என் மலர்
நீங்கள் தேடியது "Harshit Rana"
- முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியின் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா ஐசிசி விதிகளை மீறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
இதில் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பிரெவிஸ் விக்கெட்டை இந்திய வீரர் ஹர்ஷித் ராணா வீழ்த்துவார். வீழ்த்திய வேகத்தில் அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கை சைகை காட்டுவார்.
இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை அவுட்டாக்கிய போது ஹர்ஷித் ராணா செய்த சைகைக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விதியை மீறியதாக கூறி அவருக்கு ஒரு Demerit புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
- ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை.
- சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை.
இந்தியாவின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை, இந்திய அணியில் முன்னாள் தேர்வாளரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று சிட்னி போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 236 ரன்னில் சுருட்ட, முக்கிய பங்காற்றிய ஹர்சித் ராணாவை ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் ஓவன் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சூப்பர் டெலிவரி, ரோகித் சர்மா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.
பயங்கரமான லைன் மற்றும் லெந்த் பிடித்து பந்து வீசினார். கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் மோசமாக பந்து வீசினார். சிட்னியில் சிறப்பாக பந்து வீசினார்.
சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை. சிட்னி போட்டிக்காக அனைத்து பாராட்டுக்கும் தகுதியான ஹர்சித் ராணா.
ஆமாம், அவரை நான் அதிக அளவில் விமர்சனம் செய்துள்ளேன. ஆனால் இறுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங் செய்தது மற்றும் கடைசி ஸ்பெல்லில் பயங்கரமாக பந்து வீசியதன் மூலம், இந்த போட்டிக்கு நம்பிக்கையை எடுத்து வந்துள்ளார்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
- 8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
- அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.
ஹர்சித் ராணாவை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக்க அணி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இந்திய அணியில் மூன்று வடிவிலான அணியில் விளையாடும் வீரர்கள் ஒருவர் அவர். சுப்மன் கில்லுக்குப்பின் அவர்தான் இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், சிட்னி போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் சாய்த்தார்.
இந்த நிலையில் 20 முதல் 25 ரன்கள் அணிக்கு பங்களிக்க முடியும் என்றால், ஹர்சித் ராணாவுக்கு No.8 சிறந்த இடமாக இருக்கும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஹர்சித் ராணா குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-
8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன். அதன்பிறகு அது முக்கியமான இடமாக அமையும்.
அதிக உயரம் கொண்ட சில வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டுமே 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீச முடியும். தென்ஆப்பிரிக்கா போன்ற ஆடுகளத்தில், இது போன்ற பந்து வீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
ஏனென்றால், மிடில் ஓவர்களில் பந்து அதிக அளவில் ஸ்விங் (Move) ஆகாது என்பதை நாம் பார்த்திருப்போம். ஆகவே, நல்ல உயரம் மற்றும் வேகம் கொண்டிருந்தால், உங்களால் விக்கெட்டுக்கான வாய்ப்பை உருவாக்க முடியும். அதான் சிட்னியில் நடந்தது என நினைக்கிறேன்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.
- உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டது. இந்த 2 அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள் என்றும் அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள் என்றும் ஹர்ஷித் ராணாவின் கூறியுள்ளார்.
உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள். வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள். நான் அதைத் தாங்கிக் கொள்வேன். அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள்.
இது கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம்தான். நான் உங்ககிட்ட ரொம்ப நேர்மையா சொல்றேன். உங்க யூடியூப் சேனலுக்காக ஒரு 23 வயது பையனை குறிவைக்கிறீங்கன்னு சொல்றது ரொம்ப நியாயம் இல்ல. ஏன்னா, அவங்க அப்பா முன்னாள் தலைவரோ, முன்னாள் கிரிக்கெட் வீரரோ, வெளிநாட்டுல பிறந்த இந்தியரோ இல்ல.
இதுவரைக்கும் அவர் எந்த கிரிக்கெட் விளையாடியிருந்தாலும், அவரு தனியா விளையாடியிருக்காரு, தொடர்ந்து தனியா விளையாடுவாங்க. நீங்க யாரையாவது தனியா குறிவைச்சீங்கன்னா, அது நியாயமில்லை.
என கம்பீர் கூறினார்.
- சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
- ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார்.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார். போட்டியின் 5 ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்தை பதும் நிசங்கா, ஹர்ஷித் ராணாவை நோக்கி அடிக்க அந்த பந்தை பிடித்து பதும் நிசங்காவை நோக்கி ராணா வீசி வம்பிழுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
- இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.
டெல்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு முதல் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் (DDCA) நடத்தப்பட்டது. இந்த சீசனில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றனர். நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் ஹர்சித் ரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணி:-
ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், சர்தக் ரஞ்சன், வைபவ் கண்ட்பால், பரனவ் ராஜ்வன்ஷி, ககன் வாட்ஸ், யாஷ் பாட்டியா, யாஷ் தபாஸ், அர்னவ் புக்கா, யஜாஸ் சர்மா, தீபன்ஷு குலியா, தீபக் காத்ரி, விகாஸ் தீட்சித், சம்யக் நஜைன், சித்தார்த்தா நக்ராப் சோலங்கி, நூர் ரஜோ, சோலங்கி. சிங், சித்தாந்த் பன்சால், ஆர்யன் செஜ்வால்.
- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் அகர்வால் விக்கெட்டை ராணா கைப்பற்றினார்.
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஐதரபாத் அணி பேட்டிங் செய்த போது அகர்வாலை விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் கேலி செய்யும் விதத்தில் சைகை காட்டினார். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார்
- தனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
அப்போட்டியில் மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரல் விக்கெட்டை வீழ்த்தினார் ராணா. அதன் பிறகு அவர் மீண்டும் பிளையிங் கிஸ் கொடுக்க முயன்று பின்பு தன்னை கட்டுப்படுத்தினார். ஆனாலும் அதற்கு பதிலாக அவர் வெளியே போ என்றவாறு சைகை செய்தார்.
இதனால் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிவீரர் ஹர்ஷீத் ராணாவுக்கு 100% அபராதம் மற்றும் ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணாவை ஷாருக் கான் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக ராணா ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்தார் ஷாருக் கான். இதனை சற்றும் எதிர்பாராத ராணா உடனே ஷாருக் கானை கட்டியணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தொடரின் லீக் போட்டியில் ஜதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்சித் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து ஷாருக் கான் அதனை செய்து காட்டியது ரசிகர்களிடையே மிகுந்து வரவேற்பை பெற்றுள்ளது.
- மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ராணா Flying kiss கொடுத்து கொண்டாடுவார்.
- இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இந்த தொடரின் போது சர்ச்சையில் சிக்கினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அவரது முகத்துக்கு முன்னாள் Flying kiss கொடுப்பார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை வைத்து ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலை கிண்டலடிப்பார். இது தொடர்பான வீடியோ கூட டிரெண்டானது. இப்படி இந்த ஐபிஎல் தொடரில் பேசுபொருளான Flying kiss குறித்து ஹர்ஷித் ராணா வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அப்போதைய நேரத்திற்கு Flying kiss கொடுத்து அந்த தருணத்தை கொண்டாட வேண்டும் என தோன்றியது. எந்த போட்டிகளிலும், வீரருக்கு எதிராகவும் இப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என நான் திட்டமிடவில்லை. கோலியின் மீதுள்ள மரியாதை காரணமாகவே அவரின் விக்கெட்டை வீழ்த்தியபோதும் கொண்டாட்டத்தை தவிர்த்தேன்.
இவ்வாறு ராணா கூறினார்.
- ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்சித் ரானா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஹர்சித் ரானா பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ரானா இணைந்துள்ளார்.
ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்சித் ரானா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இதேபோல தான் வாஷிங்டன் சுந்தர் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






