என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arshdeep Singh"

    • ஃபார்ம் என்பது விராட் கோலிக்கு வெறும் வார்த்தையாகும்.
    • அவருடன் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆசிர்வாதமாகும்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நடந்தது. மழையால் 26 ஓவர்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக டிஎல்எஸ் விதிமுறைப்படி 26 ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியா 21.1 ஓவரிலேயே வெற்றி பெற்றது.

    முன்னதாக அந்தப் போட்டியில் 224 நாட்கள் கழித்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோகித் சர்மா 8 ரன்னிலும் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் 7 மாதங்களுக்குப் பின் விளையாடும் அவர்கள் ஃபார்மை இழந்து விட்டார்களா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் விராட் கோலி போன்றவருக்கு ஃபார்ம் என்பது வெறும் வார்த்தை மட்டுமே என்று இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    ஃபார்ம் என்பது விராட் கோலிக்கு வெறும் வார்த்தையாகும். ஏனெனில் இந்தியாவுக்காக 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு எப்படி தொடர்ந்து செல்ல வேண்டும் என்பது தெரியும். அவருடன் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆசிர்வாதமாகும்.

    முன்னோக்கி செல்கையில் இத்தொடரில் அவர் நிறைய ரன்கள் அடிப்பார்கள் என்று நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மாஸ்டராக செயல்பட்டுள்ளார். அதைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை வேண்டுமானால் அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் கேளுங்கள்.

    என்று அர்ஷ்தீப் சிங் கூறினார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.
    • பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உடன் மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷிவம் துபே இருப்பதால், அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. நேற்று இலங்கைக்கு எதிராக 4 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினாலும், சூப்பர் ஓவரை அட்டகாசமாக வீசினார். இவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் டி20-யில் அர்ஷ்தீப் சிங்தான பிரீமியர் பவுலர் என அஸ்வின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன்பே, அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவன் அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏன் இந்தியாவின் பிரீமியர் பவுலர்களில் ஒருவர் என்பதை அவர் காட்டினார்.

    இந்திய அணியில் பும்ரா இருக்கும்போது, மக்கள் அர்ஷ்தீப் சிங்கை பற்றி அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் பிரீமியர் பவுலர் என்று கூறுவேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • அந்த போட்டியில் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகையை செய்தார்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் துபாயில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.

    அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.

    அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் ஹாரிஸ் ராஃப் சைகைக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது சைகை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஓமனுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் கைப்பற்றினார்.
    • இதன் மூலம் அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 100-வது விக்கெட்டை தொட்டார்.

    ஓமனுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 100-வது விக்கெட்டை தொட்டார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். தனது 64-வது போட்டியில் இந்த மைல்கல்லை அவர் அடைந்தார்.

    அர்ஷ்தீப் சிங் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் அறிமுகம் ஆனார். 3 ஆண்டுகள் 74 நாட்களில் அவர் இந்த சாதனையை புரிந்தார். டெஸ்ட்டில் வினோ மன்காட்டும் (23 போட்டி) ஒரு நாள் போட்டியில் கபில்தேவும் (77 ஆட்டம்) 100 விக்கெட்டை எடுத்த முதல் இந்திய வீரர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வரிசையில் அர்ஷ்தீப் சிங் இணைந்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக 20 ஓவர் போட்டியில் மற்ற இந்திய வீரர்களான யுஸ்வேந்திர சாஹல் (80 ஆட்டம்), ஹர்திக் பாண்ட்யா (117) ஆகியோர் தலா 96 விக்கெட்டும், பும்ரா 92 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    100 விக்கெட்டை குறைந்த கால அளவில் கைப்பற்றிய 2-வது வீரர் அர்ஷ்தீப் சிங் ஆவார். பக்ரைன் வீரர் ரிஸ்வான் பட் 2 ஆண்டுகள் 240 நாட்களில் 100 விக்கெட்டை தொடடார். அதிகவேகமாக 20 ஓவர் விக்கெட்டை வீழ்த்திய 4-வது வீரர் அர்ஷ்தீப் சிங் ஆவார். ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) 53 ஆட்டத்திலும், நேபாளை சேர்ந்த சந்தீப் லமீச்சனே 54 போட்டியிலும், ஹசரங்கா 63 ஆட்டத்திலும் வீழ்த்தி இருந்தனர்.

    • மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட இருந்த நிலையில், காயத்தால் விலகினார்.
    • ஓவல் மைதானத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாக வாய்ப்பு இருந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயத்தால் வாய்ப்பு எட்டவில்லை. இதனால் அன்ஷுல் கம்போஜ் அணியில் இடம் பெற்றார்.

    தற்போது காயம் குணமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 5ஆவது போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதனால் 5ஆவது போட்டியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பும்ரா மூன்று போட்டியில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் மூன்று போட்டிகளில் விளையாடி விட்டார். இதனால் கடைசி போட்டியில் விளையாடுவாரா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே ஆகாஷ் தீப் 4ஆவது போட்டியில் விளையாடவில்லை. அவரும் 5ஆவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் ஆகியோர் களம் இறங்கினால் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் அல்லது ஷர்துல் தாகூர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    • இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
    • 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் பயிற்சியின் போது அர்ஷ்தீப் சிங் காயமடைந்தார்.

    இந்நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமாரும், 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங்கும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 

    இந்திய அணி; சுப்மன் கில் (C), ரிஷப் பண்ட் (VC & WK), ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ஜடேஜா, துருவ் ஜூரல் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    • இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளதால், சி.எஸ்.கே. வீரர்இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய கம்போஜ் சிறப்பாக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா பின் தங்கிய நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

    • பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம்.
    • பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். அவர் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் தனது பயிற்சி குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங்,

    பயிற்சி அமர்வைப் பொறுத்தவரை, எனது ஒரே வேலை சரியான இடத்தில் பந்துவீசுவது மட்டும் தான். ஏனெனில் எனது உடல் எப்படி ஒத்துழைக்கிறது, சிவப்பு பந்து கையிலிருந்து எப்படி வெளியே வருகிறது என்பதை நான் சரி பார்க்கிறேன்.

    ஏனெனில் அனைத்து வீரர்களும் நீண்ட காலமாக வெள்ளை பந்தை வைத்து விளையாடி வருகின்றனர். அதனால் நான் இந்த பயிற்சியை மிகவும் ரசித்தேன்.

    மேலும் பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம். பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது. அவர்கள் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தனர். மேலும் அவர்களிடம் போட்டி மனப்பான்மையும் இருந்தது. நாங்கள் எங்களின் ரிதமில் மட்டுமே வேலை செய்தாலும், அவர்கள் முழுமையான பயிற்சியை மேற்கொண்டனர். அதனால் அது இன்னும் வேடிக்கையாக இருந்தது. அதனால் நாங்கள் சரியான திட்டத்துடன் அவர்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டியிருந்தது.

    சாய் முதல் முறையாக அணியில் இணைந்துள்ளார். அவரும் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தார். கேப்டனும் நல்ல ஃபார்மில் தொடர்பில் இருந்தார். அதனால் நான் தொடர்ந்து முன்னேறவும், அவர்களை அடிக்கடி வெளியேற்றவும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறேன்.

    என்று தெரிவித்துள்ளார். 

    • பஞ்சாப் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் அதிக ஆதரவு கிடைக்கவில்லை.
    • பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் பஞ்சாப் அணி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அந்த அணிக்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை என்று ஒரு ரசிகரின் ஸ்னாப்சாட் செய்திக்கு அர்ஷ்தீப் பதிலளித்துள்ளார். மேலும் அனைவரும் தங்களை ஆதரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களை ஆதரித்ததற்கு நன்றி. நீங்கள் பஞ்சாபி இல்லை. ஆனால் நீங்கள் இன்னும் பஞ்சாபை ஆதரிக்கிறீர்கள். அதே நேரத்தில் பஞ்சாபை ஆதரிக்காத மற்றும் பல்வேறு விருப்பமான அணிகளைக் கொண்ட பல பஞ்சாப் மக்கள் உள்ளனர்.

    பஞ்சாப், அவர்களின் மாநிலம், அவர்களின் அணியை ஆதரிக்கவும், நாங்கள் வெற்றி பெறுவதைக் காண அதிக எண்ணிக்கையில் வரவும் நான் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று அர்ஷ்தீப் கூறினார்.

    • இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது சமி இடம்பெற மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இங்கிலாந்து தொடர் நடைபெற உள்ள நிலையில் இருவரும் ஓய்வு பெற்றதால் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக யார் நியமிக்கப்படுவார். அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கேப்டன் பதவிக்கு சுப்மன் கில், பும்ரா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது.

    இதற்கிடையே இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இன்று நிருபர்களை சந்திக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 16 முதல் 17 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    இதற்கிடையே வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, இங்கிலாந்து தொடரில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்திருந்தாலும் நீண்ட நேரம் பந்து வீசும் அளவுக்கு அவர் முழுமையாக குணமடையவில்லை என்றும், எனவே இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முகமது சமி இடம்பெற மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • கடைசி ஓவர்களை ஒரு இளம் வீரர் வீசுவது அத்தனை சுலபம் கிடையாது.
    • பும்ரா இல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங் இதனை சிறப்பாக செய்து வருகிறார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்களாதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வீசப் போவது அனுபவம் மிக்க ஷமியா அல்லது அர்ஷ்தீப் சிங்கா என ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கினார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அர்ஷ்தீப், யார்க்கர் பந்து வீச்சை பயன்படுத்தினார்.

    இதனால் அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியாவின் வெற்றி குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் டெத் ஓவர்களை வீச தயாராக இருக்கும்படி அர்ஷ்தீப் சிங்யிடம் ஏற்கனவே கூறியிருந்தாக தெரிவித்தார்.

    ஒரு இளம் வீரர் இதை செய்வது அத்தனை சுலபம் கிடையாது, அதற்கான நாங்கள் அவரை தயார்படுத்தினோம், கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிறப்பாக அதை கையாளுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இனியும் தொடர்ந்து அவர் சரியாக செய்வார் என்றும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும் நேற்றைய போட்டியில் தங்களது பீல்டிங் அற்புதமாக இருந்ததாகவும், சில கேட்சுகள் சிறப்பாக அமைந்தன. அழுத்தமான சூழலில் கேட்சுகளை பிடிப்பது எங்களது வீரர்களின் திறனை வெளிப்படுத்துகிறது, எங்களது பீல்டிங்கில் எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை என்றும் ரோகித் குறிப்பிட்டுள்ளார்.

    • பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் பார்ட்னர்ஷிப் போடுவது அவசியமாகும்.
    • பந்து வீச்சை பொறுத்தவரை அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் என்றே சொல்லலாம்.

    நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றாலும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் 1 -0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் புது முகங்களாக அர்ஷிதீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.

    ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜோடியாக அறிமுகமான இவர்கள் இடது - வலது கை பவுலர்களாக எதிரணிக்கு சவாலை கொடுப்பவர்களாக உள்ளனர்.

    இந்நிலையில் பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷிதீப் சிங் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    உம்ரான் மாலிக்குடன் நான் மகிழ்ச்சியாக செயல்படுகிறேன். என்னை போலவே அவரும் அவ்வப்போது நகைச்சுவைகளை செய்வார். பந்து வீச்சை பொறுத்தவரை அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் என்றே சொல்லலாம்.

    ஏனெனில் 155 வேகத்தில் அவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் அடுத்த ஓவரிலேயே 135 வேகத்தில் எதிர்கொள்ளும் என்னை சந்திக்கும் போது தடுமாறுகிறார்கள். அந்த வகையில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் செயல்படுகிறோம். இந்த நட்பை தொடர விரும்புகிறோம்.

    ஒருநாள் போட்டிகள் மிகவும் பெரியதாகும். அதில் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் பார்ட்னர்ஷிப் போடுவது அவசியமாகும். அதனால் எப்போதுமே என்னுடன் எதிர்புறம் பந்து வீசும் பவுலரை நான் பார்ப்பேன். அவர் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் நான் விக்கெட் எடுப்பதை விட ரன்களை குறைவாக கொடுக்க நினைப்பேன்.

    அதை செய்தாலே அழுத்தம் உண்டாகி யாருக்காவது விக்கெட் விழுந்து விடும். ஏனெனில் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். எனவே நான் எதிரணியை அட்டாக் செய்தால் என்னுடைய பார்ட்னர் பவுலர் கட்டுப்பாடாகப் பந்து வீசுவார்.

    என்று கூறினார். 

    ×