search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup 2018"

    ஆசிய கோப்பை பரிசளிப்பு விழாவின்போது வெற்றிக் கோப்பையை என்னிடம் வழங்குமாறு ரோகித் சர்மாவை டோனி கேட்டுக்கொண்டார் என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது.

    இந்தியா - வங்காள தேசம் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இடம் பிடித்திருந்தார். பரிசளிப்பு விழாவின்போது ஆசிய கோப்பையை கேப்டன் ரோகித் சர்மா வாங்கியதும், உடனடியாக கலீல் அகமது கையில் கொடுத்தார். கலீல் அகமது உற்சாக மிகுதியால் கோப்பையை தூக்கி காண்பித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.



    அறிமுக தொடரை இந்தியா கைப்பற்றியதில் அவருக்கு எல்லையிலா மகிழ்ச்சி. அத்துடன் கோப்பையை வாங்கியதும் அதைவிட மகிழ்ச்சி. நான் மிகவும் இளம் வீரர் மற்றும் எனக்கு தொடக்க தொடர் என்பதால் டோனிதான் ரோகித் சர்மாவிடம் கோப்பையை என்னிடம் வழங்குமாறு கூறினார் என்ற நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ‘‘வெற்றிக் கோப்பையை என்னிடம் வழங்கி இருவரும் கோப்பையை பெறுமாறு ரோகித் சர்மாவிடம் டோனி கேட்டுக்கொண்டார். ரோகித் சர்மா என்னிடம் கோப்பையை வழங்கினார்.

    ஏனென்றால், நான்தான் அணியில் இளம் வீரர். மேலும், இது என்னுடைய அறிமுக தொடர். இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’ என்றார்.
    ஆசிய கோப்பை தொடரின்போது டோனியிடம் கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் தேர்வுக்குழுவினர் மிகவும் அதிருப்பதி அடைந்தார்களாம். #MSDhoni
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது.

    இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியை உறுதி செய்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் மகேந்திர சிங் டோனி கேப்டனாக செயல்பட்டார். அவரைத் தவிர வேறு யாரையும் கேப்டனாக்க முடியாத நிலை ஏற்பட்டது.



    இப்படி தள்ளப்பட வேண்டிய சூழ்நிலை எற்பட்டதில் தேர்வு குழுவிற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். அவருக்கு கேப்டன் பதவியை அணி நிர்வாகம் கொடுத்ததில் அவர்கள் அதிருப்பதி அடைந்தார்கள் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

    டோனி ஏற்கனவே 199 ஒருநாள் போட்டியில் கேப்டனாக பணியாற்றியிருந்தார். இந்த போட்டியின் மூலம் 200 போட்டியில் கேப்டனாக பணியாற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    200 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக பணியாற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியை இந்தியா கஷ்டப்பட்டு ‘டை’ செய்தது குறிப்பிடத்தக்கது.
    தெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக இருந்தாலும் டோனி தான் கிரிக்கெட்டின் அரசர் என ஹாங்காங் வீரர் இஷான்கான் புகழாரம் சூட்டியுள்ளார். #Dhoni #EhsanKhan
    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் டோனி ரன் எதுவும் எடுக்காமல் ‘டக்‘ அவுட் ஆனார். அவர் இஷான்கான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த இஷான் கான் ஹாங்காங் அணிக்காக ஆடி வருகிறார். அவர் டோனியை கிரிக்கெட் கிங் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக இஷான்கான் கூறியதாவது:-

    தெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக இருந்தாலும் டோனி தான் கிரிக்கெட்டின் அரசர் (கிங்). நான் சுயசரிதை எழுத திட்டமிட்டுள்ளேன். அதில் டோனி தான் முக்கிய பங்காக இருப்பார்.

    தெண்டுல்கர், டோனியை அவுட் செய்வது எனது கனவாக இருந்தது. தெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டதால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. டோனியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் எனது கனவு நனவானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    33 வயதான இஷான்கான் 15 ஒருநாள் போட்டியில் விளையாடி 29 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.  #Dhoni #EhsanKhan #SachinTendulkar #MSDhoni
    ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ்க்கு தவறான முறையில் அவுட் வழங்கியதாக கூறி விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேச ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். #ViratKohli #AsiaCup2018 #LitonDas
    புதுடெல்லி :

    சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியின் கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.  

    அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், 117 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இவரது சதத்தின் உதவியுடன் வங்கதேச அணி 222 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார். முதலில் களத்தில் இருக்கும் நடுவருக்குக் குழப்பம் வரவே, முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.  

    இருப்பினும் வங்காளதேச ரசிகர்கள் நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டார், இதுவே தங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என புலம்பி வந்தனர்.


    இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அதில், ’டியர் ஐசிசி, கிரிக்கெட் ஜெண்டில்மேன்கள் விளையாடும் விளையாட்டு இல்லையா ?. இது எப்படி அவுட் என்று கூறுங்கள். தவறாக அவுட் வழங்கிய நடுவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த உலகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் இணையதள பக்கங்கள் மீண்டும் மீண்டும் முடக்கப்படும். இந்திய சகோதர சகோதரிகளே, உங்களை அவமானப்படுத்தும் நோக்கில் நாங்கள் இதை நாங்கள் செய்யவில்லை. உங்கள் அணிக்கு இப்படி ஒரு அநீதி நடந்தால் உங்களது உணர்வுகள் எப்படி இருக்கும் என நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்.

    கிரிக்கெட் விளையாட்டில் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதற்காக இறுதி வரை நாங்கள் போராடுவோம்’ என முடக்கப்பட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த சி.எஸ்.ஐ சைபர் போர்ஸ் எனும் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இத்தனைக்கும், ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஓய்வில் இருந்தார் ரோகித் சர்மா தான் கேப்டனாக அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #AsiaCup2018 #LitonDas
    ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி என்று இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

    இலங்கை அணி தொடக்க சுற்றோடு வெளியேறிய நிலையில் பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ‘சூப்பர் 4’ சுற்றோடு வெளியேறியது. ஆசிய அணிகளில் இந்தியாதான் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பேலன்ஸ் கொண்ட அணி என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனும் ஆன மகேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘இந்திய ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. அவர்களின் வெளிப்பாடு கேப்பையை வெல்ல தகுதியுடையதாக இருந்தது. ஆனால், நாம் எதிர்பார்த்ததை விட ஏராளமான போட்டிகள் மிகவும் நெருக்கமாக வந்து பரபரப்பு ஏற்படுத்தின.

    வங்காள தேச அணி தமிம் இக்பால் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்கள் இல்லாமல் விளையாடியது. அவர்கள் வங்காள தேசத்திற்கு தலை நிமிர்ந்து செல்ல முடியும். எனினும், நல்ல தொடக்க கிடைத்தும் வெற்றி பெற முடியாமல் போனதே என்ற பெரிய ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கும்.



    வங்காள தேசம் 260 ரன்களுக்கும் மேல் அடித்திருக்க வேண்டும். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். அதை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

    மிக்க மகிழ்ச்சியோடு இந்தியா சொந்த நாடு திரும்பும். புதிய வீரர்கள் மற்றும் புதிய கம்பினேசன்களை இந்த தொடர் செய்து பார்த்தார்கள். ஆனால் உலகக்கோப்பைக்கு அவர்கள் தயார் ஆகி வருவதை காட்டியது. ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி ’’ என்றார்.
    ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்ததோடு, கடும் நெருக்கடி வங்காள தேசத்திற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் 222 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா கஷ்டப்பட்டு கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மிகவும் பரப்பாக சென்ற போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்கள். கடும் சவாலாக விளங்கிய வங்காள தேச அணிக்க பாராட்டுக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ஆட்டங்களில் 342 ரன்கள் குவித்து ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார். #AsiaCup2018 #ShikharDhawan
    துபாய்:

    இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையில் அதிரடியாகவும், பரபரப்பாகவும் விளையாடிய இந்திய அணி தனது வெற்றியை நிலைநாட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடி தனது திறமையை அனைத்து வீரர்களும் வெளிப்படுத்தினர்.

    இந்த ஆசிய கோப்பை விளையாட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரை சதத்துடன் 317 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.



    இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் மூலம் தொடக்க ஆட்டக்காரர் தவான் 5 ஆட்டத்தில் விளையாடி 342 ரன் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 68.40 ஆகும். இரண்டு சதம் அடித்து, அதிகபட்சமாக 127 ரன்கள் குவித்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் தவான் முதலிடத்தை பிடித்து, தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றியுள்ளார்.

    வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரகீம் 1 சதத்துடன் 302 ரன் எடுத்து 3-வது இடத்திலும், ஆப்கானிஸ் தானை சேர்ந்த முகமது‌ஷசாத் 268 ரன் எடுத்து 4-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 6 ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 45 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாகும். இதேபோல, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கானும், முஷ்டாபிசுர் ரகுமானும் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இருவரும் 5 ஆட்டத்தில் இந்த விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 8 விக்கெட்டுகளும், ஜடேஜா 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். #AsiaCup2018 #ShikharDhawan
    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது, உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று ரோகித்சர்மா கூறியுள்ளார்.#AsiaCup2018 #INDvBAN

    துபாய்

    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டித் தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இருந்தது. இந்தப் போட்டித் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதற்கு நல்ல வெகுமதி கிடைத்தது. வீரர்களின் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றோம். அனைத்து வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் கோப்பையை வென்று இருக்க முடியாது. எல்லா பெருமையும் அவர்களை சேரும்.


    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கள் (நடுவரிசை வீரர்) நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடியது முக்கியமானது. அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம் அருமையானது.

    அதோடு வங்காளதேச அணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் 10 ஓவரில் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். பந்து பழசாகிவிட்டால் எல்லாம் மாறும் என்று தெரியும். ரசிகர்களும் திரளாக வந்து தங்களது சிறப்பான ஆதரவை அளித்தார்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.. #AsiaCup2018 #INDvBAN
    துபாய் :

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

    இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    தோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில்  பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.

    இதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.

     

    இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.

    ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.

    இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்கள்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. இதில் இருந்து பின்னர் வங்காள தேசத்தால் மீள இயலவில்லை. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார்.



    மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள். 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்த வங்காள தேசம் 44 ஓவரில்தான் 200 ரன்னைத் தொட்டது. சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசம் 24 ஓவரில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 128 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது. ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.

    இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது. இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.



    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

    2-வது விக்கெட்டுக்கு லிட்டோன் தாஸ் உடன் இம்ருல் கெய்ஸ் ஜோடி சேர்ந்தார். கெய்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்காள தேசம் 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் குவித்துள்ளது. லிட்டோஸ் 92 ரன்னுடனும் விளையாடி வருகிறார்.
    இந்திய அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே உள்பட ஐந்து வீரர்கள் ஆப்கானிஸ்தான் போட்டியோடு வெளியேறினார்கள். #AsiaCup2018
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது.




    ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது.

    இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தொடரில் இந்தியா இறுதிப் போட்டியோடு 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. கலீல் அகமது மட்டுமே ஹாங் காங் அணிக்கெதிராக இடம்பிடித்தார். மற்றவர்கள் ஒரு போட்டியோடு திருப்தியடைந்தனர்.
    ×