search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advertisement"

    • பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
    • விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிறுவனங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்துறையில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இந்திய வேளாண் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறாத பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் சார்பில் பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்ற நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அந்த விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பாரதிய கூட்டுறவு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீடு உதவியாளர் பணிக்காக வெளியிடப்படும் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவல்துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது
    • போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி செய்யப்பட்டது

    அரியலுர்:

    மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நேற்று தொடங்கியநிலையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி,செஸ் பலகை மற்றும் சாலை விதிகளை தொடர்புபடுத்தி, அரிலூர் மாவட்ட காவல் துறை சார்பில் விழிப்புணர்வு விளம்பரம் வெளியிடப்பட்டது. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ராணி உள்ளிட்ட சில காய்களுடன் கூடிய ஸெ் பலகையில், செஸ் பலகையோ அல்லது சாலையோ, தவறான சிறிய நகர்வும் பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும், தவளான திசையில் வாகனங்களை இயக்ககூடாது என்று அச்சிடப்பட்டுள்ளது.

    பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசு திட்டத்திற்கான விளம்பரம் பிரதமர் மோடியை காக்க உதவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    கடந்த 2015-ல் அரியானாவில் தொடங்கிய இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து விளம்பரத்துக்காக மட்டும் 56 சதவீதம் செலவழிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசு திட்டத்துக்கான விளம்பரம் பிரதமர் மோடியை காக்க உதவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு செலவு செய்யப்படும் விளம்பரம் பிரதமர் மோடியை காப்பாற்ற உதவுகிறது என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #PMModi
    இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது. அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. #sony #FIFA2018
    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா வருகிற 17-ந்தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

    இப்போட்டி தொடரை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

    இந்தியாவிலும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூரம் பரவி வருகிறது. கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்திய ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

    இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது.

    அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்வாகும். 2014-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது ரூ.120 கோடி வரை விளம்பரம் மூலம் வருவாய் கிடைத்தது.

    இந்தியாவில் நடந்துவரும் இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து தொடர் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. #sony #FIFA2018
    ×