என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைப்பழம்"

    • நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
    • சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

    ஈரோடு:

    ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் இருந்தான்.

    நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் சாய்சரண் மூச்சு விட சிரமப்பட்டு திணறினான்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாய்சரணின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவி உடன் சிறுவனை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருப்பதாக கூறினார். மேலும் சிறுவனின் நிலைமை மோசமாக உள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். இதை அடுத்து சிறுவனை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். அதன் பின்னர் சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடியது வாழைப்பழம்.
    • நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது.

    உடல் மிகவும் பலவீனமாக இருக்கிறது. உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில பழங்களை சேர்க்கவேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட்ட உடனேயே ஆற்றல் தரக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும், அவற்றால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் இங்கு காணலாம். 

    இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்

    வாழைப்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத என இரண்டு வகையான நார்ச்சத்துகள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நீண்டநேரம் பசி எடுக்காது. கரையாத நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பழுக்காத (பச்சை) வாழைப்பழங்களில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் (resistant starch) அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு கடினமாக இருந்தாலும், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சுதலை சீராக்க உதவுகின்றன. இருப்பினும் பழுத்த வாழைப்பழங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளதால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக வாழைப்பழங்கள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு ஒரேயொரு சிறிய அல்லது நடுத்தர வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவது நல்லது.

    மலச்சிக்கலை நீக்கும்

    பழுக்காத வாழைப்பழங்களில் காணப்படும் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளித்து அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டைத் தூண்டுகிறது. இது புரோபயாடிக்குகள் (நேர்மறையான பாக்டீரியாக்கள்) செழித்து வளர உதவுகிறது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. வாழைப்பழங்களில் காணப்படும் பெக்டின் என்ற நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும் எனக் கூறப்படுகிறது. 

    எடை இழப்புக்கு உதவும்

    வாழைப்பழங்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவு கலோரிகளை கொண்டவை. ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் சுமார் 105 கலோரிகளே உள்ளன. ஆனால் அவை சத்தானவை மற்றும் நிறைவானவை.


    வாழைப்பழம் கொழுப்புச்சத்தை அதிகரிக்காது

    இதய ஆரோக்கியத்திற்கு உதவும்

    பொட்டாசியம் என்பது இதய ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அவசியமானது. வாழைப்பழங்கள் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். ஒரு நடுத்தர வாழைப்பழம் தினசரி மதிப்பில் 10% பொட்டாசியத்தை வழங்குகிறது. பொட்டாசியம் நிறைந்த உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும். வாழைப்பழங்களில் மெக்னீசியத்திற்கான DV-யில் 8% உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கான மற்றொரு முக்கியமான கனிமமாகும். மெக்னீசியம் குறைபாடு (ஹைப்போமக்னீமியா) இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் அதிக அளவு கொழுப்புகள் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது. எனவே, உங்கள் உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் இந்த மெக்னீசியத்தை பெறுவது அவசியம். 

    ஆக்ஸிஜனேற்றிகள்

    காய்கறிகள், பழங்கள் அனைத்துமே அதிகளவு ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டிருக்கும். அந்த வகையில் வாழைப்பழங்களில் அமின்கள் உட்பட பல வகையான சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய் மற்றும் மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைத்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களால் செல்களுக்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்க உதவுகின்றன. 

    வாழைப்பழத்தில் உள்ள ஊட்டத்துக்கள்

    வாழைப்பழத்தில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகள், நீர், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இதில் புரதம் குறைவு என்றாலும், அதைவிட மிக மிக குறைவு கொழுப்புச்சத்து. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

    ஒரு வாழைப்பழத்தில் உள்ளவை :

    கலோரிகள்: 112

    கொழுப்பு: 0.4 கிராம் (கிராம்)

    புரதம்: 1 கிராம்

    கார்போஹைட்ரேட்: 29 கிராம்

    நார்ச்சத்து: 3 கிராம்

    வைட்டமின் சி: தினசரி மதிப்பில் (DV) 12%

    ரைபோஃப்ளேவின்: DVயில் 7%

    ஃபோலேட்: DV யில் 6%

    நியாசின்: DV யில் 5%

    தாமிரம்: DV யில் 11%

    பொட்டாசியம்: DV யில் 10%

    மெக்னீசியம்: DV யில் 8%

    • பளபளப்பான, தெளிவான முகம் உடல்நலனை பிரதிபலிக்கிறது
    • அனைத்து தோல் நோய்களுக்கும் மஞ்சள் தீர்வாக உள்ளது.

    நமது சருமம், நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தாண்டி, நமது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். பளபளப்பான மற்றும் தெளிவான முகம் உங்கள் உடல்நலனை பிரதிபலிக்கிறது. மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கின்றன. நமது சருமம் பெரும்பாலும் இதன் விளைவுகளை பிரதிபலிக்கிறது. பளபளப்பான சருமத்தைப் பராமரிப்பது என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல. ஆரோக்கியத்தை பற்றியதும். சரும ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இடையிலான ஆழமான தொடர்பைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும். என்னதான் நாம் சந்தையில் கிடைக்கும் சரும பராமரிப்பு பொருட்களை அழகுக்காக வாங்கி பயன்படுத்தினாலும், இயற்கை பொருட்கள் தரும் அழகை அதனால் ஈடுகொடுக்க முடியாது. அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த முக்கிய மூலப்பொருட்கள் குறித்து பார்ப்போம்.

    மஞ்சள்

    மஞ்சள் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் நிறத்திற்கு காரணமான இதில் இருக்கும் குர்குமின் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுவதுடன், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. மஞ்சள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தை மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், முகத்திற்கு பளபளப்பை வழங்கவும், கண்ணின் கருவளையத்தை போக்கவும், வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கவும் மஞ்சள் முக்கிய பங்காற்றுகிறது.

    தேன்

    தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராகும். தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களைத் தடுக்கவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகின்றன. முகத்தில் உள்ள வடுக்களை மறைக்க தேன் உதவுகிறது. சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

    ஆரஞ்ச் ஜுஸ்

    ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் சருமத்தை சுத்தம் செய்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.


    இயற்கை பொருட்கள் தரும் அழகை எதனாலும் ஈடுகொடுக்க முடியாது.

    எலுமிச்சை

    எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது. இது நமது சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்து நமது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

    தயிர்

    லாக்டிக் அமிலம் நிறைந்த தயிர், சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில் பழுப்பு மற்றும் கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. இது வெயிலில் ஏற்படும் தீக்காயங்களைத் தணித்து, ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.

    பாதாம்

    பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பாதாம் எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது நமது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது.

    வாழைப்பழம்

    வாழைப்பழம் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் பி நிறைந்துள்ளன. இவை நமது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன. 

    பப்பாளி

    பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை முகத்திற்கு பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள கறைகள் மற்றும் வடுக்கள் குறையும். பப்பாளி ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராகவும் செயல்படுகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது. சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகான பளபளப்புடன் வைத்திருக்க பப்பாளி உதவுகிறது. 

    • வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.
    • வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன. உடல் எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க மிதமான அளவு சாப்பிடுவதே முக்கியமானது. அதனை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    * வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.

    * புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? வாழைப்பழங்கள் உதவும். அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின் ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும்.

    * வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    * மன அழுத்தமாகவோ, சோகமாகவோ உணர்கிறீர்களா? வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும் உதவிடும்.

    * பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும்.

    • வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கர்நாடகம்-தமிழகம் இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள இந்த பகுதியில் யானை, சிறுத்தை, புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் அந்த ஒற்றை யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை அந்த நபரை துரத்த தொடங்கியது. அந்த நபர் அலறியடித்து கொண்டு தான் வந்த காரில் உயிர் தப்பினார்.

    இந்த காட்சியை அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.

    வனத்துறை விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என தெரிய வந்தது. அவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் அவரிடம் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம்.
    • ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன.

    நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களுள் ஒன்று வாழைப்பழம். இதனை உட்கொள்வது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் உதவும்.

    வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும் செரிமானத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் நார்ப்பொருளை கொண்டுள்ளது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவும்.

    ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரிகள் உள்ளன. தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். மேலும் பொட்டாசியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால், தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

    வாழைப்பழம் சாப்பிடுவதால் பல்லில் துவாரம் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் நிறைய மாவுச்சத்து உள்ளது. அது பற்களுக்கு இடையில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். எனவே வாழைப்பழத்தை சாப்பிட்டதும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் மாவுச்சத்து பற்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    வாழைப்பழத்தில், வைட்டமின் பி6 அதிக அளவில் காணப்படுகிறது. அதனை அதிகம் உட்கொள்வது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 'பாடிபில்டிங்' பயிற்சி செய்து கட்டுடல் அழகை பேணுவதற்காக வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம். ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் காணப்படுகிறது. அதனை சமையலில் சேர்த்து தினமும் உட்கொண்டால், வாயு தொந்தரவு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பழுத்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலந்திருக்கும். இது செரிமானத்திற்கு நல்லது. எனினும் வாழைப்பழத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே அதிகம் உட்கொள்ளக்கூடாது.

    வாழைப்பழத்தில் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் வாழைப்பழங்களை குறைந்த அளவுஉட்கொள்ளுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உட்கொள்வதுதான் சரியானது.

    சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைஉள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் குறைந்த அளவே வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குமரி மாவட்டத்தில் மட்டி, செம்மட்டி ஆகிய 2 ரகங்கள் உள்ளன.
    • சிறுநீகர பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமையும் மட்டிப் பழத்திற்கு உள்ளது.

    இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது.

    அந்த வகையில் தற்போது மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் விளையும் மட்டி வாழைப்பழங்களில் பெரும்பாலான வகைகள் குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் மட்டி, செம்மட்டி ஆகிய 2 ரகங்கள் உள்ளன. இந்த இரண்டு ரகங்களுமே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளை விக்கப்பட்டு வருகின்றன.

    குமரி மாவட்ட மண், மட்டிப்பழத்திற்கு ஏதுவானதாக இருப்பதால் விளைச்சலும் அதிகமாக உள்ளது. மட்டிவாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியவை. மட்டி வாழையை நட்ட ஒரு ஆண்டிற்குள்ளாகவே வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியும். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகள் இருக்கும். தாரில் 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும்.

    இந்த மட்டி வாழைப் பழத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மட்டி வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து இதயத்தையும், ரத்த அழுத்தத்தையும்சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும் இதில் புரதம் மற்றும் உப்பு சத்து இருக்கிறது. இதனால் சிறுநீகர பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமையும் மட்டிப் பழத்திற்கு உள்ளது.

    இந்த வாழைப்பழம் செரிமானத்துக்கு ஏற்றது மட்டுமின்றி, இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. நாள்பட்ட அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம், அதிலிருந்து விடுபட முடியும்.

    நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மட்டிப்பழத்தை, பச்சிளம் குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த பழம் மிகவும் மிருதுவாகவும், இனிப்பாகவும், மணமாகவும் இருப்பதால் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளுக்கு விரும்பி கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதன்முதலாக மட்டி வாழைப்பழத்தை நசுக்கி சாப்பிட கொடுக்கும் பழக்கம் குமரி மாவட்டத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மட்டிப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குமரி மாவட்டத்திற்கும், வாழை விவசாயிகளுக்கும் அந்தஸ்து கிடைத்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நேந்திரம் வாழை, நாட்டு மருந்து, கிராம்பு, ஈத்தாமொழி நெட்டை தென்னை தேங்காய், மார்த்தாண்டம் தேன் உள்ளிட்டவைகளுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கபபட்டுள்ள நிலையில், தற்போது மட்டி வாழைப்பழத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால் குமரி மாவட்ட வாழை விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    • வேறு எந்த வகை வாழைப்ப ழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.
    • பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம்.

    திருவட்டார் :

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் வாழை விவசாயம் அதிக அளவில் நடை பெறுகிறது. செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோ ட்டை, பேயன், ரஸ்தாளி, சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழை ரகங்கள் பயிரிடப்படு கின்றன. மட்டி வாழை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆரம்ப த்தில் விளைந்த காட்டு ரக வாழை ஆகும். அது மெல்ல மெல்ல நாட்டுப்ப குதிகளுக்கும் பரவியது. மட்டியின் சிறப்பே அதன் ருசியும், மணமும் தான். வேறு எந்த வகை வாழைப்ப ழத்திலும் மட்டி மாதிரி மணம் வீசுவது இல்லை.

    முன்பு பேச்சிப்பாறை, குலசேகரம், அருமனை உள்ளிட்ட மலைப்பகுதி களில் மட்டுமே மட்டி வாழைக்கு லைகள் அதிகமாக விற்பனைக்கு வரும். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மட்டி வாழைக்குலைகள் அதிகமாக பயிரிடுகி றார்கள். இதனால் எப்போதும் சந்தையில் கிடைக்கும் பழ ரகங்களில் ஒன்றாக மட்டி விளங்குகிறது.

    மாவட்டத்தில் நடைபெறும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நடத்தும் நிகழ்ச்சிகளில் மட்டி வாழைப்பழமும், முந்திரிப்பருப்பும் தவறாமல் இடம்பெறும். மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல், பொதுவாக மஞ்சள் நிறத்தில் தான் காணப்படும். மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூ டியது.

    வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்பு சுவையும். மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட்டத்தில் மட்டிப்பழத்தை குழந்தைக ளுக்கு மிகவும் விரும்பி அளி ப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் முதலில் மட்டி வாழைப்ப ழத்தை நசுக்கி கொடு க்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

    மட்டி வாழையை நட்டு 11 முதல் 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யலாம். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோவும் அதற்கு மேலும் எடை இருக்கும். ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும். ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. மட்டிப்பழம் பற்றிய நிகழ்வு ஒன்றும் சரித்திரத்தில் இடம்பெ ற்றுள்ளது.

    தற்போது இந்த மட்டி பழத்துக்கு அரசு புவிசார் குறியீடு கொடுத்திருப்பதை தொடர்ந்து அதன் விலை ரூ.160-க்கு விற்பனை ஆகிறது.

    • தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
    • செவ்வாழை ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய காய்கறி சந்தையாக பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் விளங்கி வருகிறது.

    இந்த தினசரி சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், உள்ளூர் வரத்து இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் மற்றும் வாழை இலைகள் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    வாழைத்தார்களில் ரோபஸ்டோ, நாடு, கோழிக்கூடு ஆகிய ரகங்களின் விலையானது ரூ.150 முதல் ரூ.300 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 மடங்காக விலை உயர்ந்துள்ளது. அதேபோன்று செவ்வாழை ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. வாழை இலை கட்டுகளின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதன் விலை ஏற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும்.
    • இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி உள்ளது.

    திடீர் பசியைத் தணிக்க விரும்பினாலோ, பயணத்தின்போது சாப்பிட ஆசைப்பட்டாலோ சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும். இதனை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும். தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள். வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான ௧௦ காரணங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

    சத்துக்கள்

    எல்லா வகையான வாழைப்பழங்களிலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிற்றுண்டி உணவாகவும் அமைந்திருக்கின்றன.

    மேலும், வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குறைந்த கலோரிகளே கொண்டிருப்பதும் வாழைப்பழத்தை பலரும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது.

    பொட்டாசியம்

    வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு தேவையான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் முக்கியமானது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழமாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

    ஆற்றல்

    வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். உடற்பயிற்சியையும் உற்சாகமாக செய்யத் தூண்டும். மதிய உணவுக்குப் பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது.

    செரிமானம்

    வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேண உதவும். குறிப்பாக 'பெக்டின்' குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவிபுரியும். மலச்சிக்கலையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    வயிற்றுக் கோளாறு

    வயிற்று கோளாறு அல்லது செரிமானம் சார்ந்த அசவுகரியங்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்கள் எளிதாக ஜீரணமாகும். வயிற்றில் ஏற்படும் வலியை போக்கவும் உதவும்.

    இதய ஆரோக்கியம்

    பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதய நோய் மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

    உடல் எடை

    வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் குறைவு. அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக பசியை கட்டுப்படுத்திவிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உடல் எடையை சீராக பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமையும்.

    மனநிலை மேம்பாடு

    வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் வைட்டமின் பி6  செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

    சருமம்

    வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும்.

    இயற்கை இனிப்பு

    வாழைப்பழங்கள் ஆரோக்கியமான முறையில் உடலின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை. ஸ்மூத்தி, பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் வாழைப்பழங்களை சேர்ப்பதன் மூலம் செயற்கை சர்க்கரையின் தேவையை குறைக்கலாம்.

    • அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

    எலுமிச்சை ஸ்க்ரப்

    நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.

    பால்

    பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

    அன்னாசி கூழ்

    வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.

    ஆலிவ் ஆயில்

    தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

    வாழைப்பழம்

    மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.

    • பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.
    • வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஆத்ரேயபுரம் மண்டலம், உச்சிலியை சேர்ந்தவர் ரித்து சாந்திராஜ். விவசாயி.

    இவரது நிலத்தில் பக்கிஸ் வகையை சேர்ந்த வாழை பயிரிட்டு இருந்தார். இவர் பயிரிட்டு இருந்த வாழை மரத்தில் 6.5 அடி உயரம் உள்ள வாழைத்தார் விளைந்தது.

    பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.

    இதனை நேற்று ராவுல பாலத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். வாழைத்தாரை தொழிலதிபர் சீனிவாசரெட்டி என்பவர் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

    வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    ×