search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvSL"

    • ஜாகீர் கான், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்
    • பும்ரா 33 விக்கெட்டுகளும், கும்ப்ளே 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா 357 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை 55 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த தொடரின் தொடக்க ஆட்டங்களில் அவர் களம் இறக்கப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார். அந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளும், தற்போது ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை முகமது சமி 45 விக்கெட்டுகள் வீழ்த்தி, உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் ஜாகீர் கான் 44 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் இடத்தில் இருந்தார். தற்போது அவரை சமி பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகள், பும்ரா 33 விக்கெட்டுகள், கும்ப்ளே 31 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

    உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்துவது சமிக்கு இது 3-வது முறையாகும். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையில் ஸ்டார்க் உடன் இணைந்துள்ளார்.

    இந்திய அணிக்காக அதிக முறை (4) ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

    ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அப்ரிடி (2011), ஸ்டார்க் (2019) ஆகியோர் 4 முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

    சமி (2019), ஆடம் ஜம்பா (2023), முகமது சமி (2023) ஆகியோர் 3 முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளனர்.

    • இந்தியா வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முன்னேறும்
    • இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும்

    இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வி அடையாத அணியாக வீறுநடை போட்டு வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் இந்திய அணிக்கு, 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி ஈடுகொடுக்குமா என்பது சந்தேகம்தான். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறும்.

    இந்தியா கடந்த போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதல் ஐந்து போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியால் 229 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவிக்குமா? என்பது மட்டுமே இந்திய அணியிடம் ஒரு கேள்வி. இதை இந்தியா சரியாக செய்தால், தோற்கடிக்க முடியாத அணியாக செல்லும் என்பதில் ஐயமில்லை.

    இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓரளவிற்கு சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் சுழற்பந்து, பேட்டிங் துறையில் எதிர்பார்த்த வகையில் ஜொலிக்கவில்லை. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால், அரையிறுதி வாய்ப்பை விட்டு வெளியேறும். இதனால் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும். இதனால் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் முழுத்திறனையும் வெளிப்படுத்தும். ஆகையால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.

    • முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.
    • இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து வந்தது.

    ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி சார்பில் களமிறங்கிய சமாரி மற்றும் அனுஷ்கா முறையே 12 மற்றும் 1 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த விஷ்மியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பிறகு வந்த ஹாசினி மற்றும் நிலாக்ஷி முறையே 25 மற்றும் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்தடுத்து வந்தவர்கள் அதிக ரன்களை எடுக்காத நிலையில், இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து வெறும் 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டிடாஸ் சத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

    ராஜேஷ்வரி கெய்க்வாட் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரக்கர் மற்றும் தேவிகா வைத்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருப்பதை அடுத்து, இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 116 ரன்களை எடுத்தது.

    ஹாங்சோ:

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
    • இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா?

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.

    ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கள ஆய்வுக்கு பிறகு இன்னும் சில நிமிடங்களில் போட்டி ஆரம்பித்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டியின் இடையே, மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் ரிசர்வ் டேவான நாளை போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.
    • இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா?

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது. நடப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது.

    லீக் சுற்றில் நேபாளம், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது. இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதேபோல், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரா (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும்.

    இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.

    இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்குகிறது. இந்திய அணி பந்து வீச உள்ளது. இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்று நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை மோதுகின்றன.
    • இலங்கையை ஏற்கனவே வீழ்த்தியுள்ளதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.

    நடப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. லீக் சுற்றில் நேபாளம், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது.

    இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதேபோல், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரா (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் இன்று மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.

    இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 6 ரன்னில் தோல்வி
    • சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும்

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கியது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 'லீக்' முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் 'சூப்பர் 4' சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இதன் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா- தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது.

    இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடி வருகிறது. 'லீக்' சுற்றில் நேபாளம் 'சூப்பர் 4' சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி இருந்தது. வங்காளதேசத்திடம் மட்டும் தோற்று இருந்தது.

    இறுதிப்போட்டிக்கு இந்தியா நுழைந்துவிட்டதால் வங்காளதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இலங்கையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    பேட்டிங்கில் சுப்மன் கில் (275 ரன்), லோகேஷ் ராகுல் (169 ரன்), விராட் கோலி (129 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ் (9 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (6 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் (5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    நடப்பு சாம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    இலங்கை அணியின் பேட்டிங்கில் குஷால் மெண்டீஸ் (253 ரன்), சமர வீரர் (215 ரன்) ஆகியோரும், பந்துவீச்சில் பதிரனா (11 விக்கெட்டும்), நெதமிகா வெல்லலகே (10 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 167-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 166 போட்டியில் இந்தியா 97-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளனர். 11 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.

    நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் விளாசினார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.

    கே.எல்.ராகுல் 39 ரன்னும், இஷான் கிஷன் 33 ரன்னும், அக்சர் படேல் 26 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டும், சரித் அசலங்கா 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் முதலில் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனால் இலங்கை அணி 99 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 7வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லாலகே ஜோடி 63 ரன்களை சேர்த்தது. டி சில்வா 41 ரன்னில் அவுட்டானார். கடைசி வரை போராடிய வெல்லாலகே 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ்ப் 4 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது துனித் வெல்லாலகேவுக்கு வழங்கப்பட்டது.

    • விராட் கோலி 166 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
    • விராட் கோலி 46வது சதமடித்து அசத்தினார்.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷுப்மன் கில் 116 ரன் எடுத்தார். ரோகித் சர்மா 42 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்னில் அவுட்டாகினர்.

    இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய இலங்கை 73 ரன்னில் சுருண்டது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.

    சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார்.

    சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452- வது இனனிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

    மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார்.

    • அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
    • வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஷூப்மன் கில் 116 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். முன்னணி பேட்ஸ்மேன்கள் அவிஷ்கா பெர்னாண்டோ (1), குசால் மெண்டிஸ் (4), நுவனிது பெர்னாண்டோ (19) ஆகியோர் சிராஜ் ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.

    டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சனகா(11) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 73 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 317 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது.

    • கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
    • விராட் கோலி, ஷூப்மன் கில் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

    திருவனந்தபுரம்:

     இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷூப்மன் கில் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16-வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    அதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் ஷூப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. 89 பந்துகளில் சதம் அடித்த ஷுப்மன் கில், 116 ரன்கள் சேர்த்த நிலையில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதேபோல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் சதம் அடித்து அசத்தினர். சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 46-வது சதம் இதுவாகும்.

    ×