பயிர் காப்பீடு திட்டத்தில் உதவியாளர் பணி நியமனம் ஏதும் இல்லை- வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு திட்டத்தில் உதவியாளர் பணி நியமனம் ஏதும் இல்லை- வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிறுவனங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்துறையில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இந்திய வேளாண் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறாத பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் சார்பில் பாரத பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்ற நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அந்த விளம்பரத்தில் உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பாரதிய கூட்டுறவு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீடு உதவியாளர் பணிக்காக வெளியிடப்படும் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com