என் மலர்
நீங்கள் தேடியது "Harshit Rana"
- உண்மையான ஆட்டத்தையே மாற்றியவர் ஹர்ஷித் ராணாதான்.
- ஹர்ஷித் ராணா பேட் செய்த விதத்தைப் பார்த்து நியூசிலாந்து வீரர்கள் நடுங்கினார்கள்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி உறுதியாக தோல்வியடையும் என்ற நிலையில் இருந்தது.
ஆனால் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்ஷித் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் விளாசினார். அவர் களத்தில் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. நியூசிலாந்து வீரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஹர்ஷித் ராணாதான் உண்மையான கேம் சேஞ்சர் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
உண்மையான ஆட்டத்தையே மாற்றியவர் ஹர்ஷித் ராணாதான். ராணா பேட் செய்த விதத்தைப் பார்த்து நியூசிலாந்து வீரர்கள் நடுங்கினார்கள். ராணாவின் பேட்டிங்கை பார்த்து நான் வியந்து போனேன். அவர் ஒரு வேறுபட்ட மட்டத்தில் விளையாடினார். அவர்கள் உண்மையில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள். அவர் சிரமமின்றி சிக்ஸர்களை அடித்தார். அவருடைய பேட்டிங் அபாரமாக இருந்தது.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
- 7 விக்கெட்டுக்கு களம் இறங்கி விராட் கோலியுடன் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
- 4 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து அசத்தினார்.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய நிதிஷ் ரெட்டி 53 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 27.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜடேஜா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவின் வெற்றியும் கடினமானது. அடுத்து ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். ஹர்ஷித் ராணாவை வைத்து விராட் கோலி சதத்தை நோக்கி சென்றார். 40-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுது்து 91 பந்தில் சதம் அடித்தார் விராட் கோலி.
இது விராட் கோலியின் 85-வது சர்வதேச சதமாகும். ஒருநாள் போட்டியின் 54-வது சதமாகும். இந்தியா 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 138 ரன்கள் தேவை.
மறுமுனையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்ஷித் ராணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேமிசன், கிளார்க் என யார் என்று பார்க்காமல் நியூசிலாந்து வேகபந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கு விரட்டினார். இதனால் இந்தியா இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. 44-வது ஓவரை பால்க்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இது அவரின் முதல் அரைசதம் ஆகும். இதில் தலா 4 பவுண்டரி, 4 சிக்ஸ் அடங்கும். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 37 பந்தில் 61 ரன்கள் தேவைப்பட்டது.
- முதல் இரண்டு போட்டிகளிலும் க்ளீன் போல்டானார்.
- இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில், நிக்கோலஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து கான்வே உடன் வில் யங் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கான்வே ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 4 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலும் கான்வேயை ஹர்ஷித் ராணா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் 56 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷித் ராணா பந்தில் க்ளீன் போல்டானார். 2-வது போட்டியில் 16 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.
- நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.
- ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம்.
வதோதராவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன் இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 29 ரன்கள் விளாசி (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
பின்னர் டெல்லியைச் சேர்ந்த 24 வயதான ஹர்ஷித் ராணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனது கடமையாகும். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். இது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்ய களம் கண்ட போது, லோகேஷ் ராகுல் மிகவும் உதவிகரமாக இருந்தார். அதனால் நன்றாக கவனம் செலுத்தி ரன்கள் திரட்டினேன்.
ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம். அதனால் தான் வலைபயிற்சியில் என்னால் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அதில் நான் கவனம் செலுத்துகிறேன். தேவைப்படும் போதெல்லாம் அணியின் பின்வரிசையில் என்னால் 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். என்னால் இதை செய்ய முடியும் என்று அணியும் நம்புகிறது.
விராட் கோலி களத்தில் நின்றது வரை 5-6 ஓவர்கள் முன்கூட்டியே ஆட்டம் முடிந்து விடும் போல் தோன்றியது. ஆனால் அவர் வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. கிரிக்கெட்டில் எதையும் கணிக்க முடியாது. எந்த நேரத்திலும் மாறும்.
ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் புதிய பந்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்கு தடுமாறுகிறார்களா? என கேட்கிறீர்கள். நீங்கள் என்ன கிரிக்கெட்டை பார்க்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் கூட முகமது சிராஜ் உண்மையிலேயே அருமையாக பந்து வீசினார்.
புதிய பந்தில் நாங்கள் அதிகமான ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தினோம். கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டால், மிடில் வரிசையில் விக்கெட்டுகளை சாய்ப்போம். அதைத் தான் நாங்கள் செய்தோம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வெவ்வேறு கட்டங்கள் உள்ளன. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பெரிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை.
இவ்வாறு ஹர்ஷித் ராணா கூறினார்.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியின் இந்திய வீரர் ஹர்ஷித் ராணா ஐசிசி விதிகளை மீறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது.
இதில் அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பிரெவிஸ் விக்கெட்டை இந்திய வீரர் ஹர்ஷித் ராணா வீழ்த்துவார். வீழ்த்திய வேகத்தில் அவரை முறைத்தபடி வெளியே செல்லுமாறு கை சைகை காட்டுவார்.
இந்நிலையில் டெவால்ட் பிரெவிஸை அவுட்டாக்கிய போது ஹர்ஷித் ராணா செய்த சைகைக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் விதியை மீறியதாக கூறி அவருக்கு ஒரு Demerit புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
- ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை.
- சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை.
இந்தியாவின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை, இந்திய அணியில் முன்னாள் தேர்வாளரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று சிட்னி போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 236 ரன்னில் சுருட்ட, முக்கிய பங்காற்றிய ஹர்சித் ராணாவை ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் ஓவன் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சூப்பர் டெலிவரி, ரோகித் சர்மா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.
பயங்கரமான லைன் மற்றும் லெந்த் பிடித்து பந்து வீசினார். கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் மோசமாக பந்து வீசினார். சிட்னியில் சிறப்பாக பந்து வீசினார்.
சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை. சிட்னி போட்டிக்காக அனைத்து பாராட்டுக்கும் தகுதியான ஹர்சித் ராணா.
ஆமாம், அவரை நான் அதிக அளவில் விமர்சனம் செய்துள்ளேன. ஆனால் இறுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங் செய்தது மற்றும் கடைசி ஸ்பெல்லில் பயங்கரமாக பந்து வீசியதன் மூலம், இந்த போட்டிக்கு நம்பிக்கையை எடுத்து வந்துள்ளார்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
- 8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
- அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.
ஹர்சித் ராணாவை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக்க அணி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இந்திய அணியில் மூன்று வடிவிலான அணியில் விளையாடும் வீரர்கள் ஒருவர் அவர். சுப்மன் கில்லுக்குப்பின் அவர்தான் இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், சிட்னி போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் சாய்த்தார்.
இந்த நிலையில் 20 முதல் 25 ரன்கள் அணிக்கு பங்களிக்க முடியும் என்றால், ஹர்சித் ராணாவுக்கு No.8 சிறந்த இடமாக இருக்கும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஹர்சித் ராணா குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-
8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன். அதன்பிறகு அது முக்கியமான இடமாக அமையும்.
அதிக உயரம் கொண்ட சில வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டுமே 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீச முடியும். தென்ஆப்பிரிக்கா போன்ற ஆடுகளத்தில், இது போன்ற பந்து வீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
ஏனென்றால், மிடில் ஓவர்களில் பந்து அதிக அளவில் ஸ்விங் (Move) ஆகாது என்பதை நாம் பார்த்திருப்போம். ஆகவே, நல்ல உயரம் மற்றும் வேகம் கொண்டிருந்தால், உங்களால் விக்கெட்டுக்கான வாய்ப்பை உருவாக்க முடியும். அதான் சிட்னியில் நடந்தது என நினைக்கிறேன்.
இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.
- உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டது. இந்த 2 அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள் என்றும் அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள் என்றும் ஹர்ஷித் ராணாவின் கூறியுள்ளார்.
உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள். வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள். நான் அதைத் தாங்கிக் கொள்வேன். அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள்.
இது கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம்தான். நான் உங்ககிட்ட ரொம்ப நேர்மையா சொல்றேன். உங்க யூடியூப் சேனலுக்காக ஒரு 23 வயது பையனை குறிவைக்கிறீங்கன்னு சொல்றது ரொம்ப நியாயம் இல்ல. ஏன்னா, அவங்க அப்பா முன்னாள் தலைவரோ, முன்னாள் கிரிக்கெட் வீரரோ, வெளிநாட்டுல பிறந்த இந்தியரோ இல்ல.
இதுவரைக்கும் அவர் எந்த கிரிக்கெட் விளையாடியிருந்தாலும், அவரு தனியா விளையாடியிருக்காரு, தொடர்ந்து தனியா விளையாடுவாங்க. நீங்க யாரையாவது தனியா குறிவைச்சீங்கன்னா, அது நியாயமில்லை.
என கம்பீர் கூறினார்.
- சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
- ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார்.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார். போட்டியின் 5 ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்தை பதும் நிசங்கா, ஹர்ஷித் ராணாவை நோக்கி அடிக்க அந்த பந்தை பிடித்து பதும் நிசங்காவை நோக்கி ராணா வீசி வம்பிழுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
- இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.
டெல்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு முதல் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் (DDCA) நடத்தப்பட்டது. இந்த சீசனில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றனர். நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் ஹர்சித் ரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணி:-
ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், சர்தக் ரஞ்சன், வைபவ் கண்ட்பால், பரனவ் ராஜ்வன்ஷி, ககன் வாட்ஸ், யாஷ் பாட்டியா, யாஷ் தபாஸ், அர்னவ் புக்கா, யஜாஸ் சர்மா, தீபன்ஷு குலியா, தீபக் காத்ரி, விகாஸ் தீட்சித், சம்யக் நஜைன், சித்தார்த்தா நக்ராப் சோலங்கி, நூர் ரஜோ, சோலங்கி. சிங், சித்தாந்த் பன்சால், ஆர்யன் செஜ்வால்.
- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் அகர்வால் விக்கெட்டை ராணா கைப்பற்றினார்.
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஐதரபாத் அணி பேட்டிங் செய்த போது அகர்வாலை விக்கெட் வீழ்த்திய கொல்கத்தா வீரர் ராணா அகர்வால் முகத்து முன்னாள் கேலி செய்யும் விதத்தில் சைகை காட்டினார். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார்
- தனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது
ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
அப்போட்டியில் மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரல் விக்கெட்டை வீழ்த்தினார் ராணா. அதன் பிறகு அவர் மீண்டும் பிளையிங் கிஸ் கொடுக்க முயன்று பின்பு தன்னை கட்டுப்படுத்தினார். ஆனாலும் அதற்கு பதிலாக அவர் வெளியே போ என்றவாறு சைகை செய்தார்.
இதனால் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிவீரர் ஹர்ஷீத் ராணாவுக்கு 100% அபராதம் மற்றும் ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.






