என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20: இந்திய அணி பந்து வீச்சு- ஒரு முக்கிய மாற்றம்
- அர்ஷ்தீப் சிங் இடம் பிடித்துள்ளார்.
- நியூசிலாந்து அணியில் ஜேமிசன் இடம் பெறவில்லை.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை முடிவடைந்துள்ள 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் 4-வது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
இதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:-
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா, ரவி பிஷ்னோய்.
நியூசிலாந்து அணி:-
செய்பெர்ட், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர், ஜேக் போல்க்ஸ், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, இஷ் சோதி.






