளை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நிகழ்ச்சியில், இப்பகுதியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய இருக்கிறேம் என்று கூறி அழைப்பிதழ் வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.


    சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர், "கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் வெளியாகும் திரைப்படத்தை பிரமாண்ட விழாவாக நான் எடுத்து நடத்த போகிறேன். இந்தியன் 2 படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். கமல்ஹாசன் நம்ம ஊரில் இருக்க வேண்டிய ஆளே இல்லை. எல்லா விஷயத்திலையும் நுணுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார்" என்று பேசினார்.


    மேலும், 'லியோ' படத்தில் கமல்ஹாசன் குரல் இடம்பெற்றதால் வந்த ட்ரோல் குறித்த கேள்விக்கு, "கமல் என்ன கிழிச்சாருனு கேட்க யாருக்கும் தகுதி இல்லை. 'லியோ' படம் பார்க்கும் போது கடைசியாக கமல் குரல் வரும்போது திரையரங்கம் அதிருகிறது அதுக்கு மேல் என்ன சொல்ல. லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் மிகப்பெரிய பக்தன்" என்று பேசினார். 

    • நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர்.
    • இவர் பல முயற்சிகளுக்கு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.



    இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு மிஸ்டர் மதுரை, மிஸ்டர் தமிழ்நாடு போன்ற பட்டங்களை பெற்றுள்ளார். இவர் ரோபோ போல் உடலை அசைத்து ரசிகர்களை கவர்ந்ததால் தான் இவருக்கு ரோபோ சங்கர் என பெயர் வந்தது. நல்ல உடல் வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து காணப்பட்டார். இதையடுத்து இவர் பல முயற்சிகளுக்கு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்.


    ரோபோ சங்கர்

    இந்நிலையில், ரோபோ சங்கர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதாவது, மதுரையில் நடைபெற்ற 37 -வது ஆண்டு ஆணழகன் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் ரோபா சங்கர் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினருக்கான பிரிவில் தனது கட்டுமஸ்தான உடல் பாவனைகளை செய்துகாட்டி அசத்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    • நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

    சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் ரோபோ சங்கர் மிகவும் மெலிந்து காணப்பட்டார். இவரை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் தன் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது கமல்ஹாசன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்பட்டதையடுத்து பல வதந்திகள் வந்தன.
    • பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான், அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது என்று வெளிப்படையாக கூறினார்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.


    சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. இதையடுத்து ரோபோ சங்கர் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான், அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது என்று வெளிப்படையாக கூறினார். தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்து வருகிறார்.


    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ரோபோ சங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போன் செய்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், தன் மகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் திருமண தேதி குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை என்றும் கண்டிப்பாக உங்களுக்கு கூறிவிட்டு தான் எதையும் செய்வேன் என்றும் ரோபோ சங்கர் கூறினார்.

    • இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'.
    • இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார்.


    இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகா குறித்து பேசினார். அதில், "ஹன்சிகா மெழுகு பொம்மை தான். மைதா மாவை பிசைந்து சுவரில் அடித்தால் ஒட்டிக் கொள்ளும் அது மாதிரி தான். படத்தில் ஒரு காட்சியில் ஒரு பொருளை தேடி அவர் காலை நான் தடவ வேண்டும். அந்த காட்சிக்கு நானும் இயக்குனரும் ஒப்புக் கொள்ள கேட்டு ஹன்சிகாவிடம் போராடினோம் ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு ஜாலியான படம் எல்லோரும் பாருங்கள்" என்று பேசினார்.

    இதற்கு பத்திரிகையாளர் ஒருவர், "ரோபோ சங்கர் மேடையில் இருக்கும்போதே இதை நான் கேட்டிருக்க வேண்டும். ஒரு சபை நாகரிகம் இல்லாதவர்களை மேடையில் ஏறவிடாதீர்கள். மேடையில் ஹன்சிகா ஒரே ஒரு பெண்மணி தான் இருக்கிறார். ரோபோ சங்கர் எல்லை மீறி பேசியிருக்கிறார். இந்த மாதிரியான ஆட்களை மேடையில் ஏற்றாதீர்கள். இன்று ஹன்சிகா மேடையில் சிரித்துக் கொண்டிருக்க மாதிரி இருக்கும் நாளை வேறொரு நடிகர் உட்காரும் போது காலை தொட்டு பார்க்க வேண்டும் என்று பேசுவது நீங்கள் செவித்திற்குள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். சமூக வலைதளத்தில் நடிகையை பற்றி இழிவாக பேச இது வழிவகுக்கும்" என்று பேசினார். இந்த பேச்சிற்காக படக்குழு மன்னிப்பு கேட்டனர்.

    • பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார் ரோபோ சங்கர்.
    • நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

    சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரோபோ சங்கர் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன.


    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் உடல் எடை குறைந்தது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான், அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்தேன் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள். நான் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன்.

    தற்போது உங்களுக்கு நான் பெரிய உதாரணமாக இருக்கிறேன். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றுவிட்டேன். கடந்த ஜனவரி மாதம் எனக்கு வாழ்க்கையை வெறுத்து அந்த பழக்க வழக்கம் இல்லாமல் இருக்க முடியாத நிலையில் இருந்தேன். நடு இரவில் பைத்தியம் போன்று வீட்டில் திரிந்தேன்.


    அந்த நேரம் மருத்துவர்களை சந்தித்ததன் மூலம் என் உடம்பில் இருந்த மஞ்சள் காமாலை மற்றும் கெட்ட பழக்கங்களால் எந்த பகுதிகள் எல்லாம் சேதம் ஆகியுள்ளன என்பதை எல்லாம் பார்த்து மருத்துவரின் ஆலோசனையை கேட்டு எல்லா பழக்கத்தையும் விட்டேன். இரவு பகலாக என் குடும்பம் தான் என்னை முழுவதும் கவனித்து கொண்டார்கள். எத்தனையோ நண்பர்களின் பிரார்த்தனைகளால் தான் நான் இங்கு நிற்கிறேன்" என்று கூறினார்.

    • பல படங்களில் கமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் ரோபோ சங்கர்.
    • நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.


    சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் தனது உடல் எடை குறைந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் ரோபோ சங்கர். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருந்தபோது எனக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எனது உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது. சரியான நேரத்தில் நான் நல்ல மருத்துவர்களிடம் சென்றதால் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்.


    கடந்த நான்கு மாதங்களாக நிறைய காமெடி நிகழ்ச்சிகளை பார்த்தேன். எத்தனையோ மக்களை நான் சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால் என் கஷ்டத்தை தீர்த்தது காமெடி நிகழ்ச்சிகள் தான். அதிலும் விஜய் டிவி ராமருடைய காமெடியை அசைக்கவே முடியாது. எனது உடல் நிலை குறித்து யூ டியூபில் வந்த வதந்திகளை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பு தான் வந்தது" என்று கூறினார்.

    • நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.


    ரோபோ ஷங்கர்

    சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.


    ரோபோ ஷங்கர்

    இந்த நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தான் நடனமாடும் வீடியோ ஒன்றை ரோபோ சங்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியுள்ளார்.  ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கரின் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர்.
    • சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

    சமீபத்தில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். உரிய அனுமதியின்றி வீட்டில் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


    ரோபோ சங்கர்

    ரோபோ சங்கர்

    இந்நிலையில் ரோபோ சங்கரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர்.
    • சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார்.


    ரோபோ சங்கர்

    சமீபத்தில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உரிய அனுமதியின்றி வீட்டில் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×