என் மலர்
நீங்கள் தேடியது "Arshdeep Singh"
- நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது.
- சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்ததாக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் 2வது போட்டியில் கடுமையாக போராடி வென்று சமன் செய்துள்ளது.
இந்நிலையில் உம்ரான் மாலிக், சிராஜ் போல் அர்ஷ்தீப்சிங் வேகமும் இல்லை என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். அதனால் சில வேரியேஷன்களை கற்றுக் கொள்வதுடன் அடிப்படையை பின்பற்றினாலே நோ-பால் வீசுவதை தவிர்த்து விடலாம் என்று விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவருடைய புள்ளி விவரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் நீங்கள் நோ-பால் வீசுவதை எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. அது முக்கிய நேரத்தில் உங்களது வெற்றியை எதிரணிக்கு தாரை வார்க்கலாம். முந்தைய போட்டியிலும் அதுதான் நடந்தது. இதை தவிர்க்க அடிப்படையை சரியாக பின்பற்றுங்கள்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளும் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியன புதிய பந்தில் நன்றாக வேலை செய்யும். ஆனால் இந்திய துணை கண்டத்தில் பெரும்பாலும் பிளாட்டான பிட்ச்கள் தான் இருக்கும். அதில் நீங்கள் மெதுவான பந்துகள் அல்லது ஸ்லோயர் பவுன்சர்கள் போன்றவற்றை வீச வேண்டும். மேலும் சில வேரியேஷன் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவரிடம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு வேகமில்லை.
எனவே அவர் சில வேரியேஷன்களில் முன்னேற்றம் காண வேண்டும். ஏனெனில் அவர் முகமது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் கிடையாது. எனவே அடிப்படையை எளிமையாக பின்பற்ற வேண்டிய அர்ஷ்தீப்சிங் நோ-பால் வீசுவதை தவிர்க்க வேண்டும்.
என்று கம்பீர் கூறினார்.
- நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
- அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பவுலிங்கில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு தோல்வியை தேடி தந்தார் என்றே கூற வேண்டும். நோ-பால் மற்றும் அர்ஷ்தீப்பை பிரிக்க முடியாத நிலையில் உள்ளது.
ஸ்ரீலங்கா தொடரை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் நோ பால் வீசினார். கடைசி ஓவரில் ஒரு நோ பால், மூன்று தொடர்ச்சியான சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என கடைசி ஓவரை முடித்தார்.
அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், அர்ஷ்தீப் தனது நோ-பால் பிழைகளை சரிசெய்ய தனது ரன்-அப்பைக் குறைக்க பரிசீலிக்க வேண்டும்.
அர்ஷ்தீப்புக்கு நீண்ட ரன்-அப் உள்ளது. அங்கே சக்தியை வீணடிக்கிறார். எனவே, நோ-பால்களுக்கு முக்கிய காரணம் அவரது நீண்ட ரன்-அப். எனவே, அவர் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் மற்றும் சற்று நிதானமாக இருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்" என்று கைஃப் கூறினார்.
- அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது.
- நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார்.
புனே:
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியில் இந்தியவின் தோல்வியை விட, அர்ஷ்தீப் சிங் செய்த தவறு தான் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 2-வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் மட்டும் 3 முறை நோ பால்களை வீசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தேவையின்றி 13 ரன்கள் கூடுதலாக சென்றது. இதனால் அவருக்கு மீண்டும் 19-வது ஓவரில் வாய்ப்பு தரப்பட்டது.
ஆனால் 19-வது ஓவரிலும் நோ பாலையே போட்டார். 19-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஷனகா ஆவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ பால் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
அர்ஷ்தீப் சிங் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது இந்த போட்டியின் மூலம் தெளிவாக தெரிகிறது. நோ-பால் போடாமல் பந்துவீசுவதை சுலபம் என்று நினைத்துதான், பயிற்சியின்போது இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்திருக்கிறார். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்று என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
- அர்ஷ்தீப் சிங்கை குறை கூறவோ அல்லது கடுமையாக நடந்து கொள்ளவோ முடியாது.
- அணியில் யாராவது புதுமுகமாக வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம்.
புனே:
புனேயில் நேற்று நடந்த இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இலங்கையிடம் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 206 ரன் குவித்தது.
கேப்டன் ஷனகா 56 ரன்னும், குசல் மெண்டிஸ் 52 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின் சூர்யகுமார் யாதவ் (51 ரன்), அக்ஷர் பட்டேல் (65 ரன்) ஜோடி அதிரடியாக விளையாடியது. ஆனாலும் இந்திய அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 190 ரன்களே எடுக்க முடிந்தது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. 7 நோ-பால்களை வீசினர். இதில் அர்ஷ்தீப்சிங் மட்டும் 5 நோ-பால் வீசினார். அவர் 2 ஓவர் வீசி 37 ரன் விட்டு கொடுத்தார். இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
தோல்வி குறித்து இந்திய கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-
பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கின் போது பவர் பிளேயில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களை காயப்படுத்தி விட்டது. நாங்கள் சில அடிப்படை தவறுகளை செய்தோம்.
சர்வதேச அளவில் விளையாடும் நாங்கள் அதை செய்யக்கூடாது. அது என்னவென்று அனைவருக்கும் தெரியும். நாம் எதை கட்டுப்படுத்த முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
போட்டியில் அன்று நல்ல நாளாக இருக்கலாம். கெட்ட நாளாகவும் அமையலாம். ஆனால் அடிப்படை விஷயங்களில் இருந்து விலகி செல்லக்கூடாது. அர்ஷ்தீப் சிங்கின் சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது. அவரை குறை கூறவோ அல்லது கடுமையாக நடந்து கொள்ளவோ முடியாது. ஆனால் எந்த வடிவத்திலும் நோ-பால் வீசியது குற்றம் என்பது எங்களுக்கு தெரியும்.
ராகுல் திரிபாதி 3-வது வீரராக விளையாடுவது வழக்கம். அணியில் யாராவது புதுமுகமாக வந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம். இதனால் தான் ராகுல் திரிபாதி 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்கிறது.
- பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் பார்ட்னர்ஷிப் போடுவது அவசியமாகும்.
- பந்து வீச்சை பொறுத்தவரை அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் என்றே சொல்லலாம்.
நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றாலும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் 1 -0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் புது முகங்களாக அர்ஷிதீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.
ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜோடியாக அறிமுகமான இவர்கள் இடது - வலது கை பவுலர்களாக எதிரணிக்கு சவாலை கொடுப்பவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷிதீப் சிங் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
உம்ரான் மாலிக்குடன் நான் மகிழ்ச்சியாக செயல்படுகிறேன். என்னை போலவே அவரும் அவ்வப்போது நகைச்சுவைகளை செய்வார். பந்து வீச்சை பொறுத்தவரை அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் என்றே சொல்லலாம்.
ஏனெனில் 155 வேகத்தில் அவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் அடுத்த ஓவரிலேயே 135 வேகத்தில் எதிர்கொள்ளும் என்னை சந்திக்கும் போது தடுமாறுகிறார்கள். அந்த வகையில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் செயல்படுகிறோம். இந்த நட்பை தொடர விரும்புகிறோம்.
ஒருநாள் போட்டிகள் மிகவும் பெரியதாகும். அதில் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் பார்ட்னர்ஷிப் போடுவது அவசியமாகும். அதனால் எப்போதுமே என்னுடன் எதிர்புறம் பந்து வீசும் பவுலரை நான் பார்ப்பேன். அவர் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் நான் விக்கெட் எடுப்பதை விட ரன்களை குறைவாக கொடுக்க நினைப்பேன்.
அதை செய்தாலே அழுத்தம் உண்டாகி யாருக்காவது விக்கெட் விழுந்து விடும். ஏனெனில் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். எனவே நான் எதிரணியை அட்டாக் செய்தால் என்னுடைய பார்ட்னர் பவுலர் கட்டுப்பாடாகப் பந்து வீசுவார்.
என்று கூறினார்.
- கடைசி ஓவர்களை ஒரு இளம் வீரர் வீசுவது அத்தனை சுலபம் கிடையாது.
- பும்ரா இல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங் இதனை சிறப்பாக செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்களாதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முன்னதாக கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வீசப் போவது அனுபவம் மிக்க ஷமியா அல்லது அர்ஷ்தீப் சிங்கா என ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கினார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அர்ஷ்தீப், யார்க்கர் பந்து வீச்சை பயன்படுத்தினார்.
இதனால் அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியாவின் வெற்றி குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் டெத் ஓவர்களை வீச தயாராக இருக்கும்படி அர்ஷ்தீப் சிங்யிடம் ஏற்கனவே கூறியிருந்தாக தெரிவித்தார்.
ஒரு இளம் வீரர் இதை செய்வது அத்தனை சுலபம் கிடையாது, அதற்கான நாங்கள் அவரை தயார்படுத்தினோம், கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிறப்பாக அதை கையாளுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இனியும் தொடர்ந்து அவர் சரியாக செய்வார் என்றும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நேற்றைய போட்டியில் தங்களது பீல்டிங் அற்புதமாக இருந்ததாகவும், சில கேட்சுகள் சிறப்பாக அமைந்தன. அழுத்தமான சூழலில் கேட்சுகளை பிடிப்பது எங்களது வீரர்களின் திறனை வெளிப்படுத்துகிறது, எங்களது பீல்டிங்கில் எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை என்றும் ரோகித் குறிப்பிட்டுள்ளார்.
- சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் பல இடங்களில் காலிஸ்தான் என்ற வார்த்தை இடம் பெற்று இருந்தது.
- எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை 20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் 18-வது ஓவரை ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது, தான் ஆசிப் அலி களமிறங்கி இருந்தார். அவர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் (0 ரன்) இருந்தார். அப்போது, ரவி பிஷ்னோய் வீசிய 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். அப்போது, பேட்டில் சரியாக படாததால் பந்து கீப்பருக்கு பின்னே கேட்ச் வாய்ப்பாக மாறியது.
அங்கு நின்று கொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க முற்பட்டார். ஆனால், மிகவும் சுலபமான அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். அந்த கேட்ச் தவற விடப்பட்டது இந்தியா தோல்வியடைய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முக்கிய போட்டியில் இந்தியா தோல்வியடைய காரணம் என தெரிவித்து சமூக ஊடகத்தில் சிலர் கடுமையாக அவரை தாக்கும் வகையில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில், சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் இந்தியா என்ற வார்த்தையை நீக்கி விட்டு காலிஸ்தான் என்ற வார்த்தையை பதிவு செய்யப்படாத பயன்பாட்டாளர் ஒருவர் இணைத்து உள்ளார். இது சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் பல இடங்களில் இடம் பெற்று இருந்தது. எனினும் 15 நிமிட இடைவெளியில் இந்த பதிவுகள் பின்னர் மாற்றி சரிசெய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில் அவரை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி தகவல் வெளியிட்டு போலியான செய்தியை எப்படி பகிர முடிந்தது என்பதற்கு பதிலளிக்கும்படி விக்கிப்பீடியா அதிகாரிகளுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது.
இந்த தவறான தகவலானது சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடும். சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டிற்கான சூழ்நிலைக்கும் வழிவகுப்பதுடன் சிங்கின் குடும்பத்தினர் மீதும் பாதிப்பு ஏற்பட கூடும் என மத்திய அரசு நம்புகிறது என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அர்ஷ்தீப் சிங்க்கிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு கிடைத்த தங்கம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
- நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது.
மும்பை:
ஆசியக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றிரவு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 60 (44) ரன்கள் எடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கினர்.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், பீல்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் பந்துவீச்சில் விட்டு கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது.
அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை... அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-
யாரும் வேண்டுமென்றே கேட்சை விடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது.
அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம் என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். இதே போல பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஹபிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.