search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fiber"

    • குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    • காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். அதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அப்படி கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி வழக்கத்தை முறையாக பின்பற்றி வருவதுடன் மேலும் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

    1. தண்ணீர்:

    காலையில் எழும்போது பலருக்கும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். பல் துலக்கியதும் தண்ணீர் பருகுவதன் மூலம் அதனை விரட்டியடிக்கலாம். ஒரு டம்ளர் சூடான நீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். சியா விதை அல்லது ஆளிவிதையை சூடான நீரில் கலந்தும் பருகலாம். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்யலாம். உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.

    2. உடற்பயிற்சி:

    தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் ஏதாவதொரு யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். அது சுறுசுறுப்பாக உணர வைக்கும். அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு மன ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    3. புரதம்-நார்ச்சத்து:

    காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. அது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாக அமைந்திருப்பது சிறப்பானது. நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அவை தரும். மதிய உணவுக்கு இடையே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையும் தடுக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

    4. நீர்ச்சத்து:

    எல்லா பருவ காலநிலையிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறி எலக்ட்ரோலைட் சம நிலையின்மை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அடிக்கடி பருக வேண்டும். அவை உடல் எடையை குறைப்பதற்கும் வித்திடும்.

    5. நீச்சல்:

    நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமையும். கோடையில் ஏற்படும் சோர்வை விரட்டி உற்சாகத்தையும் கொடுக்கும். நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது டோபமைன் வெளியீட்டை தூண்டும். தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு இது நல்ல பயிற்சியாகவும் அமையும்.

    6. இரவு உணவு:

    கோடை காலத்தில் இரவு உணவை குறைவாகவே சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானமாகும் விதமாகவும் இருக்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    7. தூக்கம்:

    முறையான தூக்கம் முக்கியம். அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். போதுமான நேரம் தூங்காதது எடை அதிகரிப்பு மற்றும் பசிக்கு வழிவகுக்கும்.

    • தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுகிறது.
    • சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும்.

    சைவ இறைச்சி என்பது தாவர இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து, சில கூறுகள் எடுக்கப்பட்டு, இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பம் மூலம் சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது

    மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியைப் போலவே தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுவதை 'தாவர இறைச்சி' அல்லது 'சைவ இறைச்சி' என்று அழைக்கிறோம். இதன் சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும். தாவர இறைச்சி பெரும்பாலும் சோயா, காளான், பீன்ஸ், கோதுமை ஆகிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

    இறைச்சியின் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்க இதனுடன் மாதுளைப்பொடி, பீட்ரூட் சாறு, சோயா லெகிமோ குளோபின் போன்ற நிறமிகள் கலக்கப்படுகின்றன.

    சமீபகாலமாகவே தாவர இறைச்சியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், தாவர இறைச்சி உடலுக்கு நல்லதா என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் இங்கே...

    மாமிச உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் அசைவ பிரியர்களுக்கும் தாவர இறைச்சி ஒரு மாற்று உணவாகும். விலங்குகளின் மூலம் கிடைக்கும் இறைச்சியின் ருசியையும் இது ஈடுசெய்யும். தாவர இறைச்சியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் நார்ச்சத்து, வைட்டமின் சி. பிளேவனாய்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அதேசமயம் விலங்கு இறைச்சியில் இருந்து பெறப்படும் இரும்பு, வைட்டமின் டி துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர இறைச்சியில் குறைந்த அளவே உள்ளன.

    எனவே தாவர இறைச்சி சாப்பிடும் நாட்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இவ்வாறு சாப்பிடும்போது தாவர இறைச்சியில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மற்ற உணவுகள் சமன் செய்யும்.

    தாவர இறைச்சியில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

     சோயா, காளான், பீன்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக் கிழங்கு. சிலவகை தாவர எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கலந்தும் தாவர இறைச்சி தயாரிக்கப்படுகிறது. எனவே தாவர இறைச்சியை வாங்கும்போது குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் உள்ள புரதத்தை மனித உடலால் குறைவான அளவே உட்கிரகிக்க முடியும். தாவர இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் அது செரிமானம் ஆகும் தன்மையானது.

    சமைக்கும் முறை, சமைப்பதற்காக தாவர இறைச்சியில் சேர்க்கப்படும் பொருட்கள். சாப்பிடுபவரின் செரிமான சக்தி ஆகியவற்றை பொறுத்து மாறக்கூடும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியுடன் ஒப்பிடும்போது. தாவர இறைச்சி சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

    • உணவுகளால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்கிவிடுகின்றன.
    • நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    இப்போது நாம் உட்கொள்ளும் ஃபாஸ்ட்புட் போன்ற உணவுகளால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்கிவிடுகின்றன. இதுவே நாளடைவில் உடல் பருமனாக உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்றால் நெல்லிக்காயை பயன்படுத்துங்கள். நெல்லிக்காய் ஒன்றே போதும் உடல் எடையை குறைக்க மிகவும் நல்ல மருந்து. வாங்க இதனை பயன்படுத்தி எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல் நெல்லிக்காயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள், டானின்கள், பாலிப்பினால்கள், நார்ச்சத்துக்கள், ஹைபோலி பிடெமிக் போன்ற சத்துக்களும் உள்ளது. இது நம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

    பொதுவாகவே நான் அனைவரும் நெல்லிக்காயில் ஊறுகாய் செய்து சாப்பிடுவது அல்லது உப்பு, மிளகாய்தூள் சேர்த்து சாப்பிடுவது என்று சாப்பிட்டிருப்போம். ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை ஜூஸ் செய்து சாப்பிட வேண்டும்.

     இந்த நெல்லிக்காய்களை வில்லைகளாக வெட்டி எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூசாக்கி அதனை வடிகட்டி அப்படியேவும் குடிக்கலாம். அல்லது உப்பு சேர்த்தும் குடிக்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் தேன் கலந்தும் குடிக்கலாம்.

    காலையில் தினமும் வெறும் வயிற்றில் இந்த நெல்லிக்காய் ஜூசை குடித்து வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இதனை நீங்கள் பயன்படுத்திய ஒரு வாரத்திலேயே உங்களால் உணரமுடியும்.

    நெல்லிக்காயில் உள்ள ஹப்போலிபிடெமிக் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் கொழுப்போடு தொடர்புடைய பண்புகளை எதிர்த்து போராடுகிறது. இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறுகிறது.

    • தினை சிறுதானியங்களில் முக்கியமானது.
    • உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள்.

    தினை சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம். இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.

    தினைக்கு உள்ள சிறப்பு மற்ற தானியங்களை காட்டிலும் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. அரிசி, கோதுமை, கேழ்வரகை காட்டிலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கோதுமையில் இருப்பதை விட குறைவாக புரதம் இருந்தாலும் மற்ற பொருட்களோடு கலந்து உண்னும் போது இவை சமன் செய்யப்படுகிறது.

    இன்று குழந்தைகளும் கால்சியம் பற்றாக்குறை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். பெண்களுக்கு இயல்பாகவே மெனோபாஸ் காலங்களில் கால்சியம் பற்றாக்குறை உண்டாகும். தற்போது இது அதிகரித்துவருகிறது. தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாகவே உண்டு என்பதால் இதை அடிக்கடி சேர்த்து வந்தால் எலும்புகள் வலிமை அடையும். பற்கள் உறுதியாகும்.

    வளரும் குழந்தைகளுக்கு தினை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் வளர்ந்த பிறகும் எலும்பு தேய்மானம் உண்டாக்காது. இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண்பார்வையும் கூர்மை அடையும்.

    தேவையானவை:

    தினை மாவு - ஒரு கப்

    பொட்டுக்கடலை மாவு - அரை கப்

    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

    வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்

    நெய் - கால் கப்

    தேன் - கால் கப்.

    செய்முறை:

    தினை, பொட்டுக்கடலை மாவு வகைகளுடன் ஏலக்காய்த்தூள், வெள்ளரி விதை மற்றும் தேன் கலந்து பிசைந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு உருக்கிய நெய் சேர்த்து பிசைந்து எலுமிச்சை அளவுக்கு சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இப்போது சுவையான தினை தேன் உருண்டை தயார்.

    • வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை செய்யலாம்.
    • தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    பொங்கல் செய்யலாம் என்றாலே நம் நினைவில் வருது பச்சரிசி, வெல்லம் தான் ஆனால் சற்று வித்தியாசமாக ஆரோக்கியம் அதிகம் உள்ள தினை அரிசி பொங்கலை செய்யலாம். பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை பொங்கல் செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவாகும் கூட அமையும். இந்த தினை பொங்கல் உங்களை பசியாற்ற வைத்ததுமின்றி உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்க செய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    தினை- 100 கிராம்

    கடலைப்பருப்பு, பாசிபருப்பு தலா- 25 கிராம்

    நெய்- 50 கிராம்

    ஜாதிக்காய் பொடி- ஒரு சிட்டிகை

    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் தலா- ஒரு டீஸ்பூன்

    துருவிய கொப்பரை- 2 டீஸ்பூன்

    வெல்லம்- 150 கிராம்

    செய்முறை:

    தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர்விட்டு குழைய வேகவைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தினை கலவையில் சேர்த்து பொங்கல் பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும்.

    சூடான நெய்யில் ஜாதிக்காய் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்க வேண்டும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

    • புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.
    • புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும்.

    பெரும்பாலான மக்கள் காலை முதல் இரவு உணவு வரை இட்லி, தோசை, ரொட்டி, பூரி, உப்மா, பொங்கல், சப்பாத்தி, சாதம், பிரியாணி போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவையே எடுத்துக்கொள்கிறார்கள். நாம் திருவிழா நேரங்களில் செய்யும் தின்பண்டங்கள், கோவிலில் வழங்கப்படும் புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.

    சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் தான்  என மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வித்தியாசமாக வரகு அரிசியை கொண்டு புளியோதரை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வரகரிசி- ஒரு கப்

    மல்லி (தனியா)- ஒரு டீஸ்பூன்

    எள் - ஒரு டீஸ்பூன்

    வெந்தயம் - கால் ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 10

    புளி - பெரிய எலுமிச்சை அளவு

    வேர்க்கடலை - 5 தேக்கரண்டி

    கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுந்தம்பருப்பு, கடுகு- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- தாளிக்க

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    வரகு அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் அளவு ஒருகப் அரிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். ஒரு வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

    அதன்பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும் போது இறக்கினால். புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை எடுத்து வரகு அரிசி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

    • சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும்.
    • இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி உள்ளது.

    திடீர் பசியைத் தணிக்க விரும்பினாலோ, பயணத்தின்போது சாப்பிட ஆசைப்பட்டாலோ சட்டென்று பலரும் ருசிப்பது வாழைப்பழமாகத்தான் இருக்கும். இதனை எந்த நேரத்திலும் சாப்பிட முடியும். தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்துகிறார்கள். வாழைப்பழம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான ௧௦ காரணங்களையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

    சத்துக்கள்

    எல்லா வகையான வாழைப்பழங்களிலும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் சி, செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இயற்கை சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிற்றுண்டி உணவாகவும் அமைந்திருக்கின்றன.

    மேலும், வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். குறைந்த கலோரிகளே கொண்டிருப்பதும் வாழைப்பழத்தை பலரும் விரும்ப காரணமாக அமைந்திருக்கிறது.

    பொட்டாசியம்

    வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு தேவையான சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் முக்கியமானது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழமாவது தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

    ஆற்றல்

    வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரை விரைவான மற்றும் நீடித்த ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியை கொடுக்கும். உடற்பயிற்சியையும் உற்சாகமாக செய்யத் தூண்டும். மதிய உணவுக்குப் பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதும் நல்லது.

    செரிமானம்

    வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை பேண உதவும். குறிப்பாக 'பெக்டின்' குடல் இயக்கத்தை ஊக்குவித்து செரிமானம் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவிபுரியும். மலச்சிக்கலையும் தடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    வயிற்றுக் கோளாறு

    வயிற்று கோளாறு அல்லது செரிமானம் சார்ந்த அசவுகரியங்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழைப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வாழைப்பழங்கள் எளிதாக ஜீரணமாகும். வயிற்றில் ஏற்படும் வலியை போக்கவும் உதவும்.

    இதய ஆரோக்கியம்

    பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதய நோய் மட்டுமின்றி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

    உடல் எடை

    வாழைப்பழங்களில் கலோரிகள் மட்டுமின்றி கொழுப்பின் அளவும் குறைவு. அவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் அதிக பசியை கட்டுப்படுத்திவிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உடல் எடையை சீராக பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக அமையும்.

    மனநிலை மேம்பாடு

    வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் வைட்டமின் பி6  செரோடோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களின் உற்பத்திக்கு துணைபுரியக்கூடியது. இது மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

    சருமம்

    வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறுவதை தடுக்கும். தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்திற்கு வித்திடும்.

    இயற்கை இனிப்பு

    வாழைப்பழங்கள் ஆரோக்கியமான முறையில் உடலின் இனிப்பு தேவையை பூர்த்தி செய்யக்கூடியவை. ஸ்மூத்தி, பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் வாழைப்பழங்களை சேர்ப்பதன் மூலம் செயற்கை சர்க்கரையின் தேவையை குறைக்கலாம்.

    • அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று.
    • களாக்காயை அப்படியே சாப்பிடலாம்.

    தென்னிந்தியாவில் சுரைக்காய், தாய்லாத்தில் ஈரரம்பா, அங்கத்தில் திராட்சை வத்தல், மலேசியாவில் கெரெண்டா, விஞ்ஞான ரீதியாக கரோண்டா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் களாக்காய், தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

    இது புளிப்பு, இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்ட பொரி பழத்தை ஒத்த வடிவத்தில் இருக்கும். தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் களாக்காய் மரங்கள் அதிகம் வளர்கின்றன. ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று. இதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    களாக்காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், ஜிங்க், காப்பர், ஆன்டிஆக்சிடன்டுகளான பிளேவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டான்னின்ஸ், கரீஸ்சோன், ட்ரை டெர்பினாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. களாக்காயை அப்படியே சாப்பிடலாம். அதை அரைத்து முகத்தில் மாஸ்க் போல் போட சருமத்தின் நிறமிழப்பை குறைத்து. கருந்திட்டுக்களை போக்கி, முதிர்வைத் தடுக்கும். சரும பிரச்சினைகளை போக்க இயற்கை மருத்துவத்தில் களாக்காய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

    களாக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலில் நீரேற்றத்தை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது. மேலும், உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுத்து, உடலின் உள்உறுப்புகளுக்கு தேவையான சத்துக்களும், ஆக்சிஜனும் கிடைக்க உதவுகிறது.

    களாக்காயில் உள்ள புரதச்சத்துக்கள், தலைமுடியின் வேர்க்கால்களை வலிமையாக்குவதுடன், கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் வளர உதவுகிறது. முடி உதிர்வு, முடி உடைவு போன்ற பிரச்சினைகள் வருவதையும் தடுக்கிறது. களாக்காயில் உள்ள புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதுதவிர, சீரற்ற மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து கருப்பை புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்து செயல்படுகிறது.

    களாக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல், செரிமானமின்மையால் உண்டாகும் வாயுத்தொல்லை, எரிச்சல் மற்றும் வலியை தீர்க்கிறது. மேலும், குடலின் இயக்கத்தை சீராக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் இடையூறுகளையும் சரிசெய்கிறது.

    களாக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. நோய்த்தொற்றுகள், கிருமித்தொற்று, வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் உடல் உபாதைகளையும், அழற்சிகளையும் சரி செய்கிறது. களாக்காயில் உள்ள வைட்டமின்கள். பார்வைத் திறன் மற்றும் செவித்திறனை மேம்படுத்துகிறது. மூட்டு எலும்புகளை பலப்படுத்தி, தசைகளையும் வலுப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் உண்டாகும் மற்ற உடல் பிரச்சினைகளையும் சரி செய்ய உதவுகிறது.

    களாக்காயில் உள்ள மெக்னீசியம் மற்றும் ட்ரிப் டோபான் சத்துக்கள் செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, நரம்பியல் மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. ஹேப்பி ஹார்மோன் சுரப்பை தூண்டுவதுடன், மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது.

    • வயிற்றில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும்.
    • வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க உதவுகிறது.

    எப்போதுமே நம்முடைய உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அது வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, வயிற்றில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும். இதனால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கிறது.

    நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் என்று பார்க்கும்போது பச்சைக் காய்கறிகளில் தான் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் வயிற்றில் உள்ள அழுக்குகள் சுத்தமாக வேண்டுமென்றால், பழங்களை உட்கொள்ள வேண்டும். பழங்களிலும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் 3 வகையான பானங்களை 3 நாட்களுக்கு உட்கொண்டால், வயிற்றிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி குடலில் சேர்ந்திருக்கும் அழுக்கு முற்றிலுமாக அகற்றப்படும்.

    வெஜிடபிள் ஜூஸ் - பல ஆய்வறிக்கைகளின்படி காய்கறிச்சாறு வயிற்றை சுத்தம் செய்வதற்கு உதவும் எனப்படுகிறது. இந்த பானம் தயாரிக்க கீரை, தக்காளி, கேரட், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், பாகற்காய் போன்றவற்றை நன்றாக அரைத்து தயாரிக்க வேண்டும்.

    ஆப்பிள் ஜூஸ் - உங்களுக்கு பல நாட்களாக வயிற்று உபாதை இருந்தால், அல்லது வயிறு சுத்தமாக இல்லை என்பது போல் நீங்கள் உணர்ந்தால் தாராளமாக ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். ஆப்பிள் ஜூஸ் குடலில் உள்ள நச்சுத்தன்மைக்கு நல்லது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் வயிற்றில் படிந்திருக்கும் நச்சுக்கள் வேகமாக வெளியேறும்.

    ஆப்பிள் சிடர் வினிகர் - ஆப்பிள் சிடர் வினிகர் என்பது ஆப்பிளில் இருந்து எடுக்கப்படும் ஒரு சாறு தான். இதில் தேவையான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. இது குடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்கி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். 300 மில்லி வெந்நீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து பருகுவது உடலுக்கு நல்லது.

    இந்த மூன்று பானங்களையும் தொடர்ந்து மூன்று நாளைக்கு பருகி வந்தால், வயிற்றில் உள்ள எல்லா கெட்ட சமாச்சாரங்களும் அடுத்த பத்து நாளைக்குள் வெளியேறிவிடும்.

    • மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
    • செரிமான அமைப்பு வழியாகத்தான் நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது.

    மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். பல உணவுகளில் இருந்து இந்த நார்சத்துக்களை நம்மால் பெற முடியும். ஆனால் நமது உடலால் இந்த நார்ச்சத்துக்களை முழுமையாக உறிஞ்சவோ அல்லது ஜீரணிக்கவோ முடியாது. செரிமான அமைப்பு வழியாகத்தான் இந்த நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது. குடல் இயக்கங்களுக்கு ஏற்றதாக நார்ச்சத்து பார்க்கப்பட்டாலும், அதிகப்படியாக இதை எடுத்துக்கொள்வதால் நமக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படும். எனவே இத்தகைய நார்ச்சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால் வரும் பிரச்சினைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

    பொதுவாக நார்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டால், நீரில் கரையக்கூடிய மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் என இரு வகைகள் உள்ளது. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பக்கவாதம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அமெரிக்காவில் ஒரு ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை கணிசமாக குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் நீரில் கரையாத நார்சத்துக்கள் முறையாக உணவுடன் செரிக்கப்படுவதில்லை. இவை நேரடியாக இரைப்பை குடல் வழியாக பயணித்து மலத்தில் கலக்கிறது. இவை மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.

    நீங்கள் நார்ச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்க்க விரும்பினால், பருப்பு வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள், விதைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் நார் சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால், சில எதிர்மறை பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.

    அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் உட்கொள்வதால் சிலருக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாயு, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    மேலும் இவை துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சில தாது வகைகளை உறிஞ்சுவதில் சிக்கலை உண்டாக்கலாம். எனவே இவை இரைப்பை குழாயில் சேதத்தை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளை உறிஞ்சுவதில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். சில மருந்துகளின் செயல் திறனையும் இது பாதிப்பதாக சொல்லப்படுகிறது.

    அதிகப்படியான நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அதிகப் படியான தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளை எடுப்பதை தவிருங்கள். நடைப்பயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறிப்பாக மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

    • மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ரகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் கிலோவிற்கு ரூ. 12.50-க்கு வழங்கப்படுகிறது.
    • கருடன் சம்பா ரகம் பச்சையையும் குறைவாக உள்ள அரிசி வகைகளில் ஒன்று.

    பேராவூரணி:

    சேதுபாவசத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் முதன் முறையாக பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனை விவசாயிகள் வாங்கி பயன்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சேதுவா சத்திரம் வட்டாரத்தில் உள்ள குருவிக்கரம்பை மற்றும் பெருமகளூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதை ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கருப்பு கவுனி ராகங்கள் 50 சதவீதம் மானிய விலையில் கிலோவிற்கு ரூபாய் 12.50 க்கு வழங்கப்படுகிறது.

    மாப்பிள்ளை சம்பா 100 கிலோ, கருடன் சம்பா 100 கிலோ, கருப்பு கவுனி 200 கிலோ போன்ற ரகங்கள் இருப்பில் உள்ளது.

    தேவைப்படும் ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் கார்டு நகலுடன் வேளாண்மை உதவி அலுவலர் பரிந்துரையின் பேரில் வட்டார வேளாண்மை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    இதில் மாப்பிள்ளை சம்பா நீண்டகால சம்பா பருவரகம், 155 முதல் 160 நாள் வயதுடையது. இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் கொண்டது.

    சர்க்கரை நோயாளிகள், வாய் அல்சர் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    கருப்பு கவுனி ராகம் அதிக மருத்துவ குணம் கொண்டது. 155 நாள் வயதுடையது.கருடன் சம்பா ரகம்பச்சை யையும் குறைவாகஉள்ள அரிசி வகைகளில் ஒன்று. ரத்த சோகை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்க ளுக்கு உணவாக சாப்பிட ஏற்றது. வைட்டமின், தாது க்கள் நிறைந்த அரிசி வகையாகும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ×