search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியில் பெரிய மாற்றங்கள்- ஆப்கானிஸ்தான் போட்டியோடு திருப்தியடைந்த ஐந்து வீரர்கள்
    X

    இந்திய அணியில் பெரிய மாற்றங்கள்- ஆப்கானிஸ்தான் போட்டியோடு திருப்தியடைந்த ஐந்து வீரர்கள்

    இந்திய அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே உள்பட ஐந்து வீரர்கள் ஆப்கானிஸ்தான் போட்டியோடு வெளியேறினார்கள். #AsiaCup2018
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது.




    ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது.

    இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தொடரில் இந்தியா இறுதிப் போட்டியோடு 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. கலீல் அகமது மட்டுமே ஹாங் காங் அணிக்கெதிராக இடம்பிடித்தார். மற்றவர்கள் ஒரு போட்டியோடு திருப்தியடைந்தனர்.
    Next Story
    ×