search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி: போலீசார் அபராதம்
    X

    அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி: போலீசார் அபராதம்

    • அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
    • அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.

    மதுரை

    மதுரை-நத்தம் சாைலயில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பா.ஜ.க. நிர்வாகிகள் பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக பா.ஜ.க. சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையும் மீறி பா.ஜ.க. நிர்வாகிகள் வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.1,500 வீதம் அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×