என் மலர்
நீங்கள் தேடியது "Shahrukh Khan"
- தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
- பான் மசாலா விளம்பரத்தில் ஷாருக்கான், "நாக்கிலே குங்குமப்பூ" என்று கூறுவார்.
டெல்லியில் நடைபெற்ற தொழிலதிபர் வீட்டு திருமண விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார்.
அப்போது ஷாருக்கானிடம், பிரபல பான் மசாலா விளம்பரத்தில் வரும், "நாக்கிலே குங்குமப்பூ" (Zubaan Kesari) என்ற டயலாக்கை கூறுமாறு வற்புறுத்தி கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.
இதையடுத்து பேசிய ஷாருக்கான்,"இந்த தொழிலதிபர்களிடம் நீங்கள் ஒருமுறை பிசினஸ் செய்தால், அவர்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள், அதிலும் குட்கா காரர்கள் அதிக பணம் தருகிறார்கள். நான் அதைச் செய்ய பணம் வாங்குகிறேன். தயவுசெய்து இதை உன் அப்பாவிடம் சொல்லுங்கள். நல்ல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். நான் இங்கே நின்றுகொண்டு நாக்கிலே குங்குமப்பூ என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அது தவறு, அது தடைசெய்யப்பட்டுள்ளது. நீ என் ரசிகனா அல்லது விமலின் (பான் மசாலா நிறுவனம்) ரசிகனா?" என தனேக்கே உரிய பாணியில் கிண்டல் அடித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இப்படி சங்கப்படுத்துவது தவறு என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் கிங் படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
அவர் நடித்து வரும் கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இதற்கிடையே ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.
ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் இதனால் உங்களை மிஸ் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு பிறந்த நாளும் மன்னத் வீட்டில் ரசிகர்களை பார்ப்பார்.
- பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்களை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தனர்.
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.
இதற்கான இன்று காலை முதலே, மன்னத் வீடு முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். வழக்கமாக பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துகளை பெறுவார்.
ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் உங்களை மிஸ்சிங் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை, நான் வெளியே வந்து வரவேற்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
உங்கள் அனைவரிடம் எனது ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாக அனைவரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்து கொண்டதற்கு நன்றி, என்னை நம்புங்கள்... உங்களை விட அதிகமாக உங்களைப் பார்ப்பதை நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்க்கவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருந்தேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.
இவ்வாறு ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.
- டெல்லியில் திரைப்பட தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
- விருதுகள் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதளித்து கவுரவித்தார்.
மும்பை:
தலைநகர் டெல்லியில் திரைப்பட தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விருதுகள் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதளித்து கவுரவித்தார்.
சிறந்த நடிகர் விருதை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தேசிய விருது பெற்றுக் கொண்டா ஷாருக் கானுக்கு அவரது மனைவி கவுரி கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கவுரி கான் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என்ன ஒரு பயணம். தேசிய விருதை வென்றதற்கு வாழ்த்துக்கள். மிகவும் தகுதியானது.
இது உங்கள் பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும்.
இந்த விருதை வைப்பதற்காக நான் ஒரு சிறப்பான இடத்தை வடிவமைத்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் இளவரசர் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பச்சன் பாரம்பரிய நம்பிக்கையையும், கான் நவீன அழகு உணர்வையும் கொண்டு வருகிறார்கள்.
இணையத்தில் பெரும் கவர்ச்சியையும் ஊகங்களையும் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்யான் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் வாழ்க்கைமுறை நகை பிராண்டான காந்தரின் புதிய பிராண்ட் அம்பாசடராக பாலிவுட் இளவரசர் ஷாருக் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது வெறும் பிரசாரச் செய்தி அல்ல. இந்திய நகைத் தொழிலில் ஒரு திருப்புமுனை. பல நாட்களாக டீசர் வீடியோக்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட இந்த வாய்ப்பு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஸ்டைலிஷ் நகைகளில் திகழ்ந்த கானின் தோற்றம், இது அவருடைய சொந்த முயற்சியா என்ற கேள்விகளுக்கே துவக்கமாயிற்று.
அதில் தெளிவாகக் கூறப்பட்டது: ஷாருக் கான் காந்தரின் பிராண்ட் முகம்தான், உரிமையாளர் அல்ல. இது ஒரு தூய்மையான பிராண்டு தூதுவராக இருந்தாலும், அதன் கலாச்சார, வர்த்தக தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போது, அமிதாப் பச்சனை பிரதிநிதித்துவப்படுத்தும் கால்யான் ஜுவல்லர்ஸும், ஷாருக் கானை பிரதிநிதித்துவப்படுத்தும் காந்தரும், ஒரே குழுமத்தின் கீழ் இணைந்துள்ளன.
பச்சன் பாரம்பரிய நம்பிக்கையையும், கான் நவீன அழகு உணர்வையும் கொண்டு வருகிறார்கள்.
- நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி, திஷா பதானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட் காலா 2025 ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக ஆண்டுதோறும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் உலகெங்கிலும் உள்ள திரைப் பிரபலங்கள் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர். வித்தியாசமான உடையில் தோன்றி கேரமா முன் போஸ் கொடுப்பதே இந்நிகழ்வின் சாராம்சம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.

ஸ்டைலான கருப்பு நிற உடையில், கழுத்தில் 'K' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பெரிய செயின் உடன் ஷாருக் கான் தனக்கே உரிய ஸ்டைலில் தோன்றினார்.

இந்த நிகழ்வில் சுவாரஸ்யமான சம்பவமாக, வெளிநாட்டு ஊடகங்கள் ஷாருக் கானை அடையாளம் காணத் தவறியுள்ளன. நிகழ்வில் ஒரு நிருபர் ஷாருக் கானிடம் நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் சிரித்தவாறே, நான் தான் ஷாருக் கான் என்று கூறியுள்ளார். இந்த உரையாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் கடவுள் அந்தஸ்தில் பார்க்கும் ஷாருக் கானை யார் என்று கேட்ட நபரை நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
- சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் 'பதான்'.
- இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பதான்
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அடுத்த பாடலான 'ஜூம் பூம் தூம்' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஷாருக்கான் 'பார்ட்டி ஆரம்பிக்கலாமா?' என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பதான்
'பதான்' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
- இப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பதான்
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பதான்' படத்தின் ஓடிடி விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பதான்' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
- இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

பதான் போஸ்டர்
இந்நிலையில், 'பதான்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'பதான்' திரைப்படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The mission is about to start... Aa raha hai #PathaanTrailer launching tomorrow at 11 AM!
— Shah Rukh Khan (@iamsrk) January 9, 2023
Hindi - https://t.co/sNPeRLR5p5
Telugu - https://t.co/istxh0xDhL
Tamil - https://t.co/rb9KKDB0Iw pic.twitter.com/P52XxVZT51
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பதான்".
- இப்படத்தின் டிரைலரை விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பதான்
அதில், "மிக்க நன்றி நண்பா! இதனால்தான் நீங்க தளபதி.. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Thank you my friend @actorvijay You are Thalapathy for this humble reason, let's meet for delicious feast soon.
— Shah Rukh Khan (@iamsrk) January 10, 2023
Mikka Nandri Nanba! Idhanala Dhaan Neenga Thalapathy koodiya viraivil oru arumaiyana virunthil santhipom.
Love you
- இந்த போட்டியை நடிகர் ஷாருக்கான் அவரது மகள் மற்றும் பாப் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று ரசித்தனர்.
- இந்த போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் மைதானத்துக்குள் சுற்றி கொல்கத்தா வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியை நடிகர் ஷாருக்கான் அவரது மகள் மற்றும் பாப் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று ரசித்தனர்.
SRK and Virat Kohli doing Jhoome Jo Pathaan step together ??❤️❤️ #KKRvRCBpic.twitter.com/53DZDjkM4v
— S. (@Sobuujj) April 6, 2023
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் மைதானத்துக்குள் சென்று கொல்கத்தா வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்தார். மேலும் பெங்களூர் அணி வீரரும் இந்திய வீரருமான விராட் கோலியையும் சந்தித்து பேசினார்.
சந்தித்து பேசியது மட்டுமல்லாமல் நடனமாடியும் மகிழ்ந்தார். அதனையடுத்து விராட் கோலியின் கையில் ஷாருக்கான் முத்தமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Moment of the match
— RUPESH ???? (@SRKianRupesh05) April 6, 2023
King SRK hugging King #ViratKohli#KKRvRCB pic.twitter.com/9FXxVDMWlB
- நான் வெளிப்படையாக கூறினாலும் நம்ப மறுக்கின்றனர் என்றார் ஷாருக்
- எனக்கு மேற்கத்திய திரைத்துறையில் நண்பர்கள் உள்ளனர் என்றார் ஷாருக்
1992ல் "தீவானா" எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58).
30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோரில், "கிங் கான்" (King Khan) என அழைக்கப்படும் ஷாருக், சில தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த 2023ல், ஜவான், பதான், மற்றும் டன்கி என 3 தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய் நகரில், உலக அரசுகளின் உச்சி மாநாடு (World Governments Summit 2024) நடந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாடிய ஷாருக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவரிடம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என கேட்கப்பட்டது.

அதற்கு ஷாருக் பதிலளித்ததாவது:
நான் வெளிப்படையாக பலமுறை இதற்கு பதிலளித்து விட்டேன். ஆனால், என்னை எவரும் நம்ப மறுக்கின்றனர். இருந்தும் மீண்டும் சொல்கிறேன்.
எனக்கு இந்தியாவிலிருந்து வெளியே ஹாலிவுட் உட்பட எந்த அன்னிய மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வரவில்லை.
மேற்கத்திய திரைப்பட துறையை சார்ந்த பலருடன் நான் பழகியுள்ளேன். எனக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பல திறமையானவர்களுடன் நல்ல நட்பும் உண்டு.
ஆனால், என்னை எவரும் ஒரு நல்ல வேடத்திற்காக இதுவரை அங்கிருந்து அழைத்ததில்லை.
என்னை ஏற்று கொள்ள கூடிய பார்வையாளர்களுக்கு பிடித்தமான படங்கள் அளிக்க நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






