என் மலர்
நீங்கள் தேடியது "Akash Deep"
- முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணியில் விளையாடாமல் உள்ளார்.
- ஆகாஷ் தீப் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரக்கெட் சங்கம் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியை அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர் அபிஷேக் பொரேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுஸ்டப் மஜும்தார், சுதீப் சட்டர்ஜி போன்ற மூத்த வீரர்களும், சுதீப் குமார் கராமி, ராகுல் பிரசாத், சவுரப் குமார் சிங், விஷால் பாட்டி போன்ற இளைஞர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
பெங்கால் அணி எலைட் குரூப் சி-யில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் குஜராத், அரியானா, சர்வீசஸ், ரெயில்வேஸ், திரிபுரா, உத்தரகாண்ட், அசாம் அணிகள் இடம் பிடித்துள்ளன. ஈடன் கார்டனில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை பெங்கால் எதிர்கொள்கிறது.
ரஞ்சி டிராபில் 38 அணிகள் விளையாடுகின்றன. 32 அணிகள் எலைட் டிவிசனில் நான்கு குரூப்புகளாக பிரிக்கப்படும். 8 அணிகள் பிளேட் டிவிசனில் இடம் பெறும். எலைட் குரூப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் டிவிசனில் இருந்து நான்கு அணிகள் நாக்அவுட் போட்டிக்கு முன்னேறும்.
- இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜடேஜா அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்து 53 ரன் எடுத்தார்.
இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஜெய்ஸ்வால் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
- ஆகாஷ் தீப் 66 ரன்கள் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜ் (4), ஆகாஷ் தீப் (4) ஆகியோர் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் சேர்த்தார்.
இன்றைய 3ஆவது நாள் தேனீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 300 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. மேலும் ஒரு ரன் சேர்க்காமல் ஜுரெல் விக்கெட்டை இந்தியா இழந்தது.
ஜுரெல் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர். இந்தியா 77 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா அரை சதத்தை நெருங்கி வருகிறார்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் காயமடைந்துள்ளதால், சி.எஸ்.கே. வீரர்இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய கம்போஜ் சிறப்பாக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா பின் தங்கிய நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
- ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.
மும்பை:
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு கேப்டன் சுப்மன்கில்லின் அபாரமான பேட்டிங்கும் (430 ரன்), ஆகாஷ்தீப், முகமது சிராஜ் (17 விக்கெட்) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சும் காரணமாக இருந்தது.
இந்த டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 6) ஆகாஷ் தீப்பை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன்கில் கில்லுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்திய அணியை அபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற அவரை பாராட்டுகிறேன். 2-வது இன்னிங்சில் ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
இந்த டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை முற்றிலுமாக வெளியேற்றிய அணுகுமுறை நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்கள் பந்து வீசிய நேர்த்தியை சொல்ல தேவையில்லை. ஆகாஷ்தீப் ஒரு தனித்துவமான பந்து வீச்சாளர். ஜோரூட்டை அவர் அவுட் செய்த பந்து தொடரின் சிறந்த பந்தாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். ஜான்டி ரோட்சை போல முகமது சிராஜ் கேட்ச் பிடித்ததை ரசித்தேன்.
இவ்வாறு டெண்டுல்கர் கூறி உள்ளார்.
- எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஆகாஷ் தீப் 10 விக்கெட் வீழ்த்தினார்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
வெற்றிபெற்ற சந்தோசத்தில் டி.வி.க்கு பேட்டியளிக்கும்போது, எனது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த வெற்றியை அரப்பணிக்கிறேன் என எமோசனலாக பேசினார். இதனால் வெற்றியை கொண்டாட வேண்டிய ரசிகர்கள் இவரது பேச்சைச் கேட்டு மிகுந்த கவலை கொண்டனர்.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆகாஷ் தீப்பின் சகோதரி ஜோதி கூறியதாவது:-
எனது சகோதரன் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது, இந்தியாவுக்காக பெருமை படக்கூடிய விசயம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக, விமான நிலையத்தில் நாங்கள் அவனை சந்தித்தோம். அப்போது நான் அவனிடம், நான் முற்றிலும் நலமாக இருக்கிறோன். என்னைப் பற்றி கவலைப்படாதே. நாட்டிற்காக நன்றாக செயல்படு எனத் தெரிவித்தேன்.
என்னுடைய புற்றுநோய் பாதிப்பு 3ஆவது நிலையில் (Third Stage) உள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது பார்ப்போம்.
ஆகாஷ் தீப் விக்கெட்டுகள் வீழ்த்தும்போதெல்லாம், எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் எப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்துவானோ, அப்போதெல்லாம் கைத்தட்டி, சத்தமாக மகிழ்ச்சியை கொண்டாடுவோம். எங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்கள் என்ன நடந்தது என்று கேட்பார்கள்.
என்னைப் பற்றி ஆகாஷ் தீப் சொல்வார் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் இது தொடர்பாக வெளியே சொல்ல தயாராக இல்லாமல் இருந்திருக்கலாம். அவர் எமோசனலாகி, எனக்காக இந்த வெற்றியை அர்ப்பணித்தது, பெரிய விசயம். இது எங்களுடைய குடும்பம் மற்றும் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பது காட்டுகிறது.
இவ்வாறு ஆகாஷ் தீப் சகோதரி ஜோதி தெரிவித்துள்ளார்.
- பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால் ஆகாஷ் தீப்பிற்கு 2ஆவது டெஸ்டில் வாய்ப்பு.
- முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 (அவட்இல்லை) ரன்களும் விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இறுதியாக 2ஆவது புதிய பந்து எடுக்கப்பட்டது. ஆகாஷ் தீப்பின் இன்ஸ்விங் பந்தில் ப்ரூக் ஸ்டம்பை பறிகொடுத்தார். இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 60.4 ஓவரில் 303 ரன்கள் குவித்தது.
இந்த ஜோடியை பிரித்ததும் முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்த, ஆகாஷ் தீப் டக்கெட், ஒல்லி போப், ஹாரி ப்ரூக், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார்.
20 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மேலும், முதல் ஓவரை தொடங்கியது இவர்தான். இந்த நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் 3ஆவது டெஸ்டில் இடம் பெறுவேனா? என்பது தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆகாஷ் தீப் கூறியதாவது:-
இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியமானது. ஆகவே, 3ஆவது டெஸ்ட் போட்டி பற்றி நான் நினைக்கவில்லை. என்னுடைய முழு எனர்ஜியையும் இந்த 2 நாட்களில் வெளிப்படுத்த வேண்டும் என நம்புகிறேன். அதன் பிறகு 3ஆவது டெஸ்ட் பற்றி பரிசீலிப்பேன். நான் விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பதை அணி முடிவு செய்யும்.
நான் விளையாடுவேனா என்பது எனக்குத் தெரியாது. அணி முடிவை எடுக்கும். போட்டிக்கு ஒருநாள் முன்னதாக ஆடும் லெவனில் இடம் உள்ளதா? என்பது தெரியும்.
இவ்வாறு ஆகாஷ் தீப் தெரிவித்தார்.
முதல் டெஸ்டில் விளையாடிய பும்ரா 2ஆவது டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா நிச்சயமாக விளையாடுவார். இதனால் யார் நீக்கப்படுவார்கள் என்பது தெரியது. ஒருவேளை பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் இடையே கடும் போட்டி ஏற்படலாம்.
- வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்.
- அவருடன் மகிழ்ச்சியாக பந்து வீசினேன்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 84 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரூக்- ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ப்ரூக் 158 ரன்களும், ஜெமி ஸ்மித் 184 ரன்களும் விளாசினர். 2ஆவது புதிய பந்தை எடுத்த பிறகு ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார். இதனால் இந்த ஜோடி 387 ரன்னில் பிரிந்தது. அதன் பிறகு இங்கிலாந்து 407 ரன்களில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்கள் முன்னிலைப் பெற்றது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆகாஷ் தீப் குதிரை போன்றவர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-
ஆகாஷ் தீப் குதிரை போன்றவர். வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்தபோது, சாதிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையிலேயே அவருடன் மகிழ்ச்சியாக பந்து வீசினேன்.
பொறுப்பு கொடுக்கும்போது அதை விரும்புகிறேன். என்னுடைய பக்கத்தில் இருந்து ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய இலக்கு. முடிந்தவரை பேட்ஸ்மேனை நெருக்கடிக்குள்ளாக்கி கட்டுக்கோப்பாக பந்து வீச முயற்சித்தேன்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
- ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
- ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
புதுடெல்லி:
19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சாவில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 40 விளை யாட்டுகள் 481 பிரிவுகளில் நடக்கிறது. கிரிக்கெட் போட்டியும் ஆசிய விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீரர் ஷிவம்மவி விலகியுள்ளார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ்தீப் இடம் பெற்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வருமாறு:-
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஷ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, பிரப் சிம்ரன்சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்தீப்சிங், முகேஷ்குமார், ஆகாஷ்தீப்.
- ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
- ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். அவரது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் உடனிருந்து பார்த்து கொள்வதாலும் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகாஷ்தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார். 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.
- காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
2-வது ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. உடல் நல பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை கவனிக்கும் பொருட்டு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், கேப்டன் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இளம் சிவப்பு (பிங்க்) நிற சீருடை அணிந்து களம் காண்கிறது. ஸ்டேடியமும் பெரும்பாலும் 'பிங்க்' நிறத்தில் காட்சியளிக்கும். தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ரீஜா ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லரும், பந்து வீச்சில் லிசாத் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, பெலுக்வாயோ, கேஷவ் மகராஜூம் வலுசேர்க்கிறார்கள்.
அண்மையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி விளையாடும் முதல் ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும். ஒருநாள் போட்டி அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முனைப்பில் உள்ள இந்தியா தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த தென் ஆப்பிரிக்கா வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
- கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால், நோ-பால் என்பதால் தப்பினார்.
- பின்னர் கிராலியை இன்-ஸ்விங் மூலம் மீண்டும் க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடிய பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பும்ராவிற்குப் பதிலாக முகேஷ் குமார் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் 27 வயதான ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரரா? என கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் வியப்படைந்தனர்.
ஆனால், பும்ரா அணிக்கு எவ்வாறு பங்களிப்பாரோ, அதேபோல் தானும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன் ஆகாஷ் தீப் களம் இறங்கினார்.
முதல் ஓவரை சிராஜ் வீச, 2-வது ஓவரை ஆகாஷ் தீப் வீசினார். சுமார் 135 கி.மீ. முதல் 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசினார். இதனால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.

தனது 2-வது ஓவரிலேயே கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால், அது நோ-பாலாக அமைந்தது.
இருந்தாலும் மனம் தளராமல் உத்வேகத்துடன் பந்து வீசினார். இதற்கு அவரின் 5-வது ஓவரில் பலன் கிடைத்தது. இந்த ஓவரின் 2-வது பந்தில் டக்கெட்டை (11) வெளியேற்றினார்.
இதே ஓவரின் 3-வது பந்தில் ஒல்லி போப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் டக்அவுட்டில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு உத்வேகம் அளித்தார். அதோடு நிற்காமல் நோ-பால் மூலம் தப்பிய கிராலியை (42) அடுத்த ஓவரின் ஐந்தாவது பந்தில் க்ளீ்ன் போல்டு மூலம் வெளியேற்றினார். 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
27 வயதாகும் ஆகாஷ் தீப் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். 30 முதல்தர போட்டிகளில் விளையாடி 104 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு அரைசதத்துடன் 423 ரன்கள் எடுத்துள்ளார்.






