என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI Series"

    • விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.
    • ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெர்த்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 20 போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.

    இந்த நிலையில், ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    மேலும் ஒருநாள் தொடருக்கான கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ்-ம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 153-வது முறையாகும். இதுவரை நடைபெற்ற 152 ஆட்டத்தில் இந்தியா 58-ல், ஆஸ்திரேலியா 84-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    இரு அணிகள் இடையே கடைசியாக 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 

    • பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹோப் 120 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 202 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-1 என பின் தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2-1 என தொடரை வென்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது. தொடரை வென்ற மகிழ்ச்சி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். வீரர்கள் அனைவரும் சுற்றிருந்த ரசிகர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
    • வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இந்திய U19 அணி வீரர்கள்:

    ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & WK), ஹர்வன்ஷ் சிங் (WK), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, ராவ் ராகவேந்திரா, முகமது ஏனான், ஆதித்யா சிங், அன்மோலி ரனா

    • நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
    • உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் விதம் மாறாது. நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா அல்லது கோலி விளையாடிய விதத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று இப்போது எதிர்பார்ப்பது சரியானதல்ல.

    அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணர வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. நாங்கள் உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான விளையாட்டு பயன் அளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

    இளம் வீரர்களின் ஆட்டம் போதுமானதாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவது எனக்கு முக்கியம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    • மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
    • 5 விக்கெட் வீழ்த்திய லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

    இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

    அதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து.

    பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 38.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

    • இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    தற்போது விடுமுறையில் இருந்து வரும் ரோகித் சர்மா, தனது விடுமுறையை குறைத்துக்கொண்டு அடுத்த மாதம்நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கிறார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என தெரிகிறது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தனது வருகையை பிசிசிஔக்கு அறிவிப்பார் என தெரிகிறது.

    ரோகித் சர்மா கடந்த மாதம் ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டனாக ஆனார். இவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 தொடரை சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.
    • இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது.

    டி20 தொடர் நாளையுடன் முடியவுள்ள நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரில் ரோகித் தலமையிலான இந்திய அணியின் களமிறங்க உள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோர் இன்று இலங்கை சென்றடைந்துள்ளார்.

    மேலும் ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் ஆகியோரும் இலங்கைக்கு சென்றடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அபிஷேக் நாயர் தலைமையில் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்குகிறது.

    • 18 ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 1997-ம் ஆண்டு கைப்பற்றி இருந்தது.

    கொழும்பு:

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பின்பு மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதாவது இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1108 நாட்களுக்குப் பின் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீழ்த்தி உள்ளது. கடைசியாக ஜூலை 2021-ல் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீழ்த்தி இருந்தது.

    இந்த நிலையில் 3-வது போட்டியில் இந்தியா வென்றால் இந்த தொடரை 1 - 1 என சமன் மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை இலங்கை அணி 3-வது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை 2 - 0 என கைப்பற்றும். எனவே, இந்தியா இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்பு இல்லை. இதனால் 18 ஆண்டுகள் கழித்து இலங்கை அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டன. அதனால், அந்த தொடர் 0 - 0 என்ற அளவில் முடிவுக்கு வந்தது. அந்தத் தொடர் சமன் செய்யப்பட்டது.

    அதேபோன்ற சூழ்நிலை இப்போதும் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கும் கூட இந்திய அணி 3-வது போட்டியில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தொடரை சமன் செய்ய முடியும். ஒரு வேளை இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த மோசமான சாதனையை செய்யும்.

    கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • எனது கேரியரில் நான் இன்னும் முன்னேற வேண்டும்.
    • எனது பயிற்சி மற்றும் கடின உழைப்பில் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது.

    இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்தன. அதிலும் குறிப்பாக இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

    இதனால் இந்திய அணி தேர்வு குழுவினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், சதமடித்த பிறகும் சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே அணியில் இருந்து ஓரங்கட்டுவதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

    இந்நிலையில் சமீபத்தில் சஞ்சு சாம்சன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம், நீங்கள் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்த பிறகும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் டி20 அணியிலும், டி20 உலகக்கோப்பை சமயத்தில் ஒருநாள் அணியிலும் வாய்ப்பினை பெறுகிறீர்கள். இதனால் ஒவ்வொரு முறையும் இது விவாதமாக மாறிவரும் நிலையில், அணி தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்துள்ள சஞ்சு சாம்சன், "அவர்கள் என்னை விளையாட அழைத்தால், நான் சென்று விளையாடுவேன். இல்லை என்றால் பரவாயில்லை என்று விட்டுவிடுவேன். மேற்கொண்டு அதுபற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. இந்திய அணி தற்போது நன்றாக விளையாடி வருகிறது, அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன் மற்றும் என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    எனது பயிற்சி மற்றும் கடின உழைப்பில் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். அது எனது விளையாட்டை மேம்படுத்த உதவிவருகிறது. எனது கேரியரில் நான் இன்னும் முன்னேற வேண்டும். அதனால் நான் எனது விளையாட்டை மேம்படுத்துவதிலும், என் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதிலும் தற்சமயம் ஆர்வம் காட்டிவருகிறேன்.

    என்று சாம்சன் கூறினார்,

    • ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணியினர் ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷாண்டோ 47 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

    • 2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
    • அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    2024-ம் ஆண்டில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அது மட்டுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2024-ல் நடந்த மகிழ்ச்சியான சம்பவம் ஆகும்.

    டி20 உலகக் கோப்பையை வென்ற அதே நாளில் ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகிய 3 பேரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். வெற்றி பெற்ற கையோடு அவர்கள் மூவரும் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றது. கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக அந்த தொடரில் இருந்து பொறுப்பேற்றார். ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். அந்த ஒருநாள் தொடரை இந்தியா 0-2 (3) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

    இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 27 வருடங்களுக்கு பின் இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் 2024-ம் ஆண்டில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது. 2024-ம் ஆண்டில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2024-ல் ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 1979-க்குப் பிறகு இந்தியா ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றி பெறாதது இதுவே முதல்முறை மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகும்.

    இந்த தொடரை தொடர்ந்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரை இந்தியா 3-0 என வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து 3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அதிர்ச்சி அளித்தது.

    முந்தைய ஒருநாள் தொடரில் இலங்கையிடம் வீழ்ந்த இந்தியா, டெஸ்ட்டில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது மட்டுமல்லாமல், முதல் முறையாக ஒயிட் வாஷ் ஆகி மோசமான சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி படைத்தது.

    • இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
    • இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் மீண்டும் ஜோரூட் களமிறங்குகிறார். கிட்டதட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ரூட் இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.

    முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

    பென் டக்கெட், பில் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத்.

    ×