search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fined"

    • கோவை உள்பட 3 மாவட்டங்களில் அதிகாரிகள் தணிக்கை சோதனை
    • போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை

    கோவை, 

    கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 5 பகுதி அலுவலகங்களை சேர்ந்த போக்குவரத்து துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு தணிக்கை குழுவி னர் நேற்று காலை முதல் மாலை வரை தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.

    இதில் மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராத மாக ரூ.25.22 லட்சம் விதிக்கப்பட்டு ள்ளது.

    இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து இணை ஆணையர் சிவகுமரன் கூறியதாவது:-

    அதிகம் பாரம் ஏற்றிய 53 வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றிய 38 வாகனங்கள், வாகன காப்பீடு இல்லாத 45 வாகனங்கள், தகுதிச்சா ன்று இல்லாத 49 வாகனங்கள், புகை பரிசோதனை சான்று இல்லாத 13 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத 41 வாகனங்கள், அனுமதி ச்சீட்டு இல்லாத 2 வாக னங்கள் என மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்ப ட்டுள்ளது.

    இதில் பெரும்பாலா னவை லாரி, மேக்சி கேப், ஆட்டோ, சரக்கு ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவை ஆகும். தகுதிச்சான்று இல்லா மல் வாகனத்தை இயக்கி, வித்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடை க்காது. அதோடு உரிய ஓட்டுநர் உரிமம் பெற்ற வர்கள் தான் வாகனத்தை இயக்க வேண்டும்.

    அதிக பாரம் ஏற்றி சென் றால் அபராத தொகை விதிக்கப்படும். எனவே அனுமதிக்கப்பட்ட எடையோடு தான் வாக னத்தை இயக்க வேண்டும்.

    இவ்வாறு இயக்குவது வாகனத்துக்கும், சாலை க்கும் பாதுகாப்பாக இரு க்கும்.

    விபத்துக்களையும் தவிர்க்க முடியும். இதுபோ ன்று தொடர்ச்சி யாக சோதனைகள் நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் உரிய அனைத்து ஆவணங்களையும் வைத்தி ருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உணவகங்கள், பேக்கரிகள் என மொத்தம் 145 கடைகளில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனா்.
    • 27 கடைகளுக்கு ரூ. 43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிக்கை தலைமையிலான அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் என மொத்தம் 145 கடைகளில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது, குளிா்சாதனப் பெட்டிகளில் இருப்புவைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன கோழி இறைச்சி, தேங்காய் சட்னி, தயிா், மயோனிஷ், மோமோஸ் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.இது தொடா்பாக 27 கடைகளுக்கு ரூ. 43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடா்ந்து நடைபெறும் என்றும், திருப்பூா் மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் தரம் குறித்து 94440-42322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 

    • 227 நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது

    கோவை,

    சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவுப்படியும், கோவை தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி அறிவுறுத்தல்படியும், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி வழிகாட்டுதலின் படி, தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) தலைமையில், சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது.

    தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு உள்ளதா? அன்றைய தினத்தில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கபட்டு இருந்தால் உரிய படிவம் வழங்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு நடைபெற்றது.

    கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 227 நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில், சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்த ப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்ன றிவிப்பு அளிக்காமல், அன்றைய தினம் பணிபுரிய அனுமதித்த 78 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 96 உணவு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 174 உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் அந்த நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நிறுவனங்களில் அடுத்தமாதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய மாற்று விடுப்போ அல்லது இரட்டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டு உள்ளதா? என்று மீண்டும் ஆய்வு செய்யப்படும். மீண்டும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், சட்ட ப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.
    • ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி தனியார் பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ புஸ்சி வீதியில் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணித்த 8 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பஸ், ஆட்டோ டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதற்கிடையே ஆட்டோவில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி புதுவை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    புஸ்சி வீதி-தூய்மா வீதி சந்திப்பில் பள்ளி மாணவிகளை ஏற்றி வரும் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சோனாம்பாளையம் சந்திப்பிலும் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆட்டோவில் 5 மாணவர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. ஆனால் அதை தாண்டி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 200 வீதம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.

    ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர். இதுபோல் நடந்த சோதனையில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மன வருத்தமடைந்துள்ளனர். 5 மாணவர்களை மட்டும் ஆட்டோவில் ஏற்றிச்சென்றால் தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்.

    • காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது.
    • பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார்.

    பீஜிங் :

    சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே இந்த தவறுக்கு மன்னிப்பு கோரிய லீ ஹாவ்ஷி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்த போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் அவரை சஸ்பெண்ட் செய்ததாக சியாகுவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் `இது காமெடியை மேலும் ஒடுக்க வழிவகுக்கும்' என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
    • துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காரணமாக ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து உணவகங்களில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு செய்து உணவு தரத்தினை உறுதி செய்யுமாறு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஊட்டி கமர்சியல் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர்.

    இந்த ஆய்வில் சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 6 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கூறிய உணவகங்கள் தங்கள் சமையலறை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை தொடர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அனைத்தும் தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல தரத்துடன் கூடிய உணவு பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனைத்து உணவகங்களும் தங்களது உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும். மேலும், சமையலுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

    உணவு பொருட்களை பரிமாறுவதற்கு செய்தி தாள்களை பயன்படுத்து வதை தவிர்க்குமாறும், இறைச்சி கடைகளில் பொட்டலமிட நெகிழி பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் தவறு செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • சந்தன மரத்தை கடத்தியதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
    • வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானம் கட்டுவதற்கு அங்கிருந்த பல இன மரங்களை வெட்டும்பொழுது, அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்தி விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த திருமலைசாமி (53), குணசீலன் (40), சுதாகர் (33), சரவணன்(33), ரமேஷ்(28), கோவிந்தசாமி(43), இளவர சன்(33) ஆகிய 7 பேரையும் பிடித்தனர்.

    மேலும் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற அவர்கள் மீது கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெட்டி கடத்திய மற்ற 5 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.

    கோவை,

    கேரளாவில் இருந்து சமீப காலமாக கோழிக்கழிவு, இறைச்சி கழிவுகளை சிலர் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்டம் பிச்சனூர் மற்றும் மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து எழுந்த புகாரை தொடர்ந்து க.க.சாவடி போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோவில் கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த மர்மநபர்கள் அதை சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட நவக்கரையில் கொட்டினர்.

    இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் கழிவுகளை கொட்ட வந்தவர்களை கையும், களவுமாக பிடித்ததோடு, க.க.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் திருச்சசூர் மாவட்டம் சோளக்கரையை சேர்ந்த முரளி கிருஷ்ணன்(38), திருவள்ளாமலை அக்கபரம்பில்லை சேர்ந்த லியோ வர்கீஸ்(34) ஆகியோர் தலைமையில் 8 பேர் கேரள மாநிலத்தில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து மாவுத்தம்பதி ஊராட்சியில் கொட்டியது தெரியவந்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் கழிவுகளை ஏற்றி வந்த மினி வாகனத்தை மாவுத்தம்பதி ஊராட்சியில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதையடுத்து கோழிகழிவுகளை ஊராட்சி பகுதியில் கொட்டியதற்காக சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது மாவுத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.

    அதுமட்டுமின்றி இனி மேல் கேரளாவில் இருந்து கோழிகழிவுகளை கொண்டு வந்து ஊராட்சியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் கோமதி செந்தில்குமார் எச்சரித்தார்.

    • மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.
    • அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார்.

    கோவை,

    கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் நகருக்குள் ஏற்படும் நெரிசலை குறைக்கும் நோக்கில் சாய்பாபா கோவில் அருகே கடந்த 2010-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றால் பயண தூரம் குறையும் என்பதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும் என முந்தைய கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. தடை ஏதும் விதிக்கப்பட வில்லை. இருப்பினும் பஸ்களில் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படுவதை ேபாக்குவரத்து துறையினர் உறுதி செய்யாமல் இருந்து வந்தனர். இதனால் தினசரி மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.

    இந்தநிலையில் காந்திபுரம்- மேட்டுப்பாயைம் வழி தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2018-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி கட்டணம் குறைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறதா என சோதனை செய்ேதாம்.

    அப்போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணிக்க கட்டணமாக ரூ.20-க்கு பதில் ரூ.22 வசூலித்த 2 அரசு பஸ்கள், காந்திபுரம் - மேட்டுப்பாளையம் இடையே ரூ.23-க்கு பதில் ரூ.25 கட்டணம் வசூலித்த 2 தனியார், 4 அரசு பஸ்கள், ரூ.23-க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசு பஸ் என மொத்தம் 9 பஸ்களுக்கு அபராதம் விதிக்க தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்களுக்கு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களுக்கு தணிக்கை அறிக்கை அனுப்பப்படும். அவர்கள் அபராதம் விதிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
    • அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

    மதுரை

    மதுரை-நத்தம் சாைலயில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பா.ஜ.க. நிர்வாகிகள் பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக பா.ஜ.க. சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையும் மீறி பா.ஜ.க. நிர்வாகிகள் வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.1,500 வீதம் அபராதம் விதித்தனர்.

    • வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.
    • வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா ஓவேலி வனச்சரகம் புன்னம்புழா ஆற்றுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.

    இதை தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 45), மணிகண்டன் (40) மற்றும் தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்த சுதாகரன் (36) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரக யுவராஜ்குமார் கைதான 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார்.

    • ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
    • 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.

    ஊட்டி

    குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மலர் அங்காடியில் 13 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. உடனே அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இதுகுறித்து குன்னூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிறுவனை பணிக்கு அமர்த்திய மலர் அங்காடி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதேபோன்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் 16 வயது சிறுவன் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அந்த சிறுவனை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் கலெக்டருக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த ஓட்டலுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    ×