search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amitabh Bachchan"

    • வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கியது 'கல்கி 2898 ஏடி' திரைப்படம்
    • கல்கி 2898 ஏடி' படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

     

    நான்கு நாட்களில் ரூ.400 கோடியை இந்த படம் எட்டிய நிலையில், படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்தின் வசூல் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கிடையில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறத்தொடங்கியுள்ளது. 'கல்கி 2898 ஏடி' படத்தின்  பட்ஜெட் ரூ.600 கோடி என்பது  குறிப்பிடத்தக்கது. 

    • மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும்.
    • படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார்.

    பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. எட்டே நாட்களில் 700 கோடியைத் தாண்டி வசூல்  வேட்டை நடத்தி வருகிறது.

    நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர் பட்டாலமே நடித்துள்ளது. பேன்டஸி பிக்சனாக உருவாகியுள்ள இப்படத்தின் கதை மகாபாரதம், கிருஷ்ணர், கலியுகம், கல்கியின் பிறப்பு ஆகியவற்றை சுற்றி நிகழ்கிறது.

    இந்நிலையில் ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வரும் வேளையில் 90 ஸில் பிரபல தொடரான சக்திமான் தொடரின் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா கல்கி 2898 ஏடி படம் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

     

    கல்கி 2898 ஏடி குறித்து அவர் கூறியதாவது, இந்த படம் மேற்கத்திய ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அளவுக்கு மிகவும் அதிபுத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும். ஒடிசா, பீகார் மாநிலங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் இது புரியாது.

    அதுமட்டுமின்றி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார். பகவான் கிருஷ்ணர், அஸ்வத்தாமாவின் நெற்றியில் உள்ள கல்லை சாபம் காரணமாக நீக்குவார். ஆனால் படத்தில் வேறு மாதிரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க் க்ளிக் செய்யவும்.

    • நேற்று வரை இத்திரைப்படம் ரூ.415 கோடி ரூபாய் வசூலித்திருநத்து
    • பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இவசூல் ரிப்போர்ட் வந்துள்ளது.

    அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை ரூ.415 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் ரூ.555 ரூபாய் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முதல் நான்கு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் விரைவில் 600 கோடியை தாண்டி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது.
    • மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் 415 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர்.

    முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
    • இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    இந்தி திரை உலகில் பிரபல நடிகரான அமிதாபச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவும், ஷாருக்கான் மகள் சுகானா காணும் நெருங்கிய நண்பர்கள்.

    இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஏற்கனவே இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

    இந்நிலையில் இவர்களின் நண்பர் வேதாந்மகாஜன் பிறந்தநாள் லண்டனில் நடந்தது. இதையொட்டி நடந்த இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    அவர்களுடன் அஜய் தேவ்கான், கஜோல் தம்பதியரின் மகள் நைசாவும் பங்கேற்று உள்ளார். இரவு விருந்து முடிந்து சுகானா காணும், அகஸ்தியா நந்தாவும் ஒரே காரில் திரும்பி சென்றனர்.

    இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் லண்டன் விருந்தில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு அடுதடுத்து சுவாரஸ்யமான விஷயங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     

    மேலும், இன்று அதிகாலை அவர் நடத்தி வரும் பிளாகில் எழுதி பதிவிட்ட அவர், இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அவரது பதிவில், 'ஒருவழியாக உற்சாகமும், அச்சமும் நிறைந்த இந்த போட்டி நிறைவடைத்துவிட்டது. இந்த போட்டியை நான் டிவியில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

     

    இதோபோல எக்ஸ் தளத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தான் போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவித்திடும் என்பதால் நான் போட்டியை பார்க்காமல் தியாகம் செய்தேன் நான் என்ன செய்யட்டும் சுந்தர் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, போட்டியை பார்க்காததற்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
    • 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    படத்தின் விஸ்வல் எஃபக்டுகள் ஹாலிவுட் தரத்தில் மேற்கொண்டுள்ளனர். கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார். கல்கி இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

    தற்பொழுது படத்தின் முதல் பாடலான டா டக்கரா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இது பிரபாஸ் மற்றும் திஷா பதானி இடையே உள்ள காதல் பாடலாக அமைந்துள்ளது. பாடலின் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இரண்டு நாட்களில் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
    • தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    படத்தின் விஸ்வல் எஃபக்டுகள் ஹாலிவுட் தரத்தில் மேற்கொண்டுள்ளனர். கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார். கல்கி இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.

    இந்நிலையில், இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கல்கியை பார்த்தேன். என்ன ஒரு படம். இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேர லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார். நாக் அஸ்வின், அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள். இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன்', இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    இரண்டு நாட்களில் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது.
    • சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

    'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கல்கி 2898 கி.பி படத்தின் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    • இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

    இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.

    இத்திரைப்படத்தில் மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் வரும் இந்த புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

    இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனம் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் 11 அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. இந்த வாகனத்தின் எடை 6 டன் அதாவது 6000 கிலோ ஆகும்.

    2 மஹேந்திரா எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 125 bhp மற்றும் 9,800 Nm டார்க் சக்தியுடன் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்புறம் 47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் பயணிக்கமுடியும். இந்த வாகனத்தில் 2 ஹப்லெஸ் டயர் முன்புறத்தில் 1 ஹப்லெஸ் டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டயரின் எடையும் 1 டன் ஆகும்.

    இந்த வாகனத்தின் மையத்தில் ஓட்டுநருக்கு ஒரு இருக்கை உள்ளது. வாகனத்தின் பின்புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு ஒரு சிறிய சிறை ஒன்று உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    • இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.

    பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ.டி. படம் வருகிற 27-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஏராளமான ரசிகர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் ஒரு சுவாரசிய நிகழ்வை நடத்தியுள்ளனர். கல்கி2898 ஏ.டி என்ற திரைப்படம் வெளியாகும் நாளில் தெலுங்கில் நடிகர் ராஜசேகர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது.

    இதனால் ஏராளமான ரசிகர்கள் பிரபாசின் கல்கி 2898 ஏ.டி.க்கு பதிலாக ராஜசேகர் நடித்த கல்கி படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் ராஜசேகரின் கல்கி திரைப்படம் கிட்டத்தட்ட 20 காட்சிகள் விற்று தீர்ந்து விட்டது.

    இதையடுத்து ராஜசேகர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த முன்பதிவுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். கல்கி 2898 ஏ.டி திரைப்பட குழுவினருக்கு பாராட்டும் அவரது வாழ்த்தையும் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து `புக் மை ஷோ' நிறுவனம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர். யாரும் கவலைக் கொள்ள வேணாம், யாரெல்laaம் ராஜசேகரின் கல்கி திரைப்படத்திற்கு தவறுதலாக புக் செய்யப்பட்டதோ  அவர்களக்கு பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படத்திற்கு பதிவு செய்யப்படும், இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்யப்படும் என அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரமாண்டமான செட் மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன.
    • இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப் நம்மை மிரட்டுகிறது.

    நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

    வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'கல்கி 2898 ஏடி' படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தின் மூலம் புதியதோர் உலகை உருவாகியுள்ளார். பிரமாண்டமான செட் மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸுடன் காட்சிகள் ஈர்க்கின்றன.

    நடிகர்களுக்கான உடைகள் தொடங்கி, வித்தியாசமான வாகனத்தை வடிவமைத்தது முதல் இறுதியில் வரும் கமல்ஹாசனின் கெட்டப் வரை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

    பிரமாண்டமான காட்சிகளுடன் கூடிய புதிய ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

    ×