என் மலர்
நீங்கள் தேடியது "Harshit Rana"
- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் அகர்வால் விக்கெட்டை ராணா கைப்பற்றினார்.
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஐதரபாத் அணி பேட்டிங் செய்த போது அகர்வாலை விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் கேலி செய்யும் விதத்தில் சைகை காட்டினார். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார்
- தனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
அப்போட்டியில் மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரல் விக்கெட்டை வீழ்த்தினார் ராணா. அதன் பிறகு அவர் மீண்டும் பிளையிங் கிஸ் கொடுக்க முயன்று பின்பு தன்னை கட்டுப்படுத்தினார். ஆனாலும் அதற்கு பதிலாக அவர் வெளியே போ என்றவாறு சைகை செய்தார்.
இதனால் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிவீரர் ஹர்ஷீத் ராணாவுக்கு 100% அபராதம் மற்றும் ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணாவை ஷாருக் கான் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக ராணா ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்தார் ஷாருக் கான். இதனை சற்றும் எதிர்பாராத ராணா உடனே ஷாருக் கானை கட்டியணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தொடரின் லீக் போட்டியில் ஜதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்சித் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து ஷாருக் கான் அதனை செய்து காட்டியது ரசிகர்களிடையே மிகுந்து வரவேற்பை பெற்றுள்ளது.
- மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ராணா Flying kiss கொடுத்து கொண்டாடுவார்.
- இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இந்த தொடரின் போது சர்ச்சையில் சிக்கினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அவரது முகத்துக்கு முன்னாள் Flying kiss கொடுப்பார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை வைத்து ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலை கிண்டலடிப்பார். இது தொடர்பான வீடியோ கூட டிரெண்டானது. இப்படி இந்த ஐபிஎல் தொடரில் பேசுபொருளான Flying kiss குறித்து ஹர்ஷித் ராணா வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அப்போதைய நேரத்திற்கு Flying kiss கொடுத்து அந்த தருணத்தை கொண்டாட வேண்டும் என தோன்றியது. எந்த போட்டிகளிலும், வீரருக்கு எதிராகவும் இப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என நான் திட்டமிடவில்லை. கோலியின் மீதுள்ள மரியாதை காரணமாகவே அவரின் விக்கெட்டை வீழ்த்தியபோதும் கொண்டாட்டத்தை தவிர்த்தேன்.
இவ்வாறு ராணா கூறினார்.
- ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்சித் ரானா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஹர்சித் ரானா பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ரானா இணைந்துள்ளார்.
ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்சித் ரானா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இதேபோல தான் வாஷிங்டன் சுந்தர் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது.
- அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்சித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது. இந்தியா வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்தையும் நீங்கள் பார்த்தால், அதில் ஏதேனும் ஒரு அறிமுக வீரர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.
இதனைத் தற்போது எல்லா அணிகளும் செய்து வருகின்றன. அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், ஹர்சித் ரானா ஆஸ்திரேலிய தொடருக்கு ஒரு நல்ல தேர்வு என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி அறிமுகம்.
- வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் பும்ரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
நிதிஷ் ரெட்டி, ஹர்சித் ராணா இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:-
1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.
ஆஸ்திரேலியா அணி:-
1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.
- பும்ரா 5 விக்கெட் கைப்பற்றினார்.
- ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 150 ரன்னில் சுருண்டது. நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் சேர்த்தனர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 9 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலேக்ஸ் கேரி 21 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி விக்கெட் மூலம் பும்ரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து வந்த நாதன் லயனை ஹர்ஷித் ராணா 5 ரன்னில் வெளியேற்றினார். கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். அப்போது ஆஸ்திரேலியா 79 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை விக்கெட் எடுக்க விடாமல் தடுத்து விளையாடியது. இதனால் ஆஸ்திரேலியாவின் அல்அவுட் தாமதமாகிக் கொண்டிருந்தது.
இறுதியாக ஹர்ஷித் ராணா இந்த ஜோடியை பிரித்தது. இதனால் ஆஸ்திரேலியா 104 ரன்கள் எடுத்து ஆல்அவட் ஆனது. ஸ்டார்க்-ஹேசில்வுட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கடைசி விக்கெட்டாக ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும் ஹர்சித் ராணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி ஹர்ஷித் ராணா உடன் களம் இறங்கும் என எதிர்பார்ப்பு.
- அதேவேளையில் ஆகாஷ் தீப் உடனம் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியில் பிங்க்-பால் பயன்படுத்தப்பட இருக்கிறது. பிங்க்-பால் இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் அதிக அளவில் ஸ்விங் ஆகும்.
இந்தியா முதல் (பெர்த்) டெஸ்டில் பும்ரா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நிதிஷ் ரெட்டி ஆல்-ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளரான அணியில் உள்ளார். அறிமுகமான பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசினார். பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனால் நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா களம் இறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பிங்க்-பால் போட்டியில் ஆகாஷ் தீப்பை களம் இறக்க வேண்டும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரவி சாஷ்திரி கூறுகையில் "ஒரு முக்கியமான விசயம் என்றவென்றால், இது பிங்க்-பால் டெஸ்ட் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஹர்ஷித் ராணா அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் பிங்க் பால் சற்று கூடுதல் அரக்கு- வார்னீஷ் (Lacquer) இருக்கும். இதனால் பந்து ஸ்விங் செய்யவும், சீம் செய்யவும் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதனால் ஆகாஷ் தீப் அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
- இந்த போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் விளையாடிய போலண்ட்டுக்கு பதிலாக ஹசில்வுட் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அந்த அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சுந்தர் 2 விக்கெட்டும் 29 ரன்கள் விளாசினார். ஆனால் அஸ்வின் 2-வது டெஸ்ட்டில் பேட்டிங், பந்து வீச்சில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவருக்கு பீல்டிங்கில் தடுமாறுவதாலும் அவருக்கு பதில் சுந்தரை ஆடும் லெவனில் எடுக்க வாய்ப்புள்ளது.
பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்து வேகத்துடன் நன்கு பவுன்சும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2-வது டெஸ்ட்டில் ஹர்சித் ரானா விக்கெட்டுகளை வீழ்த்த கஷ்டப்பட்டார். மேலும் ரன்களை வாரி வழங்கினார். இதனால் இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.
- பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குறைந்தது முதல் 2 போட்டிகளில் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.