search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Games 2023"

    • ரொக்க பரிசுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • தேசிய அளவிலான கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

    ஆசிய விளையாட்டு போட்டி 2023ல் வெற்றிப் பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.50 லட்சம், வெள்ளி பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கு ரூ.20 லட்சம் என தமிழக வீரர்கள் 20 பேருக்கு ரூ.9.4 கோடி ரொக்க பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர், ரொக்க பரிசுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆசிய விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக 107 பதக்கங்களை இந்தியா பெற்றது. இதில், தமிழக வீரர்கள் 17 பதக்கங்களை பெற்றுள்ளனர். தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை குவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    அதிக பதக்கம் வாங்கி கொடுத்த மாநிலத்தில் 5வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

    அனைத்து துறையிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகிறது.

    துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், துறையும் ஸ்டாராக விளங்கி வருகிறது.

    உங்களை பார்த்து மேலும் பல வீரர்கள் வருவார்கள் என நம்புகிறேன்.

    தேசிய அளவிலான கேலோ இந்திய விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
    • உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    இந்தியா முதல் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்பட்டதில் பெருமை அடைகிறேன்.

    140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

    உங்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகள் காரணமாக நாடு முழுவதும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது.

    உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும் என தெரிவித்தார்.

    • அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது.
    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் ஜோடி தங்கம் வென்றது.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது. இதை தொடர்ந்து மேலும் இன்றைய ஆட்ட முடிவில் மேலும் 7 பதக்கள் கிடைத்தன. அதன்படி, இன்றைய நாளில் மட்டும் 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 12 பதக்கங்களை இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்தியாவிற்கான ஆட்டங்கள் முடிவடைந்தன. ஆசிய விளையாட்டு போட்டிகளின் முடிவில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று போட்டியை இந்தியா நிறைவு செய்துள்ளது.

    இதில், அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது. மகளிர், ஆடவர் செஸ் அணிகள் பிரிவில் வெள்ளி பதக்கம். வில்வித்தையில் ஓஜஸ் மற்றும் ஜோதி தங்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்- சிராக் ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    19வது ஆசிய விளையாட்டு போட்டியின் கடைசி நாளான நாளை பிற நாடுகள் விளையாடும் ஒரு சில போட்டிகள் உள்ளன. அதன்பிறகு, ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவு விழா நடைபெறும்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் 48 ரன்கள் எடுத்தது.
    • மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வங்காளதேசம் எட்டியது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்காளதேசம் 5 ஓவரில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆடிய வங்காளதேசம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    • வில்வித்தையில் இந்தியா இன்று 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-யை தொட்டது.

    2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 70 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. கடந்த 4-ம் தேதி இதை முந்தி இந்தியா சாதனை படைத்து இருந்தது. தற்போது 100 பதக்கங்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

    பெண்கள் கபடியில் இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இறுதிப் போட்டியில் சீன தைபேயை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    இறுதியில் இந்தியா 26-25 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை பெற்றது. முதல் பாதியில் இந்தியா 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் சீன தைபே சவால் கொடுத்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆண்கள் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை எதிர்கொள்கிறது.

    முன்னதாக, வில்வித்தையில் 2 தங்கமும், ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தது.

    பெண்கள் காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை போட்டியில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 149-145 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியா வீராங்கனை சேவோனை வீழ்த்தினார்.

    இதே இந்தியாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் 146-140 என்ற கணக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த ரைத் ஜில்காட்டியை தோற்கடித்தார்.

    ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒஜாஸ் பிரவின்-அபிஷேக் வர்மா மோதினார்கள்.

    இதில் ஒஜாஸ் 149-147 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். அபிஷேக் வர்மாவுக்கு வெள்ளி கிடைத்தது.

    வில்வித்தை போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் கிடைத்தது.

    பெண்கள் கபடி பிரிவில் பெற்ற தங்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100 ஆக அதிகரித்தது. பிற்பகலில் மேலும் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும்.

    நாளையுடன் ஆசிய விளையாட்டு போட்டி முடிவடைகிறது. கடைசி நாளில் கராத்தே போட்டிகள் மட்டும் நடைபெறுகிறது.

    • வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
    • இதே பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெள்ளி வென்றார்.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.

    இந்நிலையில், இன்று காலை வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றது.

    ஏற்கனவே, வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியா தங்கமும், வெண்கலமும் வென்றுள்ளது.

    இந்திய அணி இதுவரை 24 தங்கம், 35வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • வில்வித்தை பெண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
    • ஏற்கனவே வில்வித்தையில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலம் வென்றார்.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.

    இந்நிலையில், இன்று காலை வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

    காம்பவுண்டு தனிநபர் பிரிவு, பெண்கள் காம்பவுண்டு மற்றும் காம்பவுண்டு கலப்பு அணி ஆகியவற்றில் ஜோதி சுரேகா வெண்ணாம் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்திய அணி இதுவரை 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • ஜப்பானை 5- 1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
    • இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்.

    சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 11வது நாளான இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா- ஜப்பான் மோதியது.

    இதில், ஜப்பானை 5- 1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்றது உற்சாகமளிக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

    இவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை விளையாட்டை மட்டுமல்ல, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளன.

    இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • ஏற்கனவே பெண்கள் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.

    ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இந்திய அணி 61-14 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.

    • பேட்மிண்டனில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
    • இதுவரை இந்தியா 35 வெண்கலம் வென்றுள்ளது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பேட்மிண்டன் ஆண்கள் அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீன வீரருடன் மோதி தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் வெண்கலம் வென்றார்.

    இந்திய அணி இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    பீஜிங்:

    சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்னும், கெயிக்வாட் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் இந்தியா 97 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.

    இந்நிலையில், திலக் வர்மா தான் அடித்த அரை சதத்தை தாய்க்கு சமர்ப்பிக்கும் வகையில், தனது உடம்பில் வரைந்திருந்த தாயின் டாட்டூ படத்தை குறிப்பிட்டுக் காட்டினார்.

    • வில்வித்தையில் இந்தியா இன்று 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.

    ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1வெண்கலம் வென்றுள்ளது.

    இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    சீனா முதலிடத்திலும், ஜப்பான் 2வது இடத்திலும், தென் கொரியா 3வது இடத்திலும் உள்ளது.

    ×