என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "India-Bangladesh"
- முன்னதாக சீனாவுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
- வங்காள தேசத்துடனான ஆட்டத்தில் முதற்பகுதி கோல் ஏதும் இல்லாமல் தொடர்ந்தது
ஆசியாவிலுள்ள நாடுகளுக்கிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games) நாளை மறுநாள் தொடங்கி அக்டோபர் 8 வரை சீனாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சீனாவின் ஹேங்ஜவ் நகரில் ஜியாவோஷான் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குரூப் ஏ (Group A) விளையாட்டுகளில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று 1-0 எனும் கோல்கணக்கில் தோற்கடித்தது.
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவிடம் இந்தியா 5-1 எனும் கோல்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போதைய வங்காள தேச போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், இந்தியா இப்போட்டி தொடரில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
ஆட்டத்தின் முதற்பகுதியில் இந்தியா கோல் போடுவதற்கு கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை கோட்டை விட்டது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் கிட்டத்தட்ட இதே நிலை நீடித்தது.
ஆனால் ஆட்ட நேரத்தின் 85-வது நிமிடத்தில் வங்காள தேசத்தின் கேப்டன் ரஹ்மத் மியா ஃபவுல் ஆட்டம் ஆடியதை தொடர்ந்து இந்தியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முன்வந்து சிறப்பாக கோல் போட்டார்.
இதன் மூலம் 1-0 எனும் கோல் கணக்கில் இந்தியா வென்று, ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறாமல் தனது நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.
இதில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் 48.5 ஓவரில் 239 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் வங்காள தேசம் 37 ரன்னில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டித்தொடரில் ஏற்கனவே வங்காள தேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் வங்காள தேசம் அணியை சாதாரணமாக எடை போட இயலாது. பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடவேண்டும்.
தொடக்க வீரர்களான தவான் (327 ரன்), ரோகித் சர்மா (269 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் தவான் இரண்டு சதமும், ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதமும் அடித்துள்ளனர். இருவரது ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும் இதே போல் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்கள்.
பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ் (இருவரும் தலா 7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்), யசுவேந்திர சாஹல் (5 விக்கெட்), ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
வங்காள தேசம் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 2012-ல் பாகிஸ்தானிடமும், 2016-ல் இந்தியாவிடமும் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது.
அந்த அணியில் முஷ்பிகுர் ரகிம் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 297 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார்.
பந்துவீச்சில் முஷ்டாபிசுர் ரகுமான் 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்க கூடியவர். முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஹகீப்-அல்-ஹசன் காயத்தால் விலகியது வங்காளதேச அணிக்கு பாதிப்பே.
இரு அணிகளும் ஆசிய கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AsiaCupfinal #AsiaCup2018 #INDvBAN
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்