என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kasthuri"
- வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது.
- காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் ஆளும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் மற்ற கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காவிரி பிரச்சனையின் வரலாற்றை இன்றைய இளையதலைமுறையினர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வரலாற்றுப்படி தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி மேல் ஒரு உரிமை உள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 75 சதவீத உரிமை உள்ளது.
காவிரி கர்நாடக மக்களின் தனிப்பட்ட சொத்து என்று நம்ப வைத்துள்ளனர். காவிரியில் நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகை கஸ்தூரி அவ்வப்போது இணையத்தில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
- அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. 'ஆத்தா உன் கோயிலிலே' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சின்னவர், புதிய முகம், அமைதிப்படை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார்.
சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை கஸ்தூரி ஒரு சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமாடினார். இவரின் நடனத்திற்கு பலரும் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வந்தனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சர்ச்சையான கருத்துகளை கூறி பரபரப்பு வளையத்துக்குள் இருந்து வருகிறார். அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், இவர் நடிகர் அஜித் குறித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு... அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? " என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு... அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? #thala #Ajithkumar?
— Kasturi (@KasthuriShankar) August 17, 2023
- இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
- தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது.
திருப்பூர் :
திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலை–யில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ஆதிபுருஷ் வெளியாக உள்ளது.
- இப்படத்தில் பிரபாஸ் ராமரை போல் இல்லை, கர்ணனைப் போல இருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.
இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து வெளியான போஸ்டர்களும் விமர்சனத்திற்கு உள்ளானது.
ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான இறுதி டிரெய்லரும் விமர்சனத்திற்கு உள்ளானது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார்.
மேலும் இயக்குனர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், கீர்த்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குனர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தின் வாயிலாக கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார். அதில், "ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இந்த குழப்பமான புறப்பாடு? குறிப்பாக பிரபாஸ் இருக்கும் தெலுங்கு திரையுலகில், ஸ்ரீராமன் கதாபாத்திரத்தில் லெஜண்ட் நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால் இந்த போஸ்டரில் பிரபாஸை பார்க்கையில் ராமரை போல் தோன்றுவதற்கு பதில் கர்ணனைப் போல இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
- நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ம் தேதி பிரமாண்டமாக நடந்தது.
- எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்தாய் முறை மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைஉலக பிரபலங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது புதிய விஷயம் அல்ல. ஏற்கனவே பாலிவுட் நடிகைகள் சில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா இருவரும் இதே போல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அமீர்கான்-கிரண் ராவ் தம்பதியர் ஆசாத் ராவ் என்ற குழந்தையையும், ஷாருக்கான்-கவுரிகான், சன்னி லியோன்-டேனியல், பிரித்தி ஜிந்தா ஆகியோர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். இதில் பிரித்தி ஜிந்தாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவத்திற்குப் பிறகு வாடகைத்தாய் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியிருக்கிறார்கள்.
இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் குழந்தைகள் 8 மாதத்தில் பிறந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கான தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். சட்ட ரீதியாகவும் வாடகைத்தாயாக இருந்தவர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. குழந்தைகள் பற்றி விக்னேஷ் சிவன் குறிப்பிடும்போது எங்கள் உயிர், உலகம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குழந்தைகளுக்கு வைத்த பெயர் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் தரப்பில் விசாரித்தில் இது பெயர் அல்ல என்று சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றிய விபரங்கள் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகிறது. உடல்நல பிரச்சினைகளால் கர்ப்பம் ஆக முடியாத பெண்கள், வயிற்றில் குழந்தையை சுமக்க முடியாத அல்லது விரும்பாத பெண்கள் மற்றொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதே வாடகைத்தாய் முறையாகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில் அவரது கணவரின் உயிரணு செலுத்தப்பட்டு, பின்னர் அந்த கருவை, வாடகைத்தாயின் கருப்பையில் பொருத்துவர்.
அந்த வாடகைத்தாய் வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பார். கருமுட்டையில் தந்தையின் விந்தணுவை செலுத்தி அதனை வாடகைத் தாயின் கருப்பையில் பொருத்தி குழந்தை பெற்றுக்கொண்டால், வாடகைத்தாய்க்கும் குழந்தைக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. இந்த முறையைப்பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள திரையுலகினர் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தற்போது நயன்தாரா சென்னையில் பிரபல மருத்துவமனையில் மருத்துவர்களின் ஆலோசனைபடி குழந்தைகளின் அருகிலேயே இருந்து வருகிறார். விக்னேஷ் சிவன் இப்போதே குழந்தைகளுக்கென்று தனியாக உடைகளையும், விலை உயர்ந்த பொம்மைகளையும் வாங்கிக் குவிப்பதில் பிசியாக இருக்கிறார்.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
- இது குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். மேலும் படப்பிடிப்பிலும் பிசியாக இருந்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இருந்தும் ரசிகர்கள், வாடகைத்தாய் மூலம் இருவரும் குழந்தை பெற்றுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்" என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு மேலும் பல சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் சட்டத்தை மீறினார்களா? அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு உடல் ரீதியான குறைபாடு இருந்ததா? என்பது பற்றி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.
— Kasturi Shankar (@KasthuriShankar) April 10, 2019
read full thread...https://t.co/QtLHXhg4Mi
என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)
— Kasturi Shankar (@KasthuriShankar) April 9, 2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்