என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Najmul Hossain Shanto"

    • இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
    • டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

    இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 458 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பதுன் நிசாங்கா 158 ரன்கள் விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ரன்களும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 211 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் உசைன் ஷாண்டோ விலகினார்.

    இது குறித்து பேசிய நஜ்முல் உசைன் ஷாண்டோ, "டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது என்னுடைய தனிப்பட்ட முடிவு. 3 ஃபார்மட்களுக்கு 3 கேப்டன் என்ற நடைமுறை சரியென எனக்குத் தோன்றவில்லை" என்று தெரிவித்தார்.

    தற்போது வங்கதேச னையின் ஒருநாள் கேப்டனாக மெஹ்தி ஹசன் மிராஸ் மற்றும் டி20 கேப்டனாக லிட்டன் தாஸ் தற்போது செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது.
    • இலங்கை அணியின் தரிந்து ரத்னநாயக 3 விக்கெட் வீழ்த்தினார்.

    காலே:

    வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.

    முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்து 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

    கமிந்து மெண்டிஸ் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்,

    வங்கதேசம் அணி சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஹசன் மஹ்முது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹொசைன் சான்டோ மீண்டும் சதமடித்தார். ஷட்மான் இஸ்லாம் அரை சதமடித்து 76 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹ்மான் 49 ரன்னில் அவுட்டானார்.

    296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, காலே டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    ஆட்ட நாயகனாக வங்கதேசத்தின் ஹொசைன் ஷாண்டோ அறிவிக்கப்பட்டார். இலங்கையில் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்த முதல் பேட்டர் ஷான்டோ ஆவார்.
    • இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷான்டோவின் நான்காவது சதமாகும்.

    ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 14-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் வங்காளதேசம் அணி 236 ரன்கள் முன்னிலையுடன் விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 23 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜாகிர் ஹசன்54 ரன்னிலும் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 54 ரன்னிலும் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான்டோ சதம் அடித்து அசத்தினார்.

    இதன் மூலம் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த 2-வது வங்காளதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இரு இன்னிங்சிலும் சதம் அடித்த முன்னாள் வங்காளதேச கேப்டனான மோமினுலுடன் அவர் இந்த சாதனையை பகிர்ந்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான 2018-ம் ஆண்டு சிட்டகாங்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் மோமினுல், முதல் இன்னிங்சில் 176 ரன்களும் 2-வது இன்னிங்சில் 105 ரன்களை எடுத்திருந்தார்.

    இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்த முதல் பேட்டர் ஷான்டோ ஆவார்.

    இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷான்டோவின் நான்காவது சதமாகும்.

    • நிச்சயம் இது மிகவும் சவாலான தொடராக எங்களுக்கு இருக்கப்போகிறது.
    • வெற்றி பெறும் வேட்கையோடு விளையாடுவோம்.

    சென்னை:

    வங்கதேசம் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வங்கதேசம்ம் இடையிலான முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்கதேசம் அணியினர் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். முன்னதாக புறப்படும் போது டாக்கா விமான நிலையத்தில் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நிச்சயம் இது மிகவும் சவாலான தொடராக எங்களுக்கு இருக்கப்போகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ளோம். ஒட்டுமொத்த தேசமும் இப்போது எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒவ்வொரு தொடரும் நாம் சாதிப்பதற்கு ஒரு வாய்ப்பு. இவ்விரு டெஸ்டிலும் வெற்றி பெற விரும்புகிறோம். எங்களது திட்டமிடல், அணுகுமுறையை களத்தில் சரியாக செயல்படுத்த வேண்டும். எங்களது பணியை கச்சிதமாக செய்தால், சாதகமான முடிவை பெற முடியும்.

    அவர்கள் (இந்தியா) தரவரிசையில் எங்களை விட முன்னணியில் இருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். டெஸ்டில் 5 நாட்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்களது இலக்கு. டெஸ்டில் கடைசி பகுதியில் (5-வது நாள் தேனீர் இடைவேளைக்கு பிறகு) முடிவு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். கடைசி பகுதிக்கு போட்டி நகர்ந்தால் அதன் பிறகு எதுவும் நடக்கலாம். அப்போது எங்களுக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

    வெற்றி பெறும் வேட்கையோடு விளையாடுவோம். ஆனால் ரொம்ப அதிகமாக சிந்திக்க விரும்பவில்லை. 5 நாட்களும் ஆட வேண்டும், எங்களது பலத்துக்கு ஏற்ப விளையாட வேண்டும். அது தான் முக்கியம்.

    அணியில் வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுபவம் குறைவு தான். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் அனுபவசாலிகள். அவர்களால் எந்த சீதோஷ்ண நிலையிலும் சிறப்பாக பந்து வீச முடியும். ஆனால் ஒரு அணியாக முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களும் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியம். ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்ததற்காக வங்கதேசம் அரசு எங்களுக்கு ரூ.3.2 கோடி (இந்திய மதிப்பில் ரூ.2¼ கோடி) ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது. அந்த தொகையில் ஒரு பகுதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவுக்கு எதிராக இதுவரை 13 டெஸ்டில் விளையாடி உள்ள வங்கதேசம்ம் அதில் 11-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.
    • 6-7 ஓவர்களுக்குப் பிறகு அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    இந்தியா- வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக இது எங்களுக்கு நல்ல விஷயம் அல்ல. நாங்கள் மேம்பட வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீசுவதாக எடுத்த முடிவானது நல்லது என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.

    ஆனால் 6-7 ஓவர்களுக்குப் பிறகு அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். அதன் பிறகு நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. அதேசமயம் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களும் பொறுப்பேற்க வேண்டும். நம் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதம் அவர்கள் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் நான் சொன்னது போல் எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை.

    இவ்வாறு நஜ்முல் கூறினார்.

    • நாங்கள் சாம்பியனாக சாதனைப் படைக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறோம்.
    • முன்பை விட தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்து வீச்சுத்துறை இருக்கிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் எதிர்கொள்கிறது. இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து நாங்கள் கோப்பையை தட்டி தூக்குவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் சாம்பியனாக சாதனைப் படைக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறோம். இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து 8 அணிகளுமே சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியானவர்கள். அவர்கள் அனைவருமே தரமான அணிகள். எங்கள் அணியில் வெற்றிப் பெறுவதற்கான திறன் இருப்பதாக நான் நம்புகிறேன்.

    எனவே யாரும் எக்ஸ்ட்ரா அழுத்தத்தை உணர வேண்டிய அவசியமில்லை. அனைத்து அணிகளும் தங்களுடைய திறமைகளை நம்பிச் சாம்பியனாக வர விரும்புவார்கள். அந்த வகையில் எங்களுடைய தலையெழுத்தில் அல்லா என்ன எழுதியிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது.

    எங்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களின் திறன் மீது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் தனியாளாகப் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டவர்கள்.

    முன்பை விட தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்து வீச்சுத்துறை இருக்கிறது. அதே போல விரல் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக எங்களிடம் சமநிலையைப் பொருந்திய அணி இருக்கிறது. எனவே எந்த அணியையும் எந்த நேரத்திலும் எங்களால் வீழ்த்த முடியும்.

    என்று கூறினார். 

    ×