என் மலர்
நீங்கள் தேடியது "Sunil Chhetri"
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இது பிப்ரவரி 1-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.
இதில் அபுதாபியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்லாந்தின் டீராசில் டங்டா 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் சுனில் சேதரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.
அவரை தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனிருத் தபா 68-வது நிமிடத்திலும், ஜிஜி லால் பெக்லுவா 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இறுதியில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri
இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் செத்ரிக்கு இந்தாண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. #SunilChhetri #IndianFootballerAward2018
கொல்கத்தா:
இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக ஐதராபாத் நகரை சேர்ந்த சுனில் செத்ரி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் நடந்த கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பையை இந்தியா கைப்பற்றியது. கென்யாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சுனில் செத்ரி இரண்டு கோல்கள் அடித்தார். இதன்மூலம் சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா வீரர் மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அவரது இந்த சாதனையை பாராட்டும் வகையில் இந்தாண்டுக்கான சிறந்த இந்திய கால்பந்து வீரர் விருது சுனில் செத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இன்று நடந்த விருது வழங்கும் விழாவில் இந்திய கால்பந்து சம்மேளனத்தில் துணை தலைவர் சுப்ரதா தத்தா சுனில் செத்ரிக்கு விருதை வழங்கினார்.
இந்த விழாவில் சுனில் செத்ரியில் மாமனாரும், முன்னணி கால்பந்து பயிற்சியாளருமான சுப்ரதா பட்டாச்சாரியா கலந்துகொண்டார். #SunilChhetri #IndianFootballerAward2018
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாட கடினமான அணியுடன் விளையாட வேண்டும் என்று சுனில் செத்ரி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி. இவரது சிறப்பான ஆட்டத்தால் கென்யா அணியை வீழ்த்தி இந்தியா இன்டர்கான்டினல் கோப்பையை வீழ்த்தியது.
இந்தியா அடுத்த வருடம் தொடக்கத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெளிப்படுத்த வேண்டுமென்றால் இந்தியா கடினமான அணியுடன் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் செத்ரி கூறுகையில் ‘‘முடிந்த அளவிற்கு நாம் அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும். வெளிநாட்டு மண்ணில் நம்முடைய சாதனை மிகவும் மோசமாக இருக்கிறது.
இந்திய மண்ணிற்கு தரவரிசையில் சிறந்து விளங்கும் அணியை அழைக்க முடியவில்லை. ஆனால், ஆசியாவில் சிறந்த 10 அணிகளுடன் நாம் வெளிநாட்டு மண்ணில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.
இந்தியா அடுத்த வருடம் தொடக்கத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெளிப்படுத்த வேண்டுமென்றால் இந்தியா கடினமான அணியுடன் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் செத்ரி கூறுகையில் ‘‘முடிந்த அளவிற்கு நாம் அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும். வெளிநாட்டு மண்ணில் நம்முடைய சாதனை மிகவும் மோசமாக இருக்கிறது.
இந்திய மண்ணிற்கு தரவரிசையில் சிறந்து விளங்கும் அணியை அழைக்க முடியவில்லை. ஆனால், ஆசியாவில் சிறந்த 10 அணிகளுடன் நாம் வெளிநாட்டு மண்ணில் விளையாடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற கென்யா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு கேப்டன் சுனில் செத்ரி நன்றி தெரிவித்துள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup
மும்பை:
மும்பையில் நடைபெற்று வரும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் நேற்று மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.
இப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் 100வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய சுனில் செத்ரி இரண்டு கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர்.
இந்த போட்டிக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு இந்திய அணியின்
கேப்டன் சுனில் செத்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் சுனில் செத்ரி கூறியிருப்பதாவது:-
இன்றைய போட்டியில் கிடைத்த ஆதரவு நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் கிடைத்தால், மைதானத்தில் எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்தியா, இந்த இரவு சிறப்பானது, ஏனெனில் நாம் இன்று ஒன்றாக இருந்தோம். மைதானத்திற்கு வந்து ஆரவாரம் செய்தும், வீட்டில் இருந்தும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup
கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #SachinTendulkar #SunilChhetri #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup
மும்பை:
இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 2 கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தேவைப்பட்ட சிறப்பான வெற்றி இது. நன்றாக விளையாடினீர்கள், இந்தியா. 100-வது போட்டி, இரு கோல்கள் என்பது சிறந்த சாதனை, சுனில் செத்ரி”, என சச்சின் கூறியுள்ளார்.

ஏற்கனவே சுனில் செத்ரி போட்டியை காண வருமாறு ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கைக்கு சச்சின் ஆதரவாக பதிவு செய்திருந்தார். நேற்றைய போட்டியை காண 8 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 100-வது சர்வதேச கால்பந்து போட்டியில் இன்று விளையாடுகிறார். #SunilChhetri
மும்பை:
4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் சீனதைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித்தள்ளிய இந்திய அணி இன்று 2-வது லீக்கில் கென்யாவை எதிர்கொள்கிறது. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டியாகும்.
33 வயதான சுனில் சேத்ரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘100 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உண்மையிலேயே இதை நம்ப முடியவில்லை. இது பற்றி எனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார். இந்த மைல்கல்லை எட்டும் 2-வது இந்தியர் (முதலில் பாய்சுங் பூட்டியா) என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமை அளிக்கிறது’ என்றார். #SunilChhetri
4 அணிகள் பங்கேற்றுள்ள கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் சீனதைபேயை 5-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கித்தள்ளிய இந்திய அணி இன்று 2-வது லீக்கில் கென்யாவை எதிர்கொள்கிறது. இது இந்திய கேப்டன் சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டியாகும்.
33 வயதான சுனில் சேத்ரி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘100 சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. உண்மையிலேயே இதை நம்ப முடியவில்லை. இது பற்றி எனது தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார். இந்த மைல்கல்லை எட்டும் 2-வது இந்தியர் (முதலில் பாய்சுங் பூட்டியா) என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமை அளிக்கிறது’ என்றார். #SunilChhetri
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ரசிகர்களுக்கு விடுத்த உருக்கமான கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆதரவளித்துள்ளார். #SunilChhetri #ViratKohli #SachinTendulkar #IntercontinentalCup
மும்பை:
இந்தியாவை பொருத்தவரை கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ள ரசிகர்கள் வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லை. மற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல சாதனைகள் புரிந்துள்ள போதிலும் அவர்கள் வெகுவாக கவனிக்கப்படுவதோ, ஆதரவளிக்கப்படுவதோ இல்லை.
பிபா தரவரிசையில் தற்போது 97-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. 97-வது இடம்தான என சாதாரமாக கடந்து செல்ல வேண்டாம். 130-வது இடத்தில் இருந்து இந்தியா 100-க்குள் வந்துள்ளது. தற்போது கேப்டனாக இருக்கும் சுனில் சேத்ரியின் தலைமையில் இந்த முன்னேற்றம் சாத்தியமானது.
தற்போது நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும்.

ஆனால் அவரது இந்த சாதனையை மைதானத்தில் இருந்து பார்த்தது வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே. இதனால், மிகுந்த வருத்தமடைந்த சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நாங்கள் உங்களது நேரத்தை பயணக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம். இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். மேலும் மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை எனவும் அவர் கூறினார்.
சுனில் சேத்ரியின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆதரவு அளித்தார். இதுகுறித்து கோலியும் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் தயவு செய்து இந்திய கால்பந்து அணி கேப்டனின் வீடியோவை பார்த்து எதாவது செய்யுங்கள் என கூறியிருந்தார்,
இந்நிலையில், கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரும் சுனில் செத்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சச்சினும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் பதிவு செய்திருந்ததாவது, நமது அணி எப்போது, எங்கு விளையாடினாலும் மைதானத்தை நிரப்பி ஆதரவளிப்போம், என அவர் கூறியுள்ளார்.

இந்திய கால்பந்து அணி நாளை நடைபெறும் போட்டியில் கென்யாவை எதிர்கொள்கிறது. சச்சின் மற்றும் கோலியின் இந்த பதிவுகளால் நாளை இந்திய அணி விளையாடும் போட்டிக்கு ஆதரவு அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. இந்த போட்டி சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. #SunilChhetri #ViratKohli #SachinTendulkar #IntercontinentalCup
எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள். ஆனால், இந்திய அணி விளையாடும் போட்டியை நேரில் பார்க்க வாருங்கள் என கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். #SunilChhetri
மும்பை:
கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கோலோச்சி வருவதாலோ என்னவோ, மற்ற விளையாட்டுகளான கால்பந்து, ஆக்கி ஆகிய போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மோகம் குறைவே. இந்திய கிரிக்கெட் அணியில் சிறிய ஒரு விவகாரம் என்றாலும் பெரிதாக பேசப்படும் நிலையில், இந்திய கால்பந்து அணி என்ன செய்து வருகின்றது என்பது கூட பலருக்கு தெரியாத ஒன்றே. இதனை தேடவும் யாரும் விரும்புவது இல்லை.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பல பகுதிகளில் கால்பந்து பிரதான விளையாட்டாக இருந்தாலும், அவர்கள் விரும்பி பார்ப்பது ஐரோப்பிய கிளப் ஆட்டங்களே. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என சர்வதேச வீரர்களுக்குதான் இங்கு ரசிகர்கள் அதிகம். அதில், தவறு இல்லை என்றாலும் ஐரோப்பிய கால்பந்தை சிலாகிப்பவர்கள் இந்திய அணியை கண்டுகொள்வதில்லை.
பிபா தரவரிசையில் தற்போது 97-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. 97-வது இடம்தான என சாதாரமாக கடந்து செல்ல வேண்டாம். 130-வது இடத்தில் இருந்து இந்தியா 100-க்குள் வந்துள்ளது. தற்போது கேப்டனாக இருக்கும் சுனில் சேத்ரியின் தலைமையில் இந்த முன்னேற்றம் சாத்தியமானது.

தற்போது நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும்.
துயரம் என்னவென்றால் அவரது இந்த சாதனையை மைதானத்தில் இருந்து பார்த்தது வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே. இதனால், மிகுந்த வருத்தமடைந்த சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,
ஐரோப்பிய கால்பந்து கிளப் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள். ஒத்துக்கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை. ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயணக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்.
இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை
என்று தனது உருக்கமான கோரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். சுனில் சேத்ரியின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆதரவு அளித்துள்ளார். இந்திய கால்பந்து அணி வரும் 4-ம் தேதி கென்யாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.