search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suryakumar Yadav"

    • இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் முதல் வெற்றியை எதிர் நோக்கி இரு அணிகளும் களமிறங்குகிறது.

    ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.

    • சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டா ஸ்டோரியில் பிரோக்கன் ஹார்ட் வைத்திருந்தார்.
    • அதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.

    ஐபிஎல் தொடர் 2024 வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்குகிறார்.

    ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது வரை அதற்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தற்போது டிரெண்டாகி வருகிறார்.

    அது ஏன் என்றால். அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் பிரோக்கன் ஹார்ட் வைத்திருந்தார். இவர் ஏன் இப்படி வைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசில ரசிகர்கள் ரோகித்க்கு ஆதரவாகவும் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படி வைத்ததாகவும் வதந்திகள் பரவி வந்தனர்.

    இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அடுத்த சோதனை நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதன் காரணமாக தான் அவர் அந்த ஸ்டோரி வைத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலையில் உள்ளது.

    • கடந்த டிசம்பர் மாதம் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
    • உடற்தகுதி பெற்றுள்ளார் என பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சான்று அளிக்கவில்லை.

    இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

    ஐபிஎல் 2024 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஆனால் ஒருசில வீரர்கள் காயத்தால் சில அணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    சூர்யகுமார் யாதவ் கடந்த டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடும்போது காயத்திற்கு உள்ளானார். காயத்திற்கு ஆபரேசன் செய்துள்ள அவர் இதுவரை விளையாடாமல் உள்ளார். பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐபிஎல் போட்டிக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 24-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 27-ந்தேதி எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் உடற்தகுதி பெற்று விட்டார் என பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சான்று அளிக்கவில்லை.

    இன்ஸ்டாகிராமில் காயம் குறித்து தகவல் தெரிவித்த சூர்யகுமார் யாதவ், பேட்டிங் செய்வது போன்ற வீடியோ ஏதும் வெளியிடவில்லை. இதனால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்தார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் சதம்(120) அடித்ததன் மூலம் ரோகித் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரோகித் (5 சதம்) சாதனையை மேக்ஸ்வெல் (5 சதம்) பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் ( 4 சதம்), பாபர் அசம் (3 சதம்), காலின் முன்ரோ (3 சதம்) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் நாட் அவுட் மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் முதல் இடத்திலும் ரோகித் 2-வது இடத்திலும் உள்ளனர். இதுபோக 4-வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் (117), பாப் டு பிளெசிஸ்(119) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவ் காயம் ஏற்பட்டது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் அவர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என்பதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கணுக்கால் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தற்போது அவர் குடலிறக்க பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று அங்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதனால் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.

    இருப்பினும் டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் தான் துவங்கும் என்பதனால் அதற்குள் அவர் தயாராகும் வரை கால அவகாசமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது.
    • 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீக்கியது.

    5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நீக்கியது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இணையதளங்களில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ், இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 'உடைந்த இதயம்' எமோஜியை அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது தான் காரணம் என பதிவு செய்து வருகின்றனர். ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.



     "மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமே தயாராக இருங்கள்.. உங்கள் வீழ்ச்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது" என தீவிர ரசிகை ஒருவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

    குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
    • குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் சூர்யகுமாரை அவுட்டாக்க பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் ஐடியா கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் தனக்கான பெயரை உருவாக்கி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக மைதானத்தில் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ளார். இதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் பந்து வீச தடுமாறுகிறார்கள்.

    இருப்பினும் பிட்ச்சின் ஒரு பக்கமாக வீசும் போது ஃபீல்டர்கள் இருப்பார்கள் என்பதால் டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட்டாக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பிருக்கும். ஆனாலும் லாங் ஆன், மிட் விக்கெட், கவர்ஸ் திசைக்கு மேல் என பந்தின் வேகத்தை பயன்படுத்தி பேட்டின் வேகத்தை திறந்து சூர்யா அடிப்பதால் பவுலர்கள் தடுமாறுகின்றனர்.

    அவர் தனது பீல்டர்களை தேர்வு செய்து மட்டுமல்லாமல் அவருக்கு தேவையான இடத்தை தேர்வு செய்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும் போது நீங்கள் அவருக்கு எதிராக திட்டங்களை செயல்படுத்துவது எளிதாக இருக்காது.

    எனவே நல்ல பந்துகளை வீசி அவரை அவுட்டாக்கும் வாய்ப்பை நீங்களே பெற வேண்டும். அதுவே அவரை தடுப்பதற்கான ஒரே வழியாகும். அது தான் இப்போட்டியின் இறுதியில் நடந்தது.

    இவ்வாறு ஜாகீர் கான் கூறினார்.

    • ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதம் அடித்துள்ளார்.
    • மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.

    ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் சூர்யகுமார் யாதவ் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் மற்றும் மேக்ஸ்வெல் ( இருவரும் தலா 4 சதம் ) உடன் முதல் இடத்தை சூர்யகுமார் பகிர்ந்துள்ளார்.

    ரோகித் சர்மா 148 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும், மேக்ஸ்வெல் 100 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 4 சதமும் அடித்துள்ளனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி 4 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்ய குமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
    • தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.

    கேப்டன் சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 100 ரன்னும் (7 பவுண்டரி, 8 சிக்சர்), ஜெய்ஷ்வால் 41 பந்தில் 60 ரன்னும் (6 பவுண்டரி,3 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகராஜ், லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் 95 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டேவிட் மில்லர் அதிகபட்சமாக 25 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மார்க்ராம் 14 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்தப் போட்டியில் பீல்டிங்கின் போது சூர்ய குமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பெவிலியன் சென்ற அவர் களத்துக்கு வரவில்லை. 

    வெற்றி குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    தற்போது நான் நலமாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது. காயத்தால் பயம் எதுவுமில்லை. எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. சதம் அடித்தது அற்புதமாக இருந்தது.

    இந்த சதம் வெற்றிக்காக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பயமில்லாத கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வீரர்களின் திறமையை நினைத்துப் பெருமைபடுகிறேன்.

    குல்தீப் யாதவ் பிறந்தநாளில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சிறந்த பிறந்தநாள் இதுவாகும்.

    இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்களை சேர்த்தது.

    கெபேஹா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 3வது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 2வது ஓவரின் கடைசி பந்தில் சுப்மன் கில் டக் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் சேர்த்த நிலையில் திலக் வர்மா 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிங்கு சிங் யாதவுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர்.


     

    சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்த நிலையில் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜிதேஷ் ஷர்மா ஒரு ரன்னில் வெளியேறினார். ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில், இந்தியா 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. ரிங்கு சிங் 68 ரன் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்ஸி 3 விக்கெட் வீழ்த்தினார். 

    தென் ஆப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்தது. அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. 

    • இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
    • களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.

    பெங்களூரு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது.

    ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 53 ரன்னும் ( 5 பவுண்டரி, 2 சிக்சர்), அக்ஷர் படேல் 21 பந்தில் 31 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 16 பந்தில் 24 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். பென் துவர் ஷிஸ், பெகரன்டார்ப் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பென் மெக்டர்மட் 36 பந்தில் 54 ரன்னும் ( 5 சிக்சர்) டிரெவிஸ் ஹெட் 18 பந்தில் 28 ரன்னும் ( 5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் மேத்யூ வேட் 15 பந்தில் 22 ரன்னும் ( 4 பவுண்டரி ) எடுத்தனர். முகேஷ் குமார் 3 விக்கெட்டும், அர்ஸ்தீப் சிங், பிஷ்னோய் தலா 2 , அக் ஷர் படேல் 1 விக்கெட டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி யது. ஏற்கனவே முதல், 2-வது மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது;-

    இந்த 20 ஓவர் தொடர் சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.

    எங்கள் வீரர்களிடம், உங்களுக்கு எது சரியென்று தெரிகிறதோ, அதை செய்து மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ஆடுங்கள் என்று கூறினோம். அவர்களும் அதனை தான் செய்தார்கள். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

    வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தீபக் சாஹர் அவசர மருத்துவ பரிசோதனைக்காக சென்றதால் அவர் இடத்தில் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ருத்ராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா

    ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:



    கே.எல்.ராகுல் (கேப்டன்), ருத்ராஜ் கெயிக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

    டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் விவரம் வருமாறு:



    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருத்ராஜ் கெயிக்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

    ×