என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasthuri"

    • திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது.
    • திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது:-

    வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலுங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்து விட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு தமிழகத்தில் ஒன்றுமே செய்யவில்லை. எப்போதெல்லாம் தி.மு.க.வுக்கு பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் இங்கே தமிழகத்தில் இனம், பிரிவினை என ஒவ்வொரு ஆயுதமாக கையில் எடுத்து வருகின்றனர்.

    தமிழ் பற்றை பேசாமல் திராவிடத்தை முன்னிறுத்தி தி.மு.க. பேசுகிறது.

    ஆனால் தமிழ் பற்று, தேசப்பற்றை பேசும் பொறுப்பு நமக்கு உள்ளது. கலை கலாச்சார பிரிவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    இங்கே திரையுலகில் பூதம் பிடித்துள்ளது. திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது. திரைத்துறையை விடுவிக்க என்ன வழியோ அதனை செய்ய வேண்டும்.

    இங்கே ஒரு சிறிய படத்தை எடுத்தால் அதனை ரிலீஸ் செய்யும் வரை போதும் போதும் என்றாகி விடுகிறது. தீபாவளிக்கு கூட நல்ல படம் வரவில்லை. நல்ல படம் வருவதற்கு ஒருவரை மட்டுமே ஏன் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்? திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும். அதற்கு பா.ஜ.க. கலை கலாச்சார அணி முயற்சி செய்ய வேண்டும் என பேசினார். 

    • பா.ஜ.க. பிரமுகரான நடிகை கஸ்தூரி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • அதன்பின் பேசிய அவர் விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது என்றார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார்.

    அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கரூர் சம்பவத்திற்கு பிறகு கரூர் மக்களே த.வெ.க. தலைவர் விஜய் பக்கம் இருக்கிறார்கள். ஆனால் அவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் அவருடன் இல்லை.

    கரூரில் உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பம்கூட அவர்மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும்.

    விஜய் தலைமையில் கூட்டணி தற்போதைய சூழ்நிலைக்கு சரிவராது. ஆந்திர மாநில துணை முதல் மந்திரியும், நடிகருமான பவன் கல்யாணை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
    • DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. DD Next Level திரைப்படம் மே 16ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

     

    இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் அளித்த பேட்டியில் "'டிடி நெக்ஸ்ட் லெவல்'ல என் அம்மா அப்பாவா கஸ்தூரியும் நிழல்கள் ரவியும் படம் முழுவதும் வர்றாங்க. தங்கையாக யாஷிகா ஆனந்த். கஸ்தூரி மேடம்கிட்ட அம்மா கேரக்டர்ல நடிக்கணும்னு கேட்டதும், 'என்னது! நான் சந்தானத்துக்கு அம்மாவா?'ன்னு ஷாக் ஆனாங்க. 'கதையைக் கேட்டுட்டு முடிவைச் சொல்லுங்க'ன்னு கதையைச் சொன்னதும் நடிக்க சம்மதிச்சிட்டாங்க. அவங்க கதாபாத்திரத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைய இருக்கும்." என கூறியுள்ளார்.

    • இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை.
    • மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என கூறினால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்?

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை. மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என கூறினால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்? கணக்கு கஷ்டம் என்றால் அதனை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?

    இலகுவான முறையில் மாற்றியமைக்கலாமே தவிர கற்காமல் விடக்கூடாது என்று கூறினார். 

    • தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ஆதிபுருஷ் வெளியாக உள்ளது.
    • இப்படத்தில் பிரபாஸ் ராமரை போல் இல்லை, கர்ணனைப் போல இருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து வெளியான போஸ்டர்களும் விமர்சனத்திற்கு உள்ளானது.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான இறுதி டிரெய்லரும் விமர்சனத்திற்கு உள்ளானது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    மேலும் இயக்குனர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், கீர்த்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குனர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது.


    கஸ்தூரி

    கஸ்தூரி

    இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தின் வாயிலாக கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார். அதில், "ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இந்த குழப்பமான புறப்பாடு? குறிப்பாக பிரபாஸ் இருக்கும் தெலுங்கு திரையுலகில், ஸ்ரீராமன் கதாபாத்திரத்தில் லெஜண்ட் நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால் இந்த போஸ்டரில் பிரபாஸை பார்க்கையில் ராமரை போல் தோன்றுவதற்கு பதில் கர்ணனைப் போல இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.


    • இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
    • தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலை–யில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை கஸ்தூரி அவ்வப்போது இணையத்தில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
    • அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. 'ஆத்தா உன் கோயிலிலே' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சின்னவர், புதிய முகம், அமைதிப்படை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார்.


    சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை கஸ்தூரி ஒரு சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடினார். இவரின் நடனத்திற்கு பலரும் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பு வளையத்துக்குள் இருந்து வருகிறார். அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.


    இந்நிலையில், இவர் நடிகர் அஜித் குறித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு... அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது.
    • காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர்

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனையில் ஆளும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் மற்ற கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காவிரி பிரச்சனையின் வரலாற்றை இன்றைய இளையதலைமுறையினர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 75 சதவீத உரிமை உள்ளது.

    காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர். காவிரியில் நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி,

    "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது கருத்தை கஸ்தூரி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.
    • ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார்.

    நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வருகிறார். இரு சமூகங்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டும் வகையிலும் தெலுங்கு மொழி பேசும் பெண்களை இழிவுவாக பேசி தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் தமிழர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடிகை கஸ்தூரி பேசி இருக்கிறார்.

    நடிகை கஸ்தூரி சத்தியராஜ் படம் அமைதிப்படையில் தாயம்மாவாக நடித்தபோது இதுபோன்ற கருத்துக்களை பேசி இருந்தால் ஒரு பொண்ணு பேசுது என்று காது கொடுத்து கேட்டு இருப்பார்கள்.

    நீ இப்போ ஆயம்மாவாக ஆனபின்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்களும் தமிழர்களும், சகோதர சகோதரிகளாக, ஒரு தாய் மக்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

    ஆந்திராவில் 21 தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது நடிகை கஸ்தூரி என்ன செய்து கொண்டிருந்தார்.

    ஈழத்தில் 1 1/2 லட்சம் மக்களை கொன்று குவித்தபோதும், பெண்கள் கற்பழிக்கப்பட்டபோதும், குழந்தைகள் கொன்று குவித்தபோதும் நடிகை கஸ்தூரி என்ன செய்துகொண்டிருந்தார்.

    உரிமைகளுக்காக போராடாத நீ தமிழச்சியா?

    கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டபோது, அண்டை மாநிலத்தவர் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்தபோது இந்த மண்ணில் தமிழர்களாகிய நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்கோடு தெலுங்கு பேசும் மக்களும் களத்தில் நின்று போராடி சிறைக்கு போகிறார்கள்.

    சீமான் அண்ணன் தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசியதற்காக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சீமான் கருத்து போல் தான் நடிகை கஸ்தூரியும் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    சீமான் கருத்தும் நடிகை கஸ்தூரி கருத்தும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

    சீமானுக்கு கஸ்தூரி கிளாஸ்மேட்டா (Classmate) இல்லை glassmate...

    சென்னை பெருநகர ஆணையர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளோம்.

    பிரிவினை வாதத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளோம்.

    நடிகை கஸ்தூரி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என கஸ்தூரி பேசியது சர்ச்சையானது.
    • தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

    பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.

    தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடித்தது. தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிய கஸ்தூரி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, தெலுங்கு மக்கள் குறித்து நான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகை கஸ்தூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
    • நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.

    இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.

    அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில், நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எழும்பூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர் 

    ×