என் மலர்
நீங்கள் தேடியது "Indian team"
- இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.
- இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.
இந்தநிலையில் ஆடுகளம் தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுபோன்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட் அழித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன்சிங் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். டெஸ்டுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.
அங்கே பிட்ச்கள் நன்றாக இருந்த காரணத்தாலேயே இந்தியா போராடி வென்றது. ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு ஆடுகளம் தரமற்றதாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை.
இந்த நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தவறான விளையாட்டு முறை. இது போன்ற ஆடுகளங்கள் வீரர்களை முன்னேற அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இன்று 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டுள்ளது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக தொடங்கியது.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 252 ரன்களை வெற்றி இல்லாக்க இந்தியா நிர்ணயித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து, இந்திய அணி தரப்பில் பிரதீகா ராவல் 37, சினேகா ரானா 33 மற்றும் ஸ்மிருதி மந்தனா 23 ரன்களும் எடுத்தன.
- இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
- சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் ஓமன் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம், குரூப் A சுற்றில் உள்ள இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று +4.793 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.
- முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.
எமிரேட்ஸ் அணியை 57 ரன்னில் முடக்கிய இந்திய அணி அந்த இலக்கை 4.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அதிவேகமாக விரட்டிப்பிடித்த இலக்கு இது தான். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதே இந்தியாவின் துரித சேசிங்காக இருந்தது.
- இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
- ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.
புதுடெல்லி:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீனதைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் மகுடம் சூடும் அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்து, பெல்ஜியத்தில் நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்து விட்டது.
இந்த நிலையில் ஆசிய போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடருகிறார். நடுகள வீரர் ரஜிந்தர்சிங், முன்கள வீரர்கள் ஷில்லானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் இடத்தை தக்க வைத்துள்ளனர்.
அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறுகையில், 'ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொறுமை, சரிவில் இருந்து மீளும் மனவலிமை, களத்தில் எப்படி திறமையை வெளிப்படுத்துவது என்பதை அறிந்த வீரர்கள் தான் தேவை. அப்படிப்பட்ட வீரர்களைத் தான் அணிக்கு எடுத்துள்ளோம். சரியான கலவையில் தரமான அணியாக அமைந்திருப்பது திருப்தி அளிக்கிறது. தற்காப்பு, நடுகளம், தாக்குதல் ேபான்ற ஒவ்வொரு வரிசைக்கும் எங்களிடம் தலைவர்கள் உள்ளனர். இந்த கூட்டு வலிமை தான் என்னை உற்சாகப்படுத்துகிறது. இந்த அணி ஒருங்கிணைந்து விளையாடும் விதம் எங்களது வலுவான சொத்தாக இருக்கும்' என்றார்.
ஆசிய ேபாட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுராஜ் கர்கெரே,
தற்காப்பு ஆட்டக்காரர்கள்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோகிதாஸ், ஜூக்ராஜ் சிங்.
நடுகள வீரர்கள்: ரஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத்.
முன்கள வீரர்கள்: மன்தீப் சிங், ஷில்லானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்.
மாற்று வீரர்கள்: நிலம் சஞ்ஜீப் செஸ், செல்வம் கார்த்தி.
- ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
- வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்திய U19 அணி வீரர்கள்:
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & WK), ஹர்வன்ஷ் சிங் (WK), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, ராவ் ராகவேந்திரா, முகமது ஏனான், ஆதித்யா சிங், அன்மோலி ரனா
- இலங்கையில் அடுத்த மாதம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
- செப்டம்பர் மாதம் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது
அடுத்த மாதம் இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இந்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விலக பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும்.
ஐபிஎல் 18ஆவது சீசன் முடிந்தப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது.
இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான். இந்நிலையில் வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி வீர்ர்களை பிசிசிஐ சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 2வது வாரத்திற்குள் அணிகள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. தகவலின்படி, இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிக்காக 35 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாகவும், சாய் சுதர்சன் மாற்று வீரராகவும் இருக்க வாய்ப்புள்ளது.
5-6வது இடத்தில் பட்டீதர் & கருண் நாயர் இடம் பெற்றுள்ளனர் என்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மற்றபடி, உத்தேசமாக, ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, ஷமி, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறுவர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
- இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றது.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் கடந்த 2002 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றுள்ளது. இதில் 2002-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
- இவர் ஏற்கனவே டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரான இவர் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவரது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.
லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நடந்தது.
இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் அணி எது இந்தியாவா, பாகிஸ்தானா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி பதில் கூறியதாவது:
விளையாட்டுக்கு உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி இருப்பதாக நினைக்கிறேன்.
விளையாட்டு உணர்வு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது. மனித பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என உண்மையிலேயே நம்புகிறேன். அவை வெறும் விளையாட்டுகள் அல்ல, அவை மக்களை ஆழமான மட்டத்தில் இணைக்கின்றன.
இப்போது யார் சிறந்தவர் அல்லது இல்லாதவர் என்ற கேள்விக்கு வருகிறேன். விளையாட்டின் நுட்பங்களைப் பொறுத்தவரை நான் ஒரு நிபுணர் அல்ல. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே அதை மதிப்பிட முடியும்.
எந்த அணி சிறந்தது, எந்த வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில், முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன.
சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது என தெரிவித்தார்.
- ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் வீரர்களை குறை கூறுங்கள்.
- இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல்.
டெல்லி:
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.
ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.
ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிக் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. ஆனால் நமது பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு வந்து பல வெளிநாட்டு கிரிக்கெட்டர்கள் பணி செய்கிறார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.
பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
- இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.
இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை நிகழ்த்தியது. எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. 300 ரன்னுக்கு மேல் வெற்றியை ருசித்த முதல் அணி இந்தியாவாகும்.
இதற்கு முன்பு நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 290 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.
இந்திய அணி இதற்கு முன்பு 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இந்த வெற்றி வித்தியாசம் 6-வது இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா 275 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்கா 272 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும் வீழ்த்தி இருந்தது. இதே போல் தென் ஆப்பிரிக்கா 258 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.
இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.






