என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை வங்கதேசம் தொடர்"

    • இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார்.
    • வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 வடிவிலான தொடரிலும் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி 20 ஓவரில் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை 19 ஓவரில் 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    பல்லேகலே:

    வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் 38 ரன்னும், மொகமது நயீம் 32 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 42 ரன்னில் அவுட்டானார்.

    சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த குசால் மெண்டிஸ்73 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இலங்கை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது குசால் மெண்டிசுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது.
    • வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது.

    இந்நிலையில், ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 124 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வங்கதேச அணி 39.4 ஓவரில் 186 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தரப்பில் டோஹித் ஹிரிடோய் அரை சதம் அடித்தார்.

    இதன் மூலம் 99 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    • கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பாம்பு புகுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இப்போட்டியின்போது கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் மைதானத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்டதும் மீண்டும் ஆட்டம் நடைபெற்றது.

    • வங்கதேச தரப்பில் டான்சித் ஹசன், ஜாகர் அலி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
    • இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறித்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சரித் அசலங்கா அசத்தினார். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக பர்வேஸ் ஹொசைன் எமோன்- டான்சித் ஹசன் களமிறங்கினர். இதில் பர்வேஸ் ஹொசைன் எமோன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 23, லிட்டன் தாஸ் 0, டோஹித் ஹிரிடோய் 1, ஹசன் மிராஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டான்சித் ஹசன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 62 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனர்.

    இதனையடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஜாகர் அலி மட்டும் தனி ஆளாக போராடினார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் வங்கதேச அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார்.
    • வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறித்தது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா களமிறங்கினர். இதில் மதுஷ்கா 6 ரன்னிலும், பதும் நிசாங்கா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் குசல் மெண்டிஸ் 45 ரன், ஜனித் லியானகே 29 ரன், ரத்னநாயகே 22 ரன், வனிந்து ஹசரங்கா 22 ரன், காமிந்து மெண்டிஸ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சரித் அசலங்கா சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
    • டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

    இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் உசைன் ஷாண்டோ விலகினார்.

    இது குறித்து பேசிய நஜ்முல் உசைன் ஷாண்டோ, "டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது என்னுடைய தனிப்பட்ட முடிவு. 3 ஃபார்மட்களுக்கு 3 கேப்டன் என்ற நடைமுறை சரியென எனக்குத் தோன்றவில்லை" என்று தெரிவித்தார்.

    தற்போது வங்கதேச னையின் ஒருநாள் கேப்டனாக மெஹ்தி ஹசன் மிராஸ் மற்றும் டி20 கேப்டனாக லிட்டன் தாஸ் தற்போது செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வங்கதேசம் அணிமுதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    • முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 458 ரன்கள் குவித்தது.

    இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 4 ஆம் நாளில் விளையாடிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

    • இந்த தொடர் ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
    • சரித் அசலங்கா தலைமையில் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சரித் அசலங்கா தலைமையில் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

    இந்த தொடர் ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் கொழும்புவிலும் 3-வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 247 ரன்களில் சுருண்டது.
    • இலங்கை 458 ரன்கள் குவித்தது.

    இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.

    லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 96 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. லிட்டன் தாஸ் தாக்குப்பிடித்து விளையாடினால் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் இலங்கை இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்யும்.

    • சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டிமால் 93 ரன்னில் வெளியேறினார்.
    • நிசங்கா 146 ரன்களிலும் ஜெயசூர்யா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.

    அதிகபட்சமாக ஷட்மன் இஸ்லாம் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, சோனல் தினுஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா - லஹிரு உதாரா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது.

    அதில் லஹிரு உதாரா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து நிசங்காவுடன் தினேஷ் சண்டிமால் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசினர். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டிமால் 93 ரன்னில் வெளியேறினார்.

    ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசங்கா சதம் விளாசி அசத்தினார். இதனால் 2-ம் நாள் முடிவில் இலங்கை அணி 2-வது விக்கெட்டை இழந்து 290 ரன்கள் எடுத்தது. நிசங்கா 146 ரன்களிலும் ஜெயசூர்யா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் வங்கதேசம் 220 ரன்கள் எடுத்துள்ளது.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வங்கதேசம் முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் 41 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னும், லிட்டன் தாஸ் 34 ரன்னும், மெஹிதி ஹசன் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    வெளிச்சம் போதாமையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.

    இறுதியில், முதல் நாள் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, சோனல் தினுஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×