search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arshdeep Singh"

    • முகமது ஷமி 2019 முதல் 2021 வரை 42 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • பியூஷ் சாவ்லா 87 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சண்டிகர் முல்லான்புரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த 2 விக்கெட்டுடன் 25 வயதான அவர் பஞ்சாப் அணிக்காக 59 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் முகமது ஷமியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    முகமது ஷமி 2019 முதல் 2021 வரை 42 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முகமது ஷமியின் சிறந்த பந்து வீச்சு 15/3 ஆகும். அர்ஷ்தீப் சிங்கின் சிறந்த பந்து வீசு்சு 32/5 ஆகும்.

    பியூஷ் சாவ்லா 87 போட்டிகளில் 84 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சந்தீப் ஷர்மா 61 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அக்சார் பட்டேல் 73 போட்டிகளில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • சஞ்சு சாம்சன் சதத்தால் இந்தியா 296 ரன்கள் குவித்தது.
    • அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட் சாய்க்க தென்ஆப்பிரிக்கா 218 ரன்னில் சுருண்டது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன.

    இந்த நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 296 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 108 ரன்களும், திலக் வர்மா 52 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் எடுத்தனர்.

    பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஹென்ரிக்ஸ்- ஜோர்ஜி ஜோடி நல்ல தொடக்க கொடுத்தது. ஹென்ரிக்ஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

    ஜோர்ஜி 81 ரன்னில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. தென்ஆப்பிரிக்கா 45.5 ஓவரில் 218 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீ்ழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

    • முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஜோகனஸ்பெர்க்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய பந்துவீச்சாளர்கள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    முன்னதாக இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.


    இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியல்:-

    சுனில் ஜோஷி 5/6 - 1999

    சாஹல் 5/22 - 2018

    ஜடேஜா 5/33 - 2023

    அர்ஷ்தீப் சிங் 5/37 - இன்று

    • டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஜோகனஸ்பெர்க்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஆடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ருத்ராஜ் கெயிக்வாட் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ஸ்ரேயஸ் அய்யர், சாய் சுதர்சனுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். ஸ்ரேயஸ் 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்தியா 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. சாய் சுதர்சன் அறிமுகப் போட்டியில் அரை சதம் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஜோகனஸ்பெர்க்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஆடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2016-க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பெற்ற முதல் இருதரப்பு தொடர் வெற்றி இதுவாகும். இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை நிக்கோலஸ் பூரன் தட்டி சென்றார்.

    இந்நிலையில் நிக்கோலஸ் பூரன் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

     

    அதில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அடிவயிற்றில் வாங்கிய காயங்களின் படத்தையும், நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றபோது பிராண்டன் கிங் அடித்த ஷாட் பூரன் இடது முன்கையைத் தாக்கியது. அந்த தழும்பையையும் மேற்கோள் காட்டி இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.
    • அர்ஷ்தீப் சிங் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணியான கெண்ட் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

    இந்நிலையில் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் பென் போக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கவுண்டி கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பதிவு செய்தார். அருமையான இன்ஸ்விங் மூலம் (LBW) இந்த விக்கெட் அவருக்கு கிடைத்தது.

    அவர் 14.2 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் நான்கு மெய்டன்கள் அடங்கும்.

    கென்ட் கிளப்பில் சேர இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை ஊக்கப்படுத்தியதாக அர்ஷ்தீப் தெரிவித்திருந்தார்.


    24 வயதான அர்ஷ்தீப் சிங் 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்தில் தனது முதல் அறிமுக போட்டியில் களமிறங்கினார்.

    அர்ஷ்தீப் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் 26 டி20 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20-யில் அவரது சிறந்த பந்துவீச்சு 4/37 ஆகும்.

    அவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார், அதில் அவர் 25 விக்கெட்டுகளை சராசரியாக 23.84 மற்றும் எகானமி ரேட் 2.92, 5/33 என்ற சிறந்த பந்துவீச்சுடன் எடுத்துள்ளார்.

    • எங்களது அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் என்று யாரும் இல்லை.
    • இந்த பிட்சில் பந்து நன்றாக திரும்பியது. அங்கு தான் எங்களது பேட்டிங்கும் பிரச்சனையாகி அமைந்துவிட்டது.

    ஐபிஎல் தொடரில் 53-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் ஆடியது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலமாக 2-வது முறையாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார் ரிங்கு சிங். இதற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்துக் கொடுத்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

    அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு வழியாக இந்த வெற்றியின் மூலமாக 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறியிருப்பதாவது:-

    இந்த பிட்சில் பேட்டிங் ஆடுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. 179 ரன்கள் எடுத்த எங்களால் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். கடைசி வரை போட்டி சென்றதற்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம்.

    எங்களது அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் என்று யாரும் இல்லை. ஆதலால் இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் ஆடி அதிக ரன்கள் எடுத்துவிடுகிறார்கள். அவர்களது விக்கெட்டை கைப்பற்ற நாங்கள் திணறி வருகிறோம்.

    இந்த பிட்சில் பந்து நன்றாக திரும்பியது. அங்கு தான் எங்களது பேட்டிங்கும் பிரச்சனையாகி அமைந்துவிட்டது. இதனால் குறைவான ரன்கள் எடுத்து தோற்றுவிட்டோம்.

    இவ்வாறு தவான் கூறினார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதில் 2 விக்கெட்டில் 2 ஸ்டெம்புகளை உடைத்தார்.

    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் டக் அவுட்டில் ரோகித் சர்மா வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 15 முறை டக் அவுட் ஆன தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் நரேன் ஆகியோரின் மோசமான சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கி உள்ளார். அவர் 3.5 ஓவரில் 66 ரன்கள் விட்டுகொடுத்துள்ளார். ஒரு வீரர் 4 ஓவர்களை முழுவதுமாக வீசாமல் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 2 விக்கெட்டில் 2 ஸ்டெம்புகளை உடைத்தார். இதில் திலக் வர்மா விக்கெட்டும் அடங்கும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் அவர் பந்து வீச்சை விளாசினார். குறிப்பாக கடைசியாக அடித்த சிக்சர் 102 மீட்டர் தூரம் சென்றது.


    இதனை மும்பை அணி ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமின்றி விக்கெட் எடுத்த வீடியோவையும் சிக்சர் அடித்த வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

    • நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது.
    • சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும்.

    நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் கடுமையாக போராடி வென்று சமன் செய்துள்ளது.

    இந்நிலையில் உம்ரான் மாலிக், சிராஜ் போல் அர்ஷ்தீப்சிங் வேகமும் இல்லை என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அதனால் சில வேரியேஷன்களை கற்றுக் கொள்வதுடன் அடிப்படையை பின்பற்றினாலே நோ-பால் வீசுவதை தவிர்த்து விடலாம் என்று விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவருடைய புள்ளி விவரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. அது முக்கிய நேரத்தில் உங்களது வெற்றியை எதிரணிக்கு தாரை வார்க்கலாம். முந்தைய போட்டியிலும் அதுதான் நடந்தது. இதை தவிர்க்க அடிப்படையை சரியாக பின்பற்றுங்கள்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியன புதிய பந்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால் இந்திய துணை கண்டத்தில் பெரும்பாலும் பிளாட்டான பிட்ச்கள் தான் இருக்கும். அதில் நீங்கள் மெதுவான பந்துகள் அல்லது ஸ்லோயர் பவுன்சர்கள் போன்றவற்றை வீச வேண்டும். மேலும் சில வேரியேஷன் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவரிடம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு வேகமில்லை.

    எனவே அவர் சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும். ஏனெனில் அவர் முகமது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் கிடையாது. எனவே அடிப்படையை எளிமையாக பின்பற்ற வேண்டிய அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

    என்று கம்பீர் கூறினார்.

    • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
    • அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பவுலிங்கில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு தோல்வியை தேடி தந்தார் என்றே கூற வேண்டும். நோ-பால் மற்றும் அர்ஷ்தீப்பை பிரிக்க முடியாத நிலையில் உள்ளது.

    ஸ்ரீலங்கா தொடரை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் நோ பால் வீசினார். கடைசி ஓவரில் ஒரு நோ பால், மூன்று தொடர்ச்சியான சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என கடைசி ஓவரை முடித்தார்.

    அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும்.

    அர்ஷ்தீப்புக்கு நீண்ட ரன்-அப் உள்ளது. அங்கே சக்தியை வீணடிக்கிறார். எனவே, நோ-பால்களுக்கு முக்கிய காரணம் அவரது நீண்ட ரன்-அப். எனவே, அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்" என்று கைஃப் கூறினார்.

    • அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது.
    • நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார்.

    புனே:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியில் இந்தியவின் தோல்வியை விட, அர்ஷ்தீப் சிங் செய்த தவறு தான் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 2-வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் மட்டும் 3 முறை நோ பால்களை வீசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தேவையின்றி 13 ரன்கள் கூடுதலாக சென்றது. இதனால் அவருக்கு மீண்டும் 19-வது ஓவரில் வாய்ப்பு தரப்பட்டது.

    ஆனால் 19-வது ஓவரிலும் நோ பாலையே போட்டார். 19-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஷனகா ஆவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ பால் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

    இந்நிலையில் இதுகுறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது. நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    ×