என் மலர்
நீங்கள் தேடியது "நியூ யார்க்"
- நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
- மதுரோவின் மனைவி அட்ரியானாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.
வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
அமெரிக்கா அழைத்துவரப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவி மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கோகயின் இறக்குமதி செய்வதற்கான சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவு ஏற்படுத்தும் சாதனங்களை வைத்திருத்தல் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நியூயார்க் கோர்ட்டில் நிகோலஸ் மதுரோ மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மதுரோவும் அவரது மனைவியும் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர்.

நீதிமன்றத்தில் பேசிய மதுரோ, தான் நிரபராதி என்றும் குற்றமற்றவன் என்றும் கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
தொடர்ந்து, நான் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அதிபர். சர்வதேச சட்டங்களை மீறி, காரகஸில் உள்ள எனது இல்லத்திலேயே வைத்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டேன்.
என்னை ஒரு பயங்கரவாதியைப் போலவும், போதைப்பொருள் கடத்தல்காரனைப் போலவும் சித்தரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் நான் ஒரு கண்ணியமான மனிதன்.
அமெரிக்கா தனது அரசியல் லாபத்திற்காகவும், வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் கைப்பற்றவும் என் மீது இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது" என்று தெரிவித்தார். மேலும் தானே இன்னும் வெனிசுலாவின் அதிபராக இருக்கிறேன் என மதுரோ நீதிமன்றத்தில் பல முறை வலியுறுத்தினார்.
மேலும் மதுரோவின் மனைவி அட்ரியானாவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். வழக்கின் விசாரணை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை.
- நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் துணை அதிபரை, தற்காலிக அதிபராக நியமித்து வெனிசுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மதுரோவும் அவரது மனைவியும் நியூ யார்க் அழைத்து வரப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், அவர்கள் மீது பயங்கரவாத போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்தது. மதுரோ நியூ யார்க் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தான் டிரம்ப் இடம் நேரடியாக தொடர்புகொண்டு தான் பேசியதாக மாம்தானி பேட்டியில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை. இது அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது.
இந்தத் தாக்குதல் வெளிநாடுகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கம் " என்று தெரிவித்தார்.
- நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர்.
- சந்திப்பின் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்-ஐ 'பாசிஸ்ட்' என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என டிரம்ப்பும் விமர்சித்தனர். மம்தானி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நியூ யார்க்கிற்கான நிதி குறைக்கப்படும் என டிரம்ப் தேர்தலுக்கு ஒரு நாள் முன் மிரட்டினார். இருப்பினும் நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர்.
இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நேற்று அவர்களின் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது டிரம்ப் மம்தானியுடன் இணக்கமாக நடந்து கொண்டார்.
மேலும் சந்திப்பின் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இது மிகவும் சிறந்த மற்றும் பயனுள்ள சந்திப்பு என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில், "நாங்கள் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம், இது ஒரு நல்ல, மிகவும் பயனுள்ள சந்திப்பு. நாங்கள் இருவரும் நேசிக்கும் இந்தப் நகரம் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு இலக்கு எங்களிடம் உள்ளது. நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். வீட்டுவசதி மற்றும் உணவு விலைகள் போன்ற சில விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்" என்று தெரிவித்தார்.
மேலும் "நீங்கள் ஒரு மிகச் சிறந்த மேயரைப் பெறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் சிறப்பாகச் செயல்பட்டால், நான் மகிழ்ச்சியடைவேன். இதில் கட்சி வேறுபாடு இல்லை என்று நான் சொல்வேன். உண்மையில், அவர் சில பழமைவாதிகளுக்கும், சில தீவிர தாராளவாதிகளுக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பார் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அதேநேரம் , நீங்கள் இன்னும் டிரம்ப்-ஐ பாசிஸ்ட் என கருதுகிறீர்களா என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது பேசிய மம்தானி பதிலளிக்க முற்பட்டார்.
அப்போது டிரம்ப் குறுக்கிட்டு, "பரவாயில்லை, நீங்கள் 'ஆம்' என்று மட்டும் சொன்னால் போதும். அதை விளக்குவதைவிட அது எளிது. ஐ டோன்ட் மைண்ட். தேட்ஸ் ஓகே. அதை விட மோசமாக கூட நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூறி மம்தானியை தட்டிக்கொடுத்தார்.
நீங்கள் என்னை 'பாசிஸ்ட்' என்று தொடர்ந்து அழைத்தாலும் பரவாயில்லை என டிரம்ப் காட்டிய காட்டிய இணக்கம் பலரை கவர்த்துள்ளது.
- சம்பவ இடத்திலிருந்து போலீசார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டனர்.
- மர்ம நபர்களை தேடும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
லவுஞ்சில் நடந்த ஒரு சிறிய சண்டை துப்பாக்கிச் சூடாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து போலீசார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டனர்.
இறந்தவர்களில் மூவரும் ஆண்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. காயமடைந்தவர்களில் எட்டு பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மர்ம நபர்களை தேடும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
- இது வெறும் ஒரு சாதாரண நாசவேலைச் செயல் மட்டுமல்ல, வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியது.
- அமெரிக்காவில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டு இதோடு நான்காவது முறை ஆகும்.
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கலிபோர்னியாவின் நியூவார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டது.
காலிஸ்தானி பிரிவினைவாதி ஜர்னைல் சிங் பிந்ரன்வாலே-வை புகழ்ந்து இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் கிராஃபிட்டிகள் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

இதை கவனித்த கோயில் நிர்வாகிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பதிலளித்த நியூவார்க் காவல் துறை, இது வெறும் ஒரு சாதாரண நாசவேலைச் செயல் மட்டுமல்ல, வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியது.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்தது.
அமெரிக்காவில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டு இதோடு நான்காவது முறை ஆகும்.
- அவர் தனக்கு "க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி" என்ற மூளை நோய் இருப்பதாக கூறியுள்ளார்.
- ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப், அன்னா ஹாத்வே ஆகியோரின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மத்திய மன்ஹாட்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது ஷேன் தமுரா என்பவரும், தன்னைத்தனே சுட்டுக்கொண்டதில் உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
போலீஸ் கூற்றுப்படி, உயிரிழந்த சந்தேகத்திற்கிடமான ஷேன் தமுரா, கைத்துப்பாக்கிக்கான உரிமம் பெற்றிருந்தார். காலாவதியான தனியார் துப்பறிவாளர் உரிமமும் அவரிடம் இருந்துள்ளது.
அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை மாலை சுமார் 6:40 மணியளவில் மன்ஹாட்டனின் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்தின் வரவேற்பறையில் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
பின்னர் அவர் 33வது தளத்திற்குச் சென்று தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். அவரிடம் ஒரு தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தனக்கு "க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி" (Chronic Traumatic Encephalopathy - CTE) என்ற மூளை நோய் இருப்பதாக எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் நடந்த மிட் டவுன் மன்ஹாட்டன் கட்டிடத்திலிருந்து 15 நிமிடங்கள் தொலைவில், ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப், அன்னா ஹாத்வே ஆகியோரின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி, திஷா பதானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட் காலா 2025 ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக ஆண்டுதோறும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் உலகெங்கிலும் உள்ள திரைப் பிரபலங்கள் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர். வித்தியாசமான உடையில் தோன்றி கேரமா முன் போஸ் கொடுப்பதே இந்நிகழ்வின் சாராம்சம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.

ஸ்டைலான கருப்பு நிற உடையில், கழுத்தில் 'K' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பெரிய செயின் உடன் ஷாருக் கான் தனக்கே உரிய ஸ்டைலில் தோன்றினார்.

இந்த நிகழ்வில் சுவாரஸ்யமான சம்பவமாக, வெளிநாட்டு ஊடகங்கள் ஷாருக் கானை அடையாளம் காணத் தவறியுள்ளன. நிகழ்வில் ஒரு நிருபர் ஷாருக் கானிடம் நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் சிரித்தவாறே, நான் தான் ஷாருக் கான் என்று கூறியுள்ளார். இந்த உரையாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் கடவுள் அந்தஸ்தில் பார்க்கும் ஷாருக் கானை யார் என்று கேட்ட நபரை நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
- மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்தது.
- இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தகவல்.
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது. இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு முழுக்க தீயில் கருகின. கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
1960-க்களில் இருந்து இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என நியூயார்க் நகர சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலை, பல நாட்கள் வரை நீடிக்கும் என்றும், இது அவசரகால நெருக்கடி என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சூல் தெரிவித்தார்.
- ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்ட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
- நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மாறியுள்ளது.
அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது. ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டதை தவிர்த்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும்.
இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதி முன்னேறும். வெஸ்ட் இண்டீசில் 6 மைதானங்களில் இறுதிப்போட்டி உள்பட 39 ஆட்டங்களும், அமெரிக்காவில் 3 மைதானங்களில் 16 ஆட்டங்களும் நடக்கின்றன. அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த தொடரில் வரும் ஜூன் 9 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்ட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Nassau County International Cricket Stadium) வைத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மாறியுள்ளது.
பனி மூடிய மைதானத்தை கடந்த பிப்ரவரி மாதம் புதுப்பிக்க ஆரம்பிக்கும்போது எடுத்த புகைப்படமும், மே மாத முடிவில் புதுப்பிக்கப்பட்டதற்கு பிந்தைய படமும் வெளியாகி இரண்டிலும் உள்ள வித்தியாசம் மலைக்க வைக்கக் கூடியதாக உள்ளது. இந்த மைதானத்தின் மதிப்பு ரூ.250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் வழிவந்த அண்ணாவின் திராவிட அரசியலை 1969 இல் அவரது மறைவுக்குப் பின் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற கலைஞர் கருணாநிதி பழமைவாதத்தை வேரறுக்கும் பல மகத்தான திட்டங்களை கொண்டுவந்தவர் ஆவார்.
கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டங்களை கொண்டுவந்தது, எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிறுவியது, இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது என கலைஞர் கொண்டுவந்த திட்டங்களின் பட்டியல் நீளும்.

குமரிக்கடலில் திருவள்ளுவர் சிலையை நிறுவி உலக செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டினார். கலைஞரின் சாதனைகளுக்காக இன்றளவும் அவர் நினைவுகூறப்டும் நிலையில் அவரின் 101 வது பிறந்தநாளை திமுக தொண்டர்களும் அவரது அபிமானிகளும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நியூ யார்க் தமிழ் சங்கத் தலைவருமான கதிர்வேல் குமாரராஜா தனது குடும்பத்துடன் சேர்ந்து கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது காசை செலவுசெய்து, நியூ யார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முழு அளவிலான விளம்பரப் பலகையில் கலைஞரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதிர்வேல் ராஜாவின் குடும்பத்தினர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் வகையில் கலைஞரின் புகைப்படம் பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
- நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
வன்முறைகளின் உற்பத்திக் களமாக அமெரிக்கா மாறி வருவதை நாளுக்கு நாள் அதிகமாக அரங்கேறி வரும் சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வாரத்திற்கு ஒன்று நடப்பதால் அந்நாட்டின் மக்களுக்கு வன்முறை என்பது நார்மலைஸ் ஆனதாக மாறி வருகிறது.
அந்த வகையில், நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பூங்காவில் இருந்தவர்களில் 6 பேர் குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் ஏறத்தாழ அனைவரும் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வைத்துள்ளனர். அதற்கான தோட்டாக்களை அவர்கள் மளிகைக் கடைகளில் உள்ள மெஷினில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் எடுத்துக்கொள்ளும் வசதியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது.
- நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்'
அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றிணைத்து நியூ யார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தை பேரணி நடத்தி பிரமாண்டமான முறையில் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுகளாக நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின பேரணி நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கஜ் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் குவீன்ஸ் 9 இந்தியா பேரணியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் முன் உரையாற்றிய நியூ யார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்தியா என்பதற்கு பதிலாக பாகிஸ்தான் என்று பலமுறை தவறுதலாக உச்சரித்தார். 'என்னை இந்த நிகழ்வுக்கு வர அனுமதித்ததற்கு மிகவும் நன்றி. உங்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும். குவீனஸ் நகர் லிட்டில் பாகிஸ்தானில் இருந்து ப்ரூக்லின் நகர் லிட்டில் பாகிஸ்தான் வரை நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். நியூ யார்க் என்பது அமெரிக்காவின் நியூ டெல்லி.எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்' என்று தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா என்று சொல்வதற்கு பதிலாக லிட்டில் பாகிஸ்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புலப்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை லிட்டில் என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அவ்வாறே அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகள் லிட்டில் இந்தியா, லிட்டில் பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தனுக்கும் இடையில் வித்தியாசங்கள் நம்மிடையே பெரிதாக தெரிந்தாலும்,வெளிநாடுகளில் வாழும் மக்கள் இரு நாட்டவரையும் குழப்பிக்கொள்வது வழக்கம்.






