என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்சித் ராணா"

    • ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை.
    • சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை.

    இந்தியாவின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை, இந்திய அணியில் முன்னாள் தேர்வாளரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிட்னி போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 236 ரன்னில் சுருட்ட, முக்கிய பங்காற்றிய ஹர்சித் ராணாவை ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் ஓவன் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சூப்பர் டெலிவரி, ரோகித் சர்மா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.

    பயங்கரமான லைன் மற்றும் லெந்த் பிடித்து பந்து வீசினார். கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் மோசமாக பந்து வீசினார். சிட்னியில் சிறப்பாக பந்து வீசினார்.

    சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை. சிட்னி போட்டிக்காக அனைத்து பாராட்டுக்கும் தகுதியான ஹர்சித் ராணா.

    ஆமாம், அவரை நான் அதிக அளவில் விமர்சனம் செய்துள்ளேன. ஆனால் இறுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங் செய்தது மற்றும் கடைசி ஸ்பெல்லில் பயங்கரமாக பந்து வீசியதன் மூலம், இந்த போட்டிக்கு நம்பிக்கையை எடுத்து வந்துள்ளார்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    • 8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
    • அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.

    ஹர்சித் ராணாவை இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக்க அணி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இந்திய அணியில் மூன்று வடிவிலான அணியில் விளையாடும் வீரர்கள் ஒருவர் அவர். சுப்மன் கில்லுக்குப்பின் அவர்தான் இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், சிட்னி போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில் 20 முதல் 25 ரன்கள் அணிக்கு பங்களிக்க முடியும் என்றால், ஹர்சித் ராணாவுக்கு No.8 சிறந்த இடமாக இருக்கும் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    ஹர்சித் ராணா குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-

    8ஆவது இடத்தில், பேட்ஸ்மேன் 20 முதல் 25 ரன்கள் அடிக்க முடியும் என்றால், அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அது ஹர்சித் ராணாவால் செய்ய முடியும் என நினைக்கிறேன். அதன்பிறகு அது முக்கியமான இடமாக அமையும்.

    அதிக உயரம் கொண்ட சில வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டுமே 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீச முடியும். தென்ஆப்பிரிக்கா போன்ற ஆடுகளத்தில், இது போன்ற பந்து வீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

    ஏனென்றால், மிடில் ஓவர்களில் பந்து அதிக அளவில் ஸ்விங் (Move) ஆகாது என்பதை நாம் பார்த்திருப்போம். ஆகவே, நல்ல உயரம் மற்றும் வேகம் கொண்டிருந்தால், உங்களால் விக்கெட்டுக்கான வாய்ப்பை உருவாக்க முடியும். அதான் சிட்னியில் நடந்தது என நினைக்கிறேன்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    • நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
    • இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.

    டெல்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு முதல் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் (DDCA) நடத்தப்பட்டது. இந்த சீசனில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றனர். நடப்பு சீசன் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் ஹர்சித் ரானா நியமிக்கப்பட்டுள்ளார்.

    வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணி:-

    ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், சர்தக் ரஞ்சன், வைபவ் கண்ட்பால், பரனவ் ராஜ்வன்ஷி, ககன் வாட்ஸ், யாஷ் பாட்டியா, யாஷ் தபாஸ், அர்னவ் புக்கா, யஜாஸ் சர்மா, தீபன்ஷு குலியா, தீபக் காத்ரி, விகாஸ் தீட்சித், சம்யக் நஜைன், சித்தார்த்தா நக்ராப் சோலங்கி, நூர் ரஜோ, சோலங்கி. சிங், சித்தாந்த் பன்சால், ஆர்யன் செஜ்வால்.

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அணி வீரர்களை சந்தித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணாவை ஷாருக் கான் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    குறிப்பாக ராணா ஸ்டைலில் பிளையிங் கிஸ் கொடுத்தார் ஷாருக் கான். இதனை சற்றும் எதிர்பாராத ராணா உடனே ஷாருக் கானை கட்டியணைத்து மகிழ்ச்சியை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த தொடரின் லீக் போட்டியில் ஜதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்சித் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து ஷாருக் கான் அதனை செய்து காட்டியது ரசிகர்களிடையே மிகுந்து வரவேற்பை பெற்றுள்ளது.

    • இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி அறிமுகம்.
    • வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் பும்ரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    நிதிஷ் ரெட்டி, ஹர்சித் ராணா இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி:-

    1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.

    ஆஸ்திரேலியா அணி:-

    1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.

    ×