search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvBAN"

    • இந்தியா 42.4 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது.
    • வங்காளதேசம் 42.5 ஓவரில் இலக்கை எட்டியது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ஏமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

    நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதின.

    இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முஷின் கான் 50 ரன்களும, முருகன் அபிஷேக் 62 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 42.4 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. வங்காளதேச அணி சார்பில் மரூஃப் மிரிதா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணி 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அர்புல் இஸ்லாம் 90 பந்துகளில் 94 ரன்களும், அஹ்ரார் அமின் 101 பந்தில் 44 ரன்களும் அடிக்க வங்காளதேசம் 42.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் பேட்டிங் செய்து 47.5 ஓவரில் 193 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆர்யான்ஷ் சர்மா 46 ரன்களும், கேப்டன் அஃப்சல் கான் 55 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் உபைத் ஷா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. அந்த அணியின் அசான் அவைஸ் 41 ரன்னில் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாத் பைக் 50 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 49.3 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    • விராட் கோலி சதம், சுப்மன் கில் அரைசதம்
    • 41.3 ஓவரில் இந்தியா சேஸிங் செய்தது

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்காளதேசம் 256 ரன்கள் அடித்தது. பின்னர் இந்தியா 3 விக்கெட்டை மட்டுமே இழந்து சேஸிங் செய்தது.

    • மும்பை- புனே நெடுஞ்சாலையில் அதிவேகமாக காரில் வந்துள்ளார்
    • ஆன்லைன் மூலம் அபராதம் ரசீது அனுப்பப்பட்டுள்ளது

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா கடந்த 14-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இரண்டு போட்டிக்கும் இடையில் சுமார் நான்கு நாட்கள் இடைவெளி இருந்ததால் ரோகித் சர்மா சொந்த வேலை காரணமாக மும்பை சென்றதாக தெரிகிறது.

    நேற்று மீண்டும் அணியுடன் இணைய சொகுசு காரில் வந்துள்ளார். அவர் மும்பை- புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் மின்னல் வேகத்தில் வந்துள்ளார். இந்த சாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 200 கி.மீ. வேகத்தையும் தாண்டி, 215 கி.மீ. வேகத்தில் அவரது கார் வந்துள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது வாகனம், போக்குவரத்து விதிமுறையை மீறியதற்கான மூன்று அபராத ரசீதை பெற்றுள்ளது. மைதானத்தில் எவ்வளவு வேகத்தையும் காட்டலாம். ஆனால், சாலையில் வேகத்தை காட்டினால் அபராதம்தான் மிஞ்சும்.

    ரோகித் சர்மா சென்றது லாம்போர்கினி உருஸ் சொகுசு கார். இந்த வாகனத்தின் நம்பர் 264 ஆகும்.

    • பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புவார்கள்
    • விராட் கோலி என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார்

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் புனே நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா, இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், வங்காளதேச அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாது.

    இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது வங்காளதேச அணியினர் அதிக உத்வேகத்துடன் விளையாடுவார்கள். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம் கூறியதாவது:-

    சர்வதேச அளவில் சில பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்புவார்கள். ஏனென்றால், அது அவர்களுக்கு உந்துதலாக இருக்கும். ஆகவே, நான் ஒருபோதும் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யமாட்டேன். ஏனென்றால் அவர் உந்துதல் பெற்றுவிடுவார். எங்களுடைய பந்து வீச்சாளர்களிடம், எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ, அவ்வளவு விரைவாக அவரை வீழ்த்துமாறு கூறுவேன்.

    விராட் கோலியை எதிர்த்து நான் விளையாடும் போதெல்லாம், நான் பேட்டிங் செய்ய செல்லும்போது அவர் என்னை ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார். ஏனென்றால், அவர் உண்மையிலேயே ஒரு போட்டியாளர். ஒரு போட்டியை கூட இழக்க விரும்பமாட்டார். அவருக்கும் எனக்கும் இடையிலான மோதல், இந்தியாவையும் எதிர்த்து விளையாடும் சவால் ஆகியவற்றை நான் மிகவும் விரும்புவேன்.

    இவ்வாறு ரஹிம் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    பீஜிங்:

    சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்னும், கெயிக்வாட் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் இந்தியா 97 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.

    இந்நிலையில், திலக் வர்மா தான் அடித்த அரை சதத்தை தாய்க்கு சமர்ப்பிக்கும் வகையில், தனது உடம்பில் வரைந்திருந்த தாயின் டாட்டூ படத்தை குறிப்பிட்டுக் காட்டினார்.

    • முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அவுட்டானார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் சதமடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது. திபேந்திர சிங் 32 ரன்னும், சந்தீப் ஜோரா, குஷால் மல்லா 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நேபாளம் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிக்வாட், ஜெயிஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் ஜெயிஸ்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 ரன்கள் எடுத்திருந்த கெயிக்வாட் அவுட்டானார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெயிஸ்வால் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 259 ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா டக் அவுட்டானார். திலக் வர்மா 5 ரன்னிலும், இஷான் கிஷன் 5 ரன்னிலும், கே.எல்.ராகுல் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஜடேஜா 7 ரன்னிலும் வெளியேறினர்.

    தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.அவர் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர், 8 பவுண்டரிகள் அடங்கும்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 42 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

    இறுதியில், இந்திய அணி 259 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் சார்பில் முஸ்தபிர் ரகுமான் 3 விக்கெட்டும், மெஹதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.
    • முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்னும், தௌஹித் ரிடோய் 54 ரன்னும், நசும் அகமது 44 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடினார். முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    ஆனாலும் சுப்மன் கில் நிதானமாக ஆடி சதமடித்தார்.இதில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

    • வங்காளதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
    • இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.

    தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

    அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும்.

    பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள்.
    • வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்படலாம். முதுகுவலியால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். எனவே அவர் களம் திரும்ப வாய்ப்புள்ளது.

    இலங்கைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், ரவீந்திர ஜடேஜாவும் மிரட்டினர். ஆனால் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 5 ஓவர்களில் 29 ரன் விட்டுக்கொடுத்தாரே தவிர விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சிறப்பாக பந்து வீசும் நிலையில், மற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் தேவையில்லை. அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று கும்பிளே உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் அக்ஷர் பட்டேல் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

    மற்றபடி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா என்று இந்தியா வலுவாக திகழ்கிறது. சாதனையின் விளிம்பில் உள்ள ஜடேஜா இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒரு நாள் போட்டியில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிய 7-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். மொத்தத்தில் இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

    வங்காளதேச அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்பும் நோக்கில் போராடுவார்கள். அந்த அணியில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தாயகம் திரும்பி விட்டார். தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றை சேர்த்து 4 ஆட்டங்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் தொடர்ந்து தடுமாறுவதால் இந்த ஆட்டத்தில் அவரை கழற்றி விட்டு தன்சித் ஹசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    கொழும்பு ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் ஷகிப் அல்-ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மமூத் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை தான் அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 39 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் இந்தியாவும் 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அல்லது ஷர்துல் தாக்குர், ரவீந்திரஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது பும்ரா.

    வங்காளதேசம்: மெஹிதி ஹசன் மிராஸ், தன்சித் ஹசன் அல்லது முகமது நைம், லிட்டான் தாஸ், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், அபிப் ஹூசைன், ஷமிம் ஹூசைன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மமூத்.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 211 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கொழும்பு:

    வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் இந்தியா ஏ - வங்காளதேசம் ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 49.1 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் யாஷ் துல் 66 ரன்னும், அபிஷேக் ஷர்மா 34 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் 51 ரன்கள், முகமது நயீ 38 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், வங்காளதேசம் ஏ அணி 34.2 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா ஏ அணி சார்பில் நிஷாந்த் சந்து 5 விக்கெட், மானவ் சுதார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது யாஷ் துல்லுக்கு வழங்கப்பட்டது.

    ×