search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvPAK"

    • இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் 2012-13-க்குப் பிறகு நடைபெறவில்லை.
    • நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருக்கு இணையாக இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல போட்டியை நடத்தும் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் சிறந்ததாக இருக்கும்.

    ஆனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக இந்தியா தொடர்ந்த குற்றம்சாட்டியது. மேலும், எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் கிடையாது என இந்தியா தெரிவித்தது.

    இதன்காரணமாக 2012-13-க்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர்பான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.

    இந்த நிலையில் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் சம்மதம் தெரிவித்தால், நாங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் சிஇஓ தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதற்கு காரணமும் உள்ளது. ஏனென்றால் இந்த மாதம் நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியா செல்கின்றன. இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நவம்பர் 22-ந்தேதி தொடங்குகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.

    அப்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தொடரை நடத்திவிடலாம் என ஆஸ்திரேலியா விரும்புகிறது. 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை 90,293 ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ நிக் ஹாக்லி

    மீண்டும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றால் நிதி ரீதியாக சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என விக்டோரியா அரசும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. விக்டோரியாவில்தான் மெல்போர்ன் மைதானம் உள்ளது.

    நாங்கள் பாகிஸ்தானுக்காக இந்த போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவுக்காக போட்டியை நடத்துவதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களால் உதவ முடியும் என்றால் அது சிறப்பானது. ஆனால், இது இரு நாடுகளுக்கு இடையிலான தொடர். இது மற்றவர்களுக்காகத்தான் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • அசன் அவைஸ் 105 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    19 வயதுக்குட்பட்டோருக்கான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் "பி" பிரிவில், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மல்லுக்கட்டின. "டாஸ்" வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. ஆதர்ஷ் சிங் (62 ரன்), கேப்டன் உதய் சாஹரன் (60 ரன்), சச்சின் தாஸ் (58 ரன்) அரைசதம் அடித்தனர். உதிரியாக 17 வைடு உள்பட 20 ரன்கள் கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

    அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சமைல் ஹூசைன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடி இந்திய பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஷசாயிப் கான் 63 ரன்கள் திரட்டினார்.

    3-வது விக்கெட்டுக்கு அசன் அவைசும், கேப்டன் சாத் பெய்க்கும் கூட்டணி போட்டு அணியை சிக்கலின்றி இலக்கை நோக்கி பயணிக்க வைத்தனர். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

    பாகிஸ்தான் 47 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசன் அவைஸ் 105 ரன்களுடனும் (130 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் சாத் பெய்க் 68 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

    2-வது லீக்கில் ஆடிய இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இந்தியா தனது கடைசி லீக்கில் நேபாளத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 73 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை சாய்த்தது. இதில் ஜம்ஷித் ஜட்ரனின் சதத்தின் (106 ரன்) உதவியுடன் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 262 ரன் இலக்கை நோக்கி ஆடிய நேபாளம் 40.1 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • அகமதாபாத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று நடைபெறுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    • 50 ஓவர்கள் விளையாடி 260 ரன்கள் வரை எடுத்திருக்கலாம்
    • விளையாட்டுக்கான திட்டமிடல் இல்லை. அணுகுமுறை இல்லை

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தியா 356 ரன்கள் அடித்த நிலையில், பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது.

    இந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த அணுகுமுறையுடன் விளையாடினால், நெதர்லாந்தை வெல்வதற்குக் கூட திணற வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கம்ரான் அக்மல் கூறியதாவது:-

    நீங்கள் உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறீர்களா?. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட விரும்புகிறீர்களா?. இந்தியாவுக்கு எதிராக விளையாடிய அணுகுமுறையை கடைபிடித்தால், நெதர்லாந்துக்கு எதிராகக்கூட திணற வேண்டிய நிலை இருக்கும்.

    நிர்வாகம் என்ன செய்து கொண்டிக்கிறது?. உங்களை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய சொன்னது யார்?. குறைந்த பட்சம் நிலைத்து நின்று விளையாடுமாறு வீரர்களிடம் வலியுறுத்தியிருக்கலாம். உங்களுடைய ரன்ரேட் மிகவும் மோசமாக உள்ளது. வங்காளதேசத்திற்கு எதிராக ஏறக்குறைய 190 ரன்களை 40 ஓவர்களில் சேஸிங் செய்தீர்கள்.

    சதாப், இப்திகார், சல்மான் அவுட்டான விதம். அவர்களிடம் முழு ஓவர்களையும் விளையாடுமாறு தெரிவித்திருக்கனும். அப்படி விளையாடியிருந்தால் 260 முதல் 280 ரன்கள் வந்திருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அவர்களிடம் இதுபோன்று கேள்விகள் கேட்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.

    அங்கு விளையாட்டுக்கான திட்டமிடல் இல்லை. அணுகுமுறை இல்லை. எல்லோரும் விடுமுறைக்கு சென்றுள்ளனர். உங்களுடைய ஆட்டத்திறன் சிறந்த அணிக்கு எதிராக பள்ளிக்கூட சிறுவர்கள் போன்று இருந்தது என்பதை சொல்தற்கு வருந்துகிறேன்'' என்றார்.

    • 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
    • மழை விடாமல் பெய்து வந்ததால், இன்றைய போட்டி தடை செய்யப்பட்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை தொடங்கின.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர். இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    ஆனால், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மழை விடாமல் பெய்து வந்ததால், இன்றைய போட்டி தடை செய்யப்பட்டு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கனமழையால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகளவில் இருந்ததால் ரிசர்வ் டேவுக்கு போட்டி மாற்றம் செய்யப்பட்டது.

    நாளையும் மழை பெய்து போட்டி தடைபட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
    • விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    ஆசியக்கோப்பை 2023 தொடரின், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதைதொடர்ந்து, இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்கியது.

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷூப்மன் கில் ஆகியோர் அரை சதம் எடுத்து தலா 56 ரன்கள் மற்றும் 58 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

    இதைதொடர்ந்து, விராட் கோலியும் கே.எல்.ராகுலும் விளையாடி வருகின்றனர்.

    இதில், விராட் கோலி 16 பந்துகளில் 8 ரன்களும், கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து விளையாடி வந்தனர்.

    இந்நிலையில், 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்தது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்குகிறது.
    • போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதனால், 3 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்வதற்காக களமிறங்குகிறது.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசிய கோப்பையில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 168 ரன்கள் அடித்துள்ளார்
    • ஒருவர் சிறப்பாக விளையாடும்போது, அவரது திறமையை அறிய அனைவரும் விரும்புவர்

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை 3 போட்டிகளில் 168 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 84 ஆகும்.

    இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் பாபர் அசாம் உலகத்தரம் வாய்ந்த வீரர் என இந்தியாவின் தொடக்க வீரர் சுப்மான் கில் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியும் அவரை பாராட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

    பாபர் அசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்களின் விளையாட்டு, பின்பற்றுவீர்களா? என்ற கேள்விக்கு, ''ஆம். நிச்சயமாக நாங்கள் அவரை பின்பற்றுவோம். ஒரு வீரர் நன்றாகச் செயல்படும்போது, அவர்கள் ஏன் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள்? அவர்களின் சிறப்பு என்ன? என்பதைக் கண்டறிய அனைவரும் அவர்களை பார்க்கிறார்கள். . பாபருக்கும் அதுவே பொருந்தும். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், நாங்கள் அனைவரும் அவரைப் போற்றுகிறோம்'' என்றார்.

    • லீக் ஆட்டம் மழையால் இந்தியா பேட்டிங் செய்ததுடன் முடிவடைந்தது
    • இன்று மழைக்கு 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 48.5 ஓவரில் 266 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மழை பாதிப்புக்கு மத்தியில் அரங்கேறிய அடுத்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை ஊதித்தள்ளியது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும், 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் விக்கெட் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் மட்டும் விக்கெட் கைப்பற்றவில்லை. பீல்டிங் மெச்சும் வகையில் இருக்கவில்லை.

    இந்திய அணியின் ரன் குவிப்பு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமானதாகும்.

    அத்துடன் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கிலும் ஒருசேர முன்னேற்றம் காண வேண்டியதும் தேவையான ஒன்றாகும். குழந்தை பிறந்ததால் நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து தனது மனைவியை அருகில் இருந்து கவனிக்க மும்பை வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியினருடன் இணைந்து இருக்கிறார்.

    இதேபோல் காயம் காரணமாக முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் முழு உடல் தகுதியை எட்டி அணியினருடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பும்ரா, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புவதால் முகமது ஷமி, இஷான் கிஷனுக்கு இடம் கிடைப்பது கடினம்தான்.

    உலக தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சு எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை எளிதில் தோற்கடித்தது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கலக்கினர். சூப்பர் 4 சுற்றில் 193 ரன்னில் வங்காளதேசத்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பாபர் அசாம், இப்திகர் அகமது, இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வானும் பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்பும் நல்ல நிலையில் உள்ளனர். மேகமூட்டமான சூழல் நிலவுவது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

    இந்த போட்டி இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையேயான போராக வர்ணிக்கப்படுகிறது. மொத்தத்தில் நெருக்கடியை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணியின் கையே ஓங்கும்.

    போட்டி நடைபெறும் கொழும்பில் இன்று 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பல்லகெலேயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் ரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    • இதனால் அந்தப் போட்டி மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆசிய கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.

    நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி கொழும்புவில் பாகிஸ்தானை ச்சந்திக்கிறது. கொழும்புவில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால் லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் தடைப்பட்டது போல சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் தடைபட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

    இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (நடக்கும் இந்தியா, பாகிஸ்தான் சூப்பர்4 சுற்று ஆட்டத்திற்கு மட்டும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் (11-ம் தேதி) போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • முதலில் ஆடிய இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.
    • இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர்.

    பல்லேகலே:

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பான்டியா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இஷான் கிஷன் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 82 ரன்னும், ஹர்திக் பான்டியா 87 ரன்னும் குவித்து அசத்தினர்.

    பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழையால் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன்.
    • டோனி ரெய்னா மட்டும் இடையே வரலனா அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதில் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்.

    அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர். இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

    குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×